Thursday, November 29, 2012

காதலில் ஏது கள்ளம்..களவுதானே காதல்!

 பிரமிக்கிறோம்...
ஆனந்த அலை பரவுகிறது..
மீண்டும் அண்மைக்குத் தூண்டுகிறது...
ஆம்...
நாம் காதலிக்க ஆரம்பித்துவிட்டோம்!


காதல் ஒரு அழகான வார்த்தை..
காதலைப் போலவே!


காதலுக்கு இருட்டு தேவையில்லை...
வெளிச்சமே காதலைக் கொண்டுவரும்!


 காதலுக்கு ஒலி தேவையில்லை....
கண்கள் மட்டுமே போதும்!


காதலுக்கு அறிமுகமும் சிலசமயம் தேவைப்படும்..
அது  இங்கு பாசாங்கு எனப்படும்..!






காதல் என்பது அன்புஇல்லை..பாசமாகாது..
வேணும்னா பிரியம்னு வெச்சுக்கலாம்!



காதல் வயதறியாது..
ஈர்ப்பையே அறியும்!


காதல் புரிந்து கொள்ளாது..
ஆனால் காதல்காரரைத் தேடித் தவிக்கும்!


ஒருமுறை மட்டும் மலர்வதில்லை காதல்..
ஓராயிரம்முறை மலரும் ஆண்களுக்கு மட்டும்!
ஒரு'முறை'யோடு வருவது மட்டும் காதல் இல்லை..!
முறை மாறுவதும் காதலாகும் இங்கு!


காதல் கைதொடும்..தோள்படும்..பெரும்பாலும் படர்வதில்லை!
காதல் படர்ந்தால் கா..ஆமாகிவிடும்!

காதலில் ஏது கள்ளம்..களவுதானே காதல்!

காதல் கண்களில் பிறந்து ..
பழக்கத்தில் வளர்ந்து
காலத்தில் மலர்ந்து
கல்யாணத்தில்
மணக்கிறது..
அன்றே மரிக்கிறது
காமம் பிறக்கிறது..
குடும்பம் தழைக்கிறது!


காதல் ஜெயிக்கும்னு ..ஜெயிக்கணும்னு
சொல்லிக் கேள்விபட்டிருப்பீங்க..!
ஜெயிக்கிறதுன்னா..கல்யாணத்துல முடியறது!
பெத்தவங்க சம்மதத்தோடோ..இல்லாமலோ!


காதல் தெய்வீகமானதாம்...ஆம்
காதலிப்பது பிறர் கண்களுக்குத் தெரியாதவரையில்!


காதலில் ஏது கள்ளம்...
களவுதானே காதல்!

காதல் என்பது உறவற்றது...
உறவானால் அங்கு பெயர் மாறிவிடும்!

காதலில் ஆபத்தில்லை...பிரியம் மட்டுமே!
காதல் இங்கும் எங்கும் என்றும் புனிதமானதே...!

காதல் என்றும் வாழும்..வாழ்க!









Friday, November 16, 2012

பராசக்தியில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டுமா?


  ஜனங்க நாளுக்கு நாள் ரொம்ப தொட்டாசிணுங்கியா மாறிட்டு வர்றாங்க..!இதுதான் பரிணாம வளர்ச்சியான்னு கேக்கணும்னு தோணுது..! ஆனா பாருங்க இந்த வார்த்தை தான் கைஇடுக்கிலெ  சிக்கிட்டு..எழுத வரமாட்டீங்குது !

மதம்.., சாதி..,மொழி ..அபிமானம் ரொம்பவே ஜாஸ்தி ஆயிட்டு! பெட்ரோல் குண்டுல வந்து நிக்குது..! ஒத்த சினிமாவ உருப்படியா உடமாட்டிங்குது! பதிவு..கீச்சுல திட்டிக்கிறாங்க..குழாயடி சண்டை வேற..ஜெயிலுக்கு அனுப்பிச்சு பவரக் காட்றாங்க..!

இஷ்டத்துக்கு பேசுறாங்க..எழுதுறாங்க..சினிமா காட்றாங்க..! அது சுதந்திரம்..பேச்சுரிமைனு சொல்லிக்கிறாங்க..! உடனே எதிர் கோஷ்டி..க்ருப்பா வந்து பொரண்டு உருண்டு ரகளை செஞ்சு..அவங்களோட போராட்ட உரிமையை டெமான்ஸ்ட்ரேட்' செஞ்சுக் காமிக்கிறாங்க!

