Thursday, March 14, 2013

மாணவர் போராட்டத்தை ..கூத்தாடிகள் கண்டுகொள்ளவில்லையே?

 கூத்தாடிகள் எனும் பதம் கொச்சையானதாக இருக்கலாம்..ஆனால் அது ஒவ்வொரு முறையும் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கலைஞர்கள்..குறிப்பாக திரைத்துறையைச் சார்ந்தவர்கள்..செயல்படும்போது அல்லது எந்த செயலிலாவது ஈடுபடாமல் இருக்கும் போது..அவர்களை குறை சொல்வதற்காக..ஏவப்படும் பதம் !


கூத்து என்பது பாடிக் கொண்டும்..பாவனை செய்து கொண்டும்..கதை சொல்வது..! இது முதலில்..மந்தைகளிலும்,சந்தைகளிலும் ..மக்களின் நடுவே "ஓரங்க நாடகமாக" நடத்தப்பட்டது..! பிறகு கொட்டகை மற்றும் திறந்தவெளி மேடைகளில் ஏற்றப்பட்டது..கூத்தாடிகளும் நடிகர்கள் எனப்பட்டனர்..!
பின்னர் திரைக்குப்பின் ஒளிந்து கொண்ட பின்னர்..இருள் கொட்டகையில் மட்டுமே அவர்கள் தென்பட்டதால்..நட்சத்திரங்களாயினர் !


தமிழக மக்களுக்கு அடிக்கடி காணக் கிடைக்காததால்...திரைக் கலைஞர்கள்.."கடவுளா"கினர்..கொண்டாடப்பட்டனர்.!

எதைத் தின்றால் பித்தம் தெளியும்..எதை உபயோகப்படுத்தினால் நமக்கு ஆட்சி கிடைக்கும் ..என அலைந்து கொண்டிருந்த பிழைப்பு அரசியல்வாதிகள்..மக்களின் கவர்ச்சி மோகத்தை கணக்கிலிட்டு..அரசியலில் சினிமாக்கலைஞர்களை நுழைத்தனர்..!


அது ஆயிற்று..சற்றேறக்குறைய அறுபது ஆண்டுகள்..சற்றேனும் குறையவில்லை..சினிமா மோகம் ! இனியும் அரை நூற்றாண்டு காலம், இது தொடருமோ எனும் நிலையே.காணப்படுகிறது !




திரைகலைஞர்களில் எதிர்கால திட்டங்களோடு சிலரும், கட்டாயத்தால் பலரும் ..மக்களின் பிரச்சனைகளுக்கு..குரல் கொடுப்பதும்..போராட்டங்களில்,போலி ஆதரவு கொடுத்து..கடனே என்று கலந்து கொள்வதும்..கண்கொள்ளாக் காட்சி மட்டுமல்ல..ரசிக சிகாமணிகள் பெருமைபட்டுக் கொள்ளும் அற்பவிஷயங்களும் கூட !

தற்போது ஈழவிடியல் வேண்டி நடை பெற்று வரும் இந்திய நடுவண் மற்றும் இலங்கை அரசுகளுக்கு எதிரான ..மாணவர் சமுதாய தொடர் போராட்டங்களுக்கு..திரைக்கலைஞர்கள் எந்தவித ஆதரவும் தராமல் "சிவனே" என்று இருப்பதால் ..கடுப்பான..ரசிக சிகாமணிகள்..தங்கள் கடவுள்களை.." கூத்தாடிகள்" என வர்ணித்து..இணைய சமூகங்களில் ..பொங்கி,கும்மி அடித்து..கழுவி ஊற்றி வருகின்றனர் !


கலைஞர்கள் பொதுவாக..எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்..தங்கள் துறைப் பிரச்சனைகளுக்கே..அவர்களால் தீர்வு காணமுடியாமல்.எங்கெங்கோ..அடித்துபிடித்து..அலைந்துதிரிந்து கொண்டு..தங்கள் பிழைப்பை நடத்தி வருகின்றனர்..!

அவர்கள் வந்து "குரல்" கொடுக்கவில்லை என புலம்பித் திரிகிறது ஒரு கூட்டம்! !


சமுதாயத்தின் ஒரு அங்கம் தான் "திரைக் கலைஞர்கள்" அவர்களுக்கு கிடைத்திருக்கும் குறைந்த அளவிலான..நட்சத்திரவெளிச்சத்தில்..நடித்து அவர்கள் பொருள் தேடி செல்லட்டும் ! அவர்களை நாம் போராட்டங்களுக்கு அழைக்க வேண்டாம்.. அவர்கள் முன்னெடுத்து சென்று தான் நாம் போராட வேண்டும் என்ற நிலை இனி வேண்டாம் !

அரசியல் ஆதரவே வேண்டாம் எனும்போது..கூத்தாடிகள் ஆதரவு நமக்கெதற்கு?

கூத்தாடிகள் எனப்படும் திரைக்கலைஞர்கள் நம்மை மகிழ்விக்க மட்டுமே...அறிவுறுத்தலுக்கோ, வழிநடத்தவோ அல்ல என்பதை நினைவில் ஏற்று..!


இனியும் நமக்கான ..நம்மை ஆளும் தகுதி வாய்ந்த தலைவர்களை..திரைக் கொட்டகையின் இருளில் சென்று தேடும் தன்மை வேண்டாம் !

இருளில் தேடினோம்..விடியவே இல்லை !