Wednesday, June 30, 2010

மகிழும், நெகிழும் கோவை!

அரசியலாரால் திட்டமிடப்பட்டு , அதிகாரிகள்/அலுவலர்களால் செயல்படுத்தப்பட்டு ,விருந்தினர் வருகையால் சிறப்பிக்கப்பட்டு, கோவை மாநகரம் அழகுட்டப்பட்டு, வெள்ளமென திரண்ட மக்களால் வெற்றி கரமாக நடந்தேறியது செம்மொழி மாநாடு!

பல காலமாக ஒதுக்கப்பட்ட போதிலும், குண்டு வெடிப்பில் காயப்பட்ட போதிலும், உழைப்பால் உயர்ந்த கொங்குத் தலைநகர் கோவை, தனக்களிக்கப்பட்ட பரிசால், பெருமிதப்பட்டு,உவகையுடனும்,அழகுடனும் தெரிகிறது!

கோவையில், மக்கள் திரளாக ஒன்று கூடி, மகிழ்ந்ததும், நெகிழ்ந்ததும் இதுவே, முதன்முறை! திரள் கூட்டம் தொடர்ந்து அலை மோதுவது, கண் கொள்ளாக் காட்சி!

எம் மக்களின் நீங்கா நினைவில், செம்மொழி வெற்றி மாநாடு!