Monday, September 3, 2012

மாத்தி யோசி!

 ஒவ்வொருத்தரும் தங்கள் கருத்தை, மத்தவங்களுக்கு பிடிக்குதோ..இல்லையோ போகுற போக்குல சொல்லிட்டுப் போறாங்க!அதை கொஞ்சம் மாத்தி யோசிச்சதுன்னால, வந்த வினைங்க இது! வேணும்னா ..நீங்களும் இதிலிருந்து மாத்தி யோசிங்களேன்!

இப்படித்தான்  சகோதர யுத்தம் பத்தி கலைஞர் அய்யா..பேசப்போயி, நம்ம நெடுமாறன் அய்யா..ஆரம்பிச்சு வெச்சதே நீங்கதான்னு பத்திரிக்கையில பேட்டி கொடுத்துட்டாரு!

சகோதர யுத்தம் நடந்தது உண்மைன்னு நெடுமாறன் ஒத்துக்கிட்ட மாதிரி அல்லவா ஆயிடுச்சு.!

இலங்கை விஷயத்துல கலைஞரை கும்முறது அல்லாருக்கும் அல்வா சாப்பிடற மாதிரி ஆனதினால..சரித்திர மேற்கோள் எல்லாம் காட்டி, இவரும் தாளிச்சிருக்கார்..!
அதுல பாருங்க..கலைஞர்
சொன்னதுனால தான் சகோதர சண்டை ஆரம்பிச்சதுன்னா..கலைஞரை இனத்தலவர்ன்னு ஏத்துக்கிட்ட மாதிரி அல்ல ஆகுது.? சண்டைய ஆரம்பிச்சு வெச்சவருக்கு முடிச்சு வைக்கத் தெரியாதா...வந்து பஞ்சாயத்து பேசி தீர்த்திருக்கலாமே?

இவரு சொல்ற தேதிக்கு முன்னாலயே, மெட்ராஸ் பஜார் வீதியில ஒருத்தர் மேல ஒருத்தர் கொளுத்திப் போட்டுக்கிட்டது....கலைஞர் அய்யா சொல்லிக் கொடுத்துங்களா நெடுமாறன் அய்யா?


பேராசிரியர் அன்பழகன் அய்யாக வேற கோபமாகி..எங்க ஆட்சியில தினமும் 2 மணிநேரம் தான் வெட்டு..வெளியில கரண்டு வாங்கி எப்படி சமாளிச்சோம்?அதுக்கே (கொ)கத்துனீங்க! இப்ப 12 மணிநேர வெட்டுக்கே வாய் மூடிமவுனியா இருக்கிறீங்களேன்னு..மக்கள் மேல கோவப்பட்டு இருக்காரு!

 ஆட்சி ஆரம்பிக்கும்போது அஞ்சாயிரமா இருந்த மின்வாரியக் கடன் முடியும்போது அம்பதாயிரம் கோடியாயிடுச்சே! வருஷம் வட்டியே அஞ்சாயிரம் கோடி கட்டணுமே! வட்டிய கட்றதா..கடனக் கட்றதா..புது உற்பத்திய பெருக்கிறதா..இப்படி நட்டாத்துல உட்டுட்டுப் போய்ட்டீங்களே..நியாயமா?அதெல்லாம் இருக்கட்டும்..அந்த கொண்டைக்கார ஆட்சிக்காரர் கிட்ட பேசி..நம்ம அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி வாங்கிக் கொடுங்க..அது போதும்!

மாத்தி யோசி!

உலகத்துலேயே சுலபமான வேலை எதுன்னு சொல்ல வேண்டியதில்ல..வெண்ணைய வெட்றது! அதவிட சுலபமான வேலை இருக்கு..அதான் 100நாள் வெட்டிவேலைத் திட்டம்!
அந்தகாலத்துல வறட்சி,வெள்ளம்,பூகம்பம் வந்தா..மக்களுக்கு சும்மா அரசுப் பணத்தைக் கொடுக்கக்கூடாதுன்னு "நிவாரண வேலை"ன்னு சொல்லி சின்ன சின்ன வேலைகளைக் கொடுத்து,சம்பளம்னு கொடுப்பாங்க..கொஞ்ச நாளைக்கு!

இந்த ஓட்டுவங்கி அரசியல்..ஜனங்களை ரொம்ப பதமா..இதமா கவனிச்சுக்கிது..இந்தமாதிரி திட்டங்கள்னால! எந்த ஒரு வேலைக்கும் குறைந்தபட்ச ஊதியம், இன்னிக்கு ரூ200ன்னு ஆயிடுச்சு..இந்தத் திட்டத்தினால வந்த பொதுப்பலன்..நற்பலன்னு சொல்லலாம்!

மழைகம்மியானதால..வேலை கிடைக்காதுன்னு முடிவு பண்ணி..100 நாளை 150ன்னு ஜாஸ்தியாக்கலாமான்னு பேச்சு ஓடிட்டு இருக்கு! ஏற்கெனவே..விவசாய வேலை இருக்கும்போது ஆளுங்க அரசு வேலைக்குப் போய்டறாங்க..ஆள் தட்டுப்பாடு..!
இன்னம் விவசாயமே செய்ய வேண்டாம்னு அரசு சொல்ற மாதிரியில்ல இருக்கு? எங்க பஞ்சமோ அங்க மட்டும் உசத்திட்டு, மத்த இடத்துல அப்படியே வெச்சுக்கலாமே!

இந்த அரசு 150நாள் பிக்னிக்கை ரோட்டோரத்துல வெக்கறதுக்கு பதிலா..விவசாயக் காட்டுல வெச்சுக்கிட்டா..விவசாயமும் நல்லா நடக்குமுல்ல..என்ன நான் சொல்றது..! மலையாள சேட்டன்க ஏற்கெனவே இப்படித்தான் பண்றாங்களாம்!


அரசு ரூ132,விவசாயி ரூ132 கொடுத்தா..அடா அடா..கிராமப்புற பொருளாதாராம் பிரமாதமா..பறக்குமே..செய்வீகளா..?

அம்மாவுக்கு ஐடியா இருக்குன்னு சொல்லிக்கிறாங்க..விரைசலா ஆர்டர் வரோணுமே!


அஸ்ராகார்க் எஸ்பி மூணே மாசத்துல திருப்பூரை விட்டு மாத்திட்டீங்க..நேர்மையான அதிகாரிங்க,ஆர்வக் கோளாறுல சின்னசின்ன குளறுபடிகள் செய்யறதுதான்..ஒரு வருஷமாவது ஒரு இடத்துல போட்டிங்கன்னா..கொஞ்சம் ஊரு சுத்தமாகும்.

மறுபடியும் சந்திப்போமுங்க! வணக்கமுங்கோ!













6 comments:

  1. நியாயமான கருத்துக்கள்! சிறப்பான பகிர்வு! நன்றி!
    இன்று என் தளத்தில்
    தளிர்ஹைக்கூ கவிதைகள்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html

    ReplyDelete
  2. செய்திகளும் அதற்கான விமர்சனங்களும் அருமை
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து

    ReplyDelete

  3. நண்டு @நொரண்டு -ஈரோடு Sir!

    வருகைக்கும் கருத்துக்கும்(?) நன்றி!

    ReplyDelete
  4. s suresh sir!

    வாருங்கள் நண்பரே!

    ReplyDelete
  5. Ramani Sir!

    மெருகேற்ற முயற்சி செய்கிறேன்! நன்றி!

    ReplyDelete