பலமான க்ரூப் அப்போதைக்கு ஜெயிக்குது..!அடிவாங்குனவங்க காயத்தையே உத்து உத்து பாத்து கிட்டு வெறியேத்திக்கிறாங்க..! சந்தர்ப்பம் வர்ற வரைக்கும் கருவிட்டு இருக்காங்க!

காரணம் நம்ம தேசத்தோட பல வண்ணக் (வர்ணாசிரம) கலாச்சாரம் தானுங்க!

பராசக்தியில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டுமா?


இனிமே இங்க பொதுவா கூட ஒரு நியாயத்தை ..யோ'சிக்காம சொல்லமுடியாது போல!

கதையிலே..பாட்டுலே..படத்துலே பேரு வைக்கிறதுக்கு எல்லாம் சண்டைக்கு வர்றாங்க! நாகப்பா..நாகலிங்கம்..மாரினு நம்பியார் எத்தனை தடவ கூப்பிட்டு இருப்பாரு!

கதாப்பாத்திரத்துக்கு பேரு வைக்கிறதை கண்காணிக்க தனியா சென்ஸார் போர்டு அதிகாரிகளைப் போடணும்..!

திரைக்கதை மொதல்லயே எழுதிட்டு ஒரு ஆயிரம் காப்பி எடுத்து..எல்லா மத..சாதி..கட்சி..,மொழி..இனம்..,சங்கம்..அரசு ஆபீஸ்களுக்கு கூரியர் செஞ்சு "என்னோசி" வாங்கிட்டுத்தான் வேலையத் தொடங்கணும்..அதுக்குள்ள உனக்கு வயசாயிடுமா!..உருப்படியா  பொழைக்கணுமா .வேணாமா?

தேனிகய்னா ரெடி..தெலுகு படத்துனால..அந்த ஊர் பிராமணர் கொதிச்சுப் போய் போராட்டம் எல்லாம் செஞ்சிருக்காங்க..இங்க துப்பாக்கி பட்ற பாடு எல்லாத்துக்கும் தெரியும்!


இன்னொரு அரங்கேற்றமோ ..சாவித்திரியோ... பாரதி கண்ணம்மாவோ, அலைகள் ஓய்வதில்லையோ..தட்டத்தின் மறையத்து வோ..இனி எடுக்கப்படும் சமீப சாத்தியம் ஒரு கேள்விக்குறியே!

 கொடூர..மோசமான கேரக்டர்களுக்கு இனி எந்தப் பெயர் வைத்தாலும் எதிர்ப்பார்கள்..! காண்பிக்கப்படும் சம்பவங்கள், தோரணைகள், பழக்கவழக்கங்களில் எந்த மத..சாதி சாயல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் திரைத் துறையினரும்..கதாசிரியரும்!

ஜெயம் படத்தில் மோசம் போகும் பெண்பாத்திரத்திற்கு " அலங்காரம்"னும்..கலகலப்பில் மொக்கை வில்லனுக்கு ' வெட்டுப்புலி"னும்  பேரு வெச்சமாதிரி..புயலுக்கு ஆப்பிரிக்க பேரு வெக்கறமாதிரி ரோசணை செஞ்சுத்தான் வைக்கணும்!

வைக்கப்புல்லு..மண்ணாங்கட்டி, திருகாணி,,தலைகாணி..,திருவாத்தான்..,வரிப்புலி..,வண்டுருட்டி..,மாதிரி பேரு வெச்சிங்க..தப்பிச்சீங்க!


திரைப்படங்கள்.. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசினால் நியமிக்கப்படும் தணிக்கைத்துறை சான்று பெற்று வரும்போதே அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்றுதானே அர்த்தம்!
மறுபடியும் ..உணர்வுகளின் அடிப்படையில் மாற்றம் கோருவதோ..நீக்கக் கோருவதோ..கல்ச்சுரல் போலீஸிங்..என ஆகிவிடுமே!


 இந்நிலை தொடர்ந்தால்..வேறு வழியில்லை..எல்லாக் கோட்டையும் அழிங்க..முதல்ல இருந்தே நான் 50 பரோட்டா சாப்பிடறேன் கதையாக...பராசக்தியில் இருந்துதான் ஆரம்பிக்கணும்! அந்தப்படத்தில் வரும் மத சம்பந்தமான வசனங்களை  நீக்குவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் ..சுத்தப்படுத்தலை!

என்னவோ போங்க..! ஆனா ஜாலியா எடுத்துக் கோங்க..!













Monday, November 5, 2012

இந்த தீபாவளிக்கு என்ன ஃபேஷன்?

ஃஃபேஷன் பத்தி பேசுனாலே அது பெண்களை மட்டுமே குறிக்கும் சொல்லாக மாறி விட்டது..அதிரடி ஸ்டைல்..டிசைன் மாற்றங்கள் மட்டுமே அவர்களை திருப்தி செய்யும்!

 விளம்பரங்கள் அனைத்தும் அவர்களையே குறி வைத்து எடுக்கப்படுகின்றன! அதுவும் அப்போதைய 'செலிபிரிட்டி நங்கையரை' வைத்து..!
 

பாட்டியாலா டிசைன்கள்!



ஆண்கள் பாவம்..ஜீன்ஸ்..கட்டம் போட்ட சட்டைலேயே இன்னும் திரியறாங்க..இந்த வருஷமும்..எந்த மாற்றமும் இல்லை..!
பசங்களோட இந்த வருஷம் கலர் ஆல்மோஸ்ட் பேண்டுல டார்க் கிரே..கறுப்பு..இப்படித்தான் போகுது..!
செக் ஷர்ட் இன்னும் ஒரு வருஷம் தாங்கும் போல..! 


செருப்பு போடறவன் எல்லாரும் கிராமத்தானுங்கன்னு நெனப்பு பரவிடுச்சு..! 
கேஸுவல் ஷூ கூட..டார்க் வண்ணத்துல தான் போடறாங்க!
ரெடிமேட் ஐட்டங்கள் தான் இளசுகளின் சாய்ஸ்..! கல்யாணத்துக்குப் பின்னாடி உடம்பு சைஸ் கூடக்குறைச்சல் ஆணவங்க தான்..பாவம்! துணி எடுத்துதான் தைக்கணும்! தையல் கூலி எல்லாம் எக்கச்சக்கம்!   பெரிய டைலருக..பேண்டுக்கு ரூ500ம், ஷர்ட்டுக்கு ரூ350ம் சார்ஜ் செய்யறாங்க! ஜாக்கெட்டுக்கு ரூ200 ஆயிடுச்சு!


பொதுவா..சில உஷார் பார்ட்டிங்க..ஆடித்தள்ளுபடியிலேயே தீபாவளிக்கும் சேர்த்து துணி எடுத்து வெச்சுக்கிறாங்க..காரணம்.சீப்பா வாங்கிறாமன்னு தான்!

இந்த வருஷம் தீபாவளிக்கு சரியா..45 நாளைக்கு முன்னாடி தான் துணிக்கடைகளுக்கு புது சரக்கு வந்திருக்கு! வந்ததெல்லாம் அதிர வைக்கிற " பளீச் " வண்ணங்கள் தான்!

பஞ்சு மிட்டாய் ரோஸ்..பிரைட் பச்சக்கிளி கலர்..மலைக்க வைக்கும் மஞ்சள்..இது தான் இந்த வருஷக் கலர்கள்!
காட்டன் ரகமெல்லாம் 25 சதமும், செயற்கை இழை துணிகள் 15 சதமும்..பட்டு  20 சதமும் விலைகூடி இருக்குது! மின்வெட்டினால தொழில்கள் எல்லாம் சுணங்கி போனதும் ..விலை ஏற்றதுக்கு ஒரு காரணம்!

Rosy Pink Faux Georgette Printed SareeGreen Faux Georgette Printed SareeShaded Orange Faux Georgette Printed Saree

Yellow Baluchari SareeChanderi Cotton


 போன வருஷம் துணிக்கடைய விட எலக்ட்ரானிக்ஸ் மோகம் அதிகமா இருந்தது..இந்த வருஷம் துணிக்கடைக நல்லா ஓடுது!

பெரிய..அகலமான டிவி வாங்கறதுலயும்..மெட்ராஸ்ல டிஜிட்டல் டைரக்ட் கனெக்ஷன்லேயும் மக்கள் ஆர்வமா இருக்காங்க..!
செல்போன்..கேமராவும் நல்லாபோகுது!

பட்டாசு தான் ரொம்ப விலை கூடிருச்சுன்னு சொல்றாங்க! என்ன பட்டாசு வாங்கோணூம் ங்கிறத விட ..எவ்வளவு ரூபாய்க்கு வாங்கப் போறம்னு மொதல்லேயே முடிவு பண்ணிக்கிறது  புத்திசாலித்தனம்! சரவெடி..புஸ்வானம்..சங்குசக்கரம்..மத்தாப்புன்னு முடிச்சிக்கிறது நலம்! நாம விடற ராக்கெட்டை விட மத்தவங்க விடறது தான் நல்லாத் தெரியும்!

ஒரு கூட்டம் பல்ஸர்..யமஹான்னும், சிலர் நேனோ..,ஆல்டோ 800ம்னும் திட்டம் போடறாங்க! டிசம்பர்ல வண்டிக கொஞ்சம் எளிதா கிடைக்கும்..வருஷக்கடைசின்னு பார்க்காதவங்க அப்போ வாங்கிக்கலாம்!

கூட்டுக் குடும்பம் குறைஞ்சதினாலே..பட்சணம் எல்லாம் கடையிலதான் வாங்குறாங்கோ..! முடிஞ்சவரைக்கும் கடைப் பலகாரம் ஒதுக்கிடுங்க..செஞ்சு நாளாயிருக்கும்..விலையும் அதிகமா இருக்கும்! ஆச்சி குளோப்-ஜாமூன் மிக்ஸ் சூப்பரா இருக்கு..டிமாண்ட்லே ஒடிட்டு இருக்கு! காரத்துக்கு முறுக்கு அல்லது ஓலைமுறுக்கு செஞ்சிடுங்க..ரொம்ப ஈஸி! வயிறும் கெடாது!

தீபாவளி அன்னிக்கு கதவ சாத்திட்டு கன்றாவி நிகழ்ச்சிகளை பாக்காம..சொந்தங்களை..நண்பர்களை கூப்பிட்டு பேசுங்க..பக்கமா இருந்தா போயிட்டு வரலாம்.! அடுத்த மத ஃபிரெண்டுகளுக்கு பட்சணம் கொடுங்க..நீங்க மட்டும் கேக்கு, பிரியாணின்னு அவங்ககிட்ட வாங்கி சாப்பிடறீங்க இல்ல!




எல்லாருக்கும் இனிய 2012 தீபாவளி வாழ்த்துக்கள் !











Saturday, November 3, 2012

ரசிகனே காதலன்... காதலனே கவிஞன்!

 இயந்திரத்துக்குள் வருவதில்லை..
ரசனை!
இதயத்தில்..இதயத்துள் மலர்வது..
ஈர்ப்பு!
ரசனையும்  ஈர்ப்பும்  பிரசவிப்பது
அன்பு!
காதலாக வளர்ப்பது..
கவிதை!

ரசிகனே காதலன்...
காதலனே கவிஞன்!


கவிதை எழுதா காதலன் ஏது?
கவிதையை விரும்பா காதலும் ஏது?



ரசிகனே காதலன்... காதலனே கவிஞன்!


எழுதுவது புதுக்கவிதையாகினும்...கவிதை
எழுதுவது இங்கு மரபாக' வைக்கப்படும்!

காதலன் தான் கவிதை எழுதுவானோ..காதலி?
அவளுக்குத் தெரியும்..கவிதைகள்
பொய்யென்று!
அவள் பொய்யுரையாள்..
ஆனால் தன்மெய் போல் ரசிப்பாள்!


சில ஆண்டாள்களும் இங்கு உண்டு!
ரங்கன்கள் அதிகமில்லை!


கவிதைகள் சற்று நீண்ட குறுஞ்செய்திகள்!
எழுதியவர் மறந்து போகலாம்..!
காகித்தில் பேனா மையின் கறை போல
அன்புநெஞ்சத்தில் கறை கொண்டிருக்கும்...!



புதுக்கவிதை தான் இனிக்கும்..
அது முடிவில்லா தொடர்கதை..!
புதுப்புது கவிதைகள் முதலில் இனிக்கும்
ஒரு கட்டத்தில் இனிமையே விலகிடும்!


கவிதை எழுத வேண்டும்
என்பது கட்டாயமில்லை..
கண்களால் சொன்னாலும்
புரிந்து கொள்ளப்படும்..
நினைவில் ஏற்றிக் கொள்ளப்படும்!