Saturday, November 23, 2013

சாராயமும் புகையும் எண்ணெயுமே ...ஸ்வீட் ராஸ்கல்ஸ்!

உலகின் இரண்டாவது புராதானத் தொழில்... சாராயக் கண்டுபிடிப்பு தான் ! புகை கூட நெருப்பு கண்டு பிடிச்சதுக்கு அப்புறம் தான் வந்திருக்கும்!

அழுகுன பழக்குவியல்களில், தென்னைப்பூக்களில் இருந்து நொதிச்சு வந்த ரசத்தைக் ருசித்துப் பார்த்ததில் இருந்து சாராயம் பிறந்து விட்டது!

சோமபானம் சுராபானம் எல்லாம் புராண மதுபானங்கள்...
கள்ளு சாராயம் எல்லாம் புராதன பானங்கள்!

நம்மாளுகளோட கண்டுபிடிப்பை பாருங்க..!

கரும்பு மொலாஸஸில் இருந்து தயாரிக்கப்படும் ரம் போன்ற வகைகள் சாப்பிட்டால் "சுகர்" வந்துடுமாம்!
மால்ட்டில் இருந்து பெறப்படும் விஸ்கி சாப்பிட்டால், கொலஸ்ட்ரால் வருமாம்!
ஜின்.,வோட்கா சாப்பிட்டா..அல்ஸர் வருமாம்!
திராட்சை ரசமான "பிராந்தி" சாப்பிட்டா மட்டும் இதயத்துக்கு நல்லதாம்!

சாராயமும் புகையும் எண்ணெயுமே ...ஸ்வீட் ராஸ்கல்ஸ்!


எல்லாமே கெடுதல்கள் தான்...ஆல்கஹால் தான்! விலை கம்மியான சரக்குகளில் தரம்குறைவான ஆல்கஹால் கலந்திருக்கும் அவ்வளவுதான்!

மது குடிக்க வேண்டாமுனு சொல்ல வரலை! சொன்னாலும் உதைக்க தான் வருவாங்க! எப்படி டேமேஜ் கம்மியா, சாப்பிடலாமுனு சில டிப்ஸ்!

1. கூட்டம் சேர்ந்துட்டு அடிப்பதைக் குறையுங்கள்
2. ஒரு சில நண்பர்களுடன் மட்டுமே "குடிநட்பு" வெச்சுக்கோங்கோ
3. குறைஞ்ச பட்சம் 15 நாளுக்கு முன்னாடி சியர்ஸ் சொல்லாதீங்க!
4. நல்லா "டைலூட் செஞ்சுக்கோங்கோ! 1:4
5. ஒரு மணி நேரத்துக்கு ஒரு லார்ஜ் தான், 
   லிவர் ஃப்ரெண்ட்லி ஆல்கஹால் ட்ரிங்கிங் !\
6. மேக்ஸிமம் 3 லார்ஜ்கள், ஒரு நாளைக்கு!
7. முட்டை வெள்ளை, பாதாம், பிஸ்தா, சாலட்கள்,  
   பழங்கள் சைட் டிஷ் என சாப்பிடுங்கள்!

ஆல்கஹால் ஒரு "ஸ்ட்ரெஸ் பஸ்டர்" தான்! ஆனால், அதிகமாச்சுனா லிவரை..ஹார்டை பர்ஸ்ட் செஞ்சிடும்!

போன தலைமுறையை விட ...இந்த ஜெனரேஷன்ல ஸ்மோக்கிங்" கம்மிதான்! மெயின் ரீஜன்..குடலைப் புடிங்கி எடுக்கத் தோணும்..நாத்தம் தான்! அப்புறம் இன்னொரு முக்கியாமான விஷயம்...கிஸ்ஸிங் அதிகமானது தான்!

ட்ராவலிங் ஜாப்களில் இருக்கும் நண்பர்களின், பொழுது போக்கே இதுதான்! அவங்க தான் முயற்சி எடுக்கணும்!

ஆம்பளைக, பொம்பளைகன்னு வகை தொகை இல்லாம, விரும்பி சாப்பிட்டு நோய்கள் வாங்கிக்கிடறது..."டிரான்ஸ் ஃபேட்" அதிகம் இருக்கிற எண்ணெயால் செய்யுற, ஃபாஸ்ட்ஃபுட்"கள் தான்!

பத்து மில்லி எண்ணெயில்ல் சுமார் 100 தேவை இல்லாக் கலோரிகள், உடம்புல ஏறுது! உழைக்க மறந்தோம்னா கொழுப்பா மாறுது!

அளவா எடுத்துக்குவோம்...!
அருமையா வாழ்வோம்...!


Tuesday, October 8, 2013

100.அகண்ட திராவிடம் ! சீமாந்திராவை தமிழகத்துடன் இணைத்து விட்டால்..!

சுப்ரமணியம் சுவாமியை தமிழக அரசியலில் தவிர்க்க முடியாது! யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவர் பேச்சும்,வேலையும் ஏதாவது ஒரு மாற்றத்தை உண்டு பண்ணிக்கிட்டே இருக்கும் !

அடுத்து நம்ம "சோ" ராமசாமி சார் ! பல முகங்களைக் கொண்ட அவர், மறைமுகமாக எடுக்கும் அவதாரம்.."பவர் பாலிடிக்ஸ்" ! இவர் என்ன செய்யப் போறேன்னு பேச மாட்டார்..! என்ன செஞ்சார்னு தான், பேசப்படும் !

புதுசா தமிழருவி மணியன்..கிளம்பி இருக்கார் ! தமிழகத்தில்
மூன்றாவது அணி அமைச்சே தீருவேன்னு, ஒத்தைக்காலில் சுழல்கிறார்...விமரிசனங்களைக் கண்டு கொள்ளாமல்!

எப்பவாச்சும் வாய்ஸ் கொடுக்கிற டீம்லே...ரஜினி சார்,
வீரமணி அய்யா, தோழர் தாபா, மருத்துவர் அய்யா ...
இப்படி நெறைய தலை'ங்க,பெரிய தலைக்கட்டுக, இருக்காங்க!

இவங்க எல்லோரும் நமக்கு வாத்தியாருக மாதிரி!
எல்லோரையும் கும்புட்டுகிட்டு, சிலபல கருத்துகளை,
தமிழ் அரசியல் உலகத்துக்குக் கொடுக்கலாமுனு இருக்கேன்!

பக்கத்து ஸ்டேட் ஆந்திராவே.., பத்திட்டு எரியுது, பதறுது..
மாநிலப்பிரிவினை பிரச்சனையாலே !


நாம ஓரத்துல குந்திக்குனு, பல்லு குத்திக்குட்டு இருக்காம...
நோம்பி கும்பிட நேரம் வந்தாச்சு !
ஏன்னா...இது ஒரு திராவிடப் பிரச்சன'ங்கிறது ..
ஞியாபகத்துலே வரணும்!
திராவிடத்துலே நாம தானே
அப்பா...அண்ணன்...அய்யா எல்லாமே !



நாமளே சும்மா இருக்காலாகுமா?
அப்புறம் எப்படி திராவிடத் தலைமைன்னு
சொல்றது?


இது ஏதோ கட்சிக்காராளை சுதி ஏத்துறதுன்னு நீங்க நெனைச்சா..
கம்பெனி அதுக்கு பொறுப்பாகாது!
ஒவ்வொரு தமிழனும் திராவிடத் தலைவன் தான்!
மறுக்கமுடியாத உண்மை!
ஏன்னா...திராவிடம் என்கிற வார்த்தையை தமிழரைத் தவிர,
வேறு எந்த ஸ்டேட் மக்களும் 'யூஸ்" செய்யறதில்லை!
ஸோ...எல்லோரும் இந்நாட்டு மன்னருகங்கிறது மாதிரி...இப்படி!

100.அகண்ட திராவிடம் ! சீமாந்திராவை தமிழகத்துடன் இணைத்து விட்டால்..!

இந்த ஆந்திராக் காரனுக கிட்டே, நமக்கு தீர்க்க வேண்டிய 
கணக்கு ஒண்ணு, 1950களில்லே இருந்து இருக்கு !  
மொழிவாரி மாநிலம் பிரிச்சப்போ, ஒவ்வொரு ஏரியாவா 
மதராஸ் ஸ்டேட்லே இருந்து, 
ஆல் ப்ளடி அதர் லேங்குவேஜ் திராவிடியன்ஸ், 
கவர்ந்து கிட்டுப் போயிட்டாங்க !

அப்போ..திஸ் பேட் ஆந்திரியன்ஸ் செஞ்ச 
கழிச்சடைத் தனம், கொஞ்சநஞ்சமில்லை ! 
மதராஸ் மனதே'ன்னு, பொட்டி ஸ்ரீராமுலுன்னு ஒருத்தர்...
ரியலா உண்ணாவிரதம் எல்லாம் இருந்து, செத்துப் போனார்! 
அப்பவும் இப்படித்தான் ஆந்திரேயன்ஸ் 
ரொம்ப கந்திரித் தனமா ஆடுனாங்க!

நம்ம ராஜாஜி அய்யா தான்,...
"குறை இன்றும் இல்லை...மறை மூர்த்திக் கண்ணா'னு, 
பெருமாள் கிட்டே சொல்லிட்டு, திருப்பதியைக் கொடுத்திட்டு, 
மதராஸை நேரு கிட்டே பேசி, வாங்கிட்டு வந்தார்னு 
பெரிசுக சொல்லிட்டு இருப்பாங்க!

அவங்க அடிச்சுகிட்டு, இருக்கும்போது தான் நமக்கு சான்ஸ்! 
திராவிடப் பெருசுக யாராச்சும்..வாயத் தொறந்து பேசியே ஆகணும்!

அகண்ட திராவிடம் அமைக்கறதுக்கு, இதுவே நல்ல வாய்ப்பு!
எனவே, "  
தெலுங்கானா பிரிவினையைப் பற்றி, 
கவலை வேண்டாம் ..
சீமாந்திரக் கூடப் பொறப்பே ! 
அண்ணனோடு இணைந்து கொள்ளுங்கள்" 
என 32 சானலிலும்..அறைகூவல் விடுக்க நேரம் வந்துடுச்சு!

கைவிட்டுப் போன திருப்பதியும் நமக்கு கிடைச்சிடும் !
மெட்ராஸ்க்கு முதலீடுகள் மேலும் அதிகரிக்கும்!
ரியல் எஸ்டேட் பெருகும்!
தென் பெண்ணை, கிருஷ்ணா..ஏன் கோதாவரித் 
தண்ணீரெல்லாம், நமக்குக் கிடைக்கும்!
மதராஸ் மனதே எனும் அவர்களின், கனவும் நிறைவேறும் !



கீழ்பாக்கத்துல வீடு பார்த்துட்டான் போலன்னு, 
நீங்க நெனைக்கிறது எனக்கு கேட்குது! 
என்ன செய்ய...100 வது பதிவு போடணும்னு, 
நானும் நம்ம வாசகர்கிட்ட ரொம்ப நாளா, 
கருத்து கேட்டுகிட்டே இருந்தேன்! யாரும் கண்டுக்கலை..
இப்போ படிச்சுட்டு அனுபவியுங்க !



100 தடவை டைப் அடிச்சதுக்கே ..இந்த ஆட்டமான்னு
கேக்காதீங்க ..பாஸ்! நம்மகிட்டெ அறிவுசரக்கு
அவ்வளவுதான் என்று செருக்கோடு கூவிக் கொல்கிறேன்!

ஆதரவளித்துக் கொண்டிருக்கும் அனைத்து பெரியவர்களுக்கும்,
கோவை ப்ளாக்கர்ஸ் அணியினருக்கும்,
படித்தும் படிக்காமலும் செல்லும் பார்வைநட்புகளுக்கும்...கும்புட்டுக்கிறனுங்கோவ்!




Friday, July 12, 2013

ஆந்திராவை மூணா உடைச்சா..அடுத்த கோரிக்கை தமிழ்நாடு ?

அவ்வப்போது அடக்குமுறை தண்ணீர் ஊற்றி 
அணைத்தாலும் ,
தெலுங்கானா தீக்கங்கு முழுதும் அடங்காது 
உள்ளே எரிந்து கொண்டே 
இருக்கிறது..
எரிமலை போல !

ஏன் மாநிலப் பிரிவினைக் கோரிக்கை எழுந்தது 
என்பது எல்லாம்  பழங்கதை ! 
இரண்டாகப் பிரிக்கலாமா என கமிஷன் போட்டு ,
ஆராய்ந்த போது ,மூன்றாகப் பிரிக்கலாம் 
என ஆலோசனை சொல்லப்பட்டு 
செம ரகளை தான் போங்கோ !

ஹைதரபாத் தலையாக தெலுங்கானா ...
விஜயவாடா தலைஊராக சர்க்கார்..
கடப்பா தலைநகரமாக ராயலசீமா .. 

இந்தி பேசும் வடமாநிலங்களை எளிதில் பிரித்தனர் !
ஆந்திரா விஷயத்தில் தடுமாறுகின்றனர் ..!

செய்திகள் வரும் போக்கைப் பார்த்தால் ஆந்திரமாநிலப் 
பிரிவினை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதைப் போல் 
தோன்றுகிறது ! எந்த நேரத்திலும் அறிவிப்பு வரலாம் !

ஆந்திர மாநிலப் பிரிவினை செய்தி உறுதி ஆனாலும் ,
செயல்படுத்த சிலபல ஆண்டுகள் ஒதுக்குவார்கள் என 
நம்பப்படுகிறது !

ஆந்திரா பிரிவினை உறுதி என்றால் 
அடுத்து மேலும் சில மாநிலங்கள் வரிசையில் உள்ளன !

முதலாவது ...மராட்டியம் 
பிறகு குஜராத் ....ம்ம்ம் நம்ம ஆளுக 
சும்மா இருப்பாங்களா ..சேர்த்திகுவோம் !

குஜராத்தில் சௌராட்டிரம் மற்றும் மராட்டியத்தில் விதர்பா 
என ஏற்கனவே பேச்சு ஓடிட்டு இருக்கிறது !
இங்கேயும் சிலபல கட்சித்தலைங்க்க வடக்கு தெற்கா 
பிரிக்கணும் னாங்க ! கொங்குநாடு வேணும் னாங்க !

ஆந்திராவை மூணா உடைச்சா..அடுத்த கோரிக்கை தமிழ்நாடு ?

அவங்களுக்கு எல்லாம் உடனே அவசர வேலை வந்திடும் !
இருக்கவே இருக்கு காரணங்கள் :

1. எங்கள் பகுதி முன்னேறவில்லை !
2. எங்களுக்கு ஆட்சியில் அதிகாரத்தில் 
    பங்கு கிடைப்பதில்லை !
3. இரண்டாக வேண்டாம் ..முன்றாக பிரி !

போராட இங்கு விஷயமா இல்லை ..!

இது எல்லாம் நடந்திடும் னு  சொல்லலை !
நடக்க வாய்ப்பு இல்லைன்னு சொல்ல முடியலை !

அப்படி இங்கே பிரச்சனை ..கோரிக்கை எழுந்தால் 
எவ்வாறு விஷயங்கள் ஓடும் என சில கற்பனைகள் !

1. சக ட்விட்டர் சொன்னது : 
   காவிரிக்கு வடக்கு, தெற்காக பிரிப்பது !
2. சேர ,சோழா , பாண்டிய , பல்லவ நாடுகள் !
3. வன்னிய,கொங்கு , பாண்டிய நாடுகள் !

அனுமானங்கள் சிலசமயம் உண்மையாக 
நடந்திடில் ரசனை மிக்கதாய் மாறிடும் வாய்ப்பு !

பொறுத்திருந்து பார்ப்போம்.. என்ன தான் ஆகும் என்று !

ஆடி மாத வாழ்த்துக்கள் !
எதுக்கா..? 
இது கடா விருந்து மாசமன்றோ ..அசைவர்களுக்கு!
விரத மாதமன்றோ ...பெண்டிருக்கும், ஆன்மீகருக்கும் !



எனக்குப் பிடித்த பாடல் அது உமக்கும் பிடிக்குமே !


Thursday, July 11, 2013

எஸ்டேட் அருவிகள்...குற்றாலம் !




இனிது..இனிது
குளியல் இனிது..!
காக்கையும்
குருவியும்
சொல்லித் தந்தது!
மூன்று மாத கோடையில்
நாடே வெந்தது..!
தவறாமல் பருவமழை
பொழியவே வந்தது..!

உயிருக்குள் நனைக்கும்...குளிரால்
ஸ்பா..ஸ்பா...ஸ்பா !
உலகில் கிடைக்கும் குற்றால
ஸ்பா..ஸ்பா..இயற்கை ஸ்பா..!

ஆனியிலும் ஐப்பசியிலும்
நட்புகளுடனும்
ஆடி கார்த்திகையில்
உறவுகளுடனும்
கூடி குதூகலிக்க
குற்றாலமே..
கொண்டாட்டமே !

இதற்கிடையே
குரங்கு அருவியும்
ஒகேனக்கல்லும்
இடை இடையே !

மலைஅருவிகளின்
குளுமை..புத்துணர்ச்சி
ஆற்றருவிகளில் இல்லை!


இவ்வருடம் தென்பாண்டி நட்புக் குருவிகள்
அழைப்பு விடுக்க...மாருதி ஏறி பயணித்தோம்!
காலைப் பயணம் மாலை குற்றாலம் சேர்த்தது!
அதிகக் கூட்டம்
ஓடினோம் தேடினோம்
சத்திரம் கிடைக்காமல்
அல்லாடினோம்!

அறை வாடகைகள்
அருவியின் உயரம் பெற்று
ஆயாசம் தந்தது!

ஐந்தருவி செல்லும் வழியில்
புத்தம்புது குடியிருப்பு ஒன்றில்
பேரம் படிந்தது..!

வழக்கம்போல முன்னிரவு நேரம்
பழையகுற்றால அருவியில் கழிந்தது..!
பத்தரை மணிக்கும் பார்டர் கடையில்
கம்பிகேட் தாண்டி கூட்டம் வழிந்தது..!

காலையில் தென்காசி ராஜ்மெஸ்ஸின்
அருமையான டிபன்கள் 
முடிச்சிட்டு வாகனத்தில் அமர்ந்தது...!
பயணித்து அறைக்குள் சென்று
காலிவயிறுகளில் அடைந்தது..!

எந்த அருவியில் இன்று என்று கூடிப் பேசினோம்..
உள்ளூர் காளை ஒன்று பொதுக்குளியல் வேண்டாம்..
ஏகாந்தக் குளியல் தான் ஆனந்தம் என்றது..!

பிரானூர் மாப்பிள்ளை ராஜாபாய்
எஸ்டேட் அருவிகளுக்கு செல்லுங்கள்
என ஆணையிட்டார்...
குண்டாறு அணைக்கு கைநீட்டி!

எஸ்டேட் அருவிகள்...குற்றாலம் !

அவர்கடையிலே சுடச்சுட பிரியாணிகள்..
அன்று முதல் போணி..நம் நால்வர் கூட்டணி!

செங்கோட்டையில் இடதுபுறம்
ஐந்துகல் தொலைவில்
குண்டாறு அணை...!
சொந்த வாகனங்கள் அதோடு நிறுத்தம்!


மலை மேல் கரடுமுரடான பாதையில்
ஜீப் கார் பயணம்..!
முதல் அருவி அரசு அருவி..இலவசக் குளியல்!
அதுவரை நடந்தும் வரலாம்..பெண்களும் கூட!

அதற்கு மேலாக பாதையில்
ஆடி உலுக்கிச் சென்றால்..
அரைமணி நேரம் இரண்டுகல் தூரம்
அடுத்து அடுத்து இரண்டு அருவிகள்..
ஆர்ப்பாட்டமில்லா அருவிகள்..
ஏகாந்தமாக..
ஒரு சமயத்தில் ஒரு குழு மட்டுமே!
கொண்டாடத் தடை ஏதுமில்லை!

மலையில் இருக்கும் எஸ்டேட்களுக்கு சொந்தமானவை..!
கூட்டத்தைக் குறைக்க வேண்டி
அனுமதியும் வெகுமதியும் தேவை!
வண்டிக்கும் குளியலுக்கும்
இரண்டாயிரம் வரை தேவை..!
ஒரு குழுவிற்கு..!
சுமார் எட்டுநபர் வரை!
அல்லது ஒரு வாகனத்தில் வருபவர்க்கு!




 பிரதான அருவிக் குளியல் அளவு
இல்லை எனினும்
பிரமிப்பூட்டும் அனுபவம் நிச்சயம்..!

முடிந்தால் சென்று வாருங்கள்..!
குழுவாகச் செல்வது நல்லது..!



Friday, April 12, 2013

தங்கம்..வெள்ளி தள்ளாட்டம் எப்போ முடியும் ?

 தங்கம் மேலிருந்து சுமார் 15 சதமும், வெள்ளி சமீபத்திய உயரத்திலிருந்து
30 சதமும் குறைந்து உள்ளது..இது குறித்து என்னுடைய பழைய பதிவைப் பார்க்கவும் !

http://rammy-rammys.blogspot.com/2013/02/blog-post.html

இது தங்கம், வெள்ளி வாங்கும் நேரமா?


தங்கம்..வெள்ளி இன்னும் சரியுமா..இல்லை வாங்க ஆரம்பிக்கலாமா..என்று கேட்போருக்கு, மீண்டும் சொல்லிக் கொள்ளுகிறேன்...S.I.P (Systematic Investment Plan) முறையில் அனைத்து விலைகளிலும்..சிறிது சிறிதாக நமது வருமானத்திற்கு ஏற்ற அளவில் வாங்கலாம்..

நீண்ட கால சப்போர்ட் நிலையை..இரண்டு உலோகங்களும் உடைத்து கீழே இறங்குகின்றன..புதிய சப்போர்ட் நிலை எங்கே..என்பது பெரிய கேள்விக்குறியே !

இந்திய மதிப்பில் ..இன்னும் 10 சத அளவிற்கு விலைகள் குறையலாம்..என உலோகசந்தை வல்லுஞர்கள் சொல்லுகிறார்கள்! ஃபிஸிகல், கோல்ட் ஈடிஃப்..இரண்டு முறைகளில் நீண்டகால் முதலீடு செய்யலாம் ! எம்ஸிஎக்ஸ் டெரிவேடிவில் விளையாட அனுபவம் வேண்டும்...நமக்கெல்லாம் அது ஒத்துவராது..! தில்லும், பணமும் உள்ளவர்கள் விளையாட்டு அது! அதன் பக்கம் செல்லாமல் இருப்பது மன/பண ஆரோக்கியம் !
 
தங்கம்..வெள்ளி தள்ளாட்டம் எப்போ முடியும் ? 

இந்த ஏப்ரல் முடிய கீழ்முகத்திலேயே இருக்கும் என சொல்லுகிறார்கள். அமெரிக்க மதிப்பில் தங்கம் சப்போர்ட் 1470, 1410, 1340..அதிகபட்சம் 1240 டாலர்கள்/ஒரு அவுன்ஸுக்கு, என எதிர்பார்க்கிறார்கள் ! வெள்ளி அதிகபட்சம் 22 அமெரிக்க டாலர்கள் வரை வரலாம் என எதிர்பார்க்கிறார்கள் ! 

பார்க்கலாம்..என்ன நடக்கிறது என்று !

Disclaimer : சந்தையில் நிலவும் சூழலைப் பொறுத்து.அவ்வப்போது வரும் வல்லஞர்களின் கட்டுரைகளில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பே இது..! என்னுடைய கருத்துகள் ஏதுமில்லை..!இந்த கட்டுரை வியாபாரம் செய்வதற்க்காக அல்ல..! வியாபாரமும்,விளைவுகளும் வியாபாரிகள் பொறுப்பு.! எனக்கும் விளைவுகளுக்கும் இஞ்சித்தும் சம்பந்தமில்லை..சந்தை நிலவரத்தை அவரவர்களே கணித்து வியாபாரம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது !

கனகமும்..ஸ்வர்ணமும் ஐஸ்வர்யங்கள்

Wednesday, April 3, 2013

1வது 6வது சேர்க்கைக்கு..நுழைவுத் தேர்வு தேவையா ?

 இந்த வெயிலுக்கு இருக்கிற "பிரச்சனைகள்" போதாதா..?
 நீ ஏன்யா ஆவி எடுக்கிறே..என்கிறீர்களா?


மழையில்லாமல் மாசடைந்திருக்கும் காற்றுவெளியில்..
இரவியின் கதிர்கள்..பூமியை நெருங்க..நெருங்க
வீரியம் கொண்டு தாக்குவதால்..
ஏற்கெனவே எண்ணை காணாத சிரசின் உள்ளே ஊடுருவி..
"நுரைடப்பா"வை, இளகச் செய்து விடுவதால்..
பற்பல கேனத்தனமான எண்ணங்கள் வெளிப்படுகின்றன..!

அதில் இதுவும் ஒன்று !


இப்போதான் மிகவும் சிரமப்பட்டு, தொழிற்கல்விக் கூடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு..எம்ஜியார் கொண்டு வந்த.."நுழைவுத் தேர்வு" பேயை அடிச்சு விரட்டி இருக்கோம்...ஏன் புதுசா.."பூதத்தை"க் கிளப்பி விடறேன்னு..பல்லைக் கடிக்கிற சத்தம் நல்லாவே கேட்குது !

கருவில் சிசு உருவாகிடுச்சு..கன்ஃபர்ம்னு டாக்டரம்மா..பச்சைக்கொடி காட்டியதும்..அப்பனாகப் போறோமுனு பயபுள்ளைக்கு ஒரே சந்தோஷம்..மகிழ்ச்சி !

எல்லாமே..சில மணி நேரம் தான் !
மெல்ல மனைவி தான் ஆரம்பிப்பாள்..."
ஏனுங்க ரொம்ப வலிக்குமா..அப்படிம்பாள்!
இப்பதான் "சிசேரியன்", "பெயின்லெஸ் டெலிவரி" வந்துடுச்சே!
டேய் ..பேடிக்கண்டா ..என்பார் நம்ம நாயகன் !
சேரனையும்..மோகன்லாலையும் மனசில் வெச்சு !
 
மனசாறும் மனைவி..மெல்ல இதழ் விரிச்சு
குழந்தைக்கு என்ன பேருங்க வைக்கலாம்..ம்பா!
சொக்கிடுவான் நம்மாளு..ஒரே புல்லரிப்பா இருக்கும்..
ஒரு அரைமணி நேரம் "டிஸ்கஸன்" நடத்தியும்...
முடிவு எடுக்கமுடியாது..! தள்ளிப் போட்றுவாங்க !


பாலாகட்டும், பீராகட்டும் அதிகமா குடிச்சா..
ஆட்டம் கொஞ்ச நேரம் தான்..
அப்பாலிக்கா வாந்தி பேதி ஆகிற கணக்கா..
அவனோட அளவு மீறுன சந்தோஷகிணத்துல
கல்லைத் தூக்கி வீசுவா..பாருங்க!

'ஏனுங்க..கொளந்தைய எந்த ஸ்கூல்ல சேர்க்கலாம்?

அவ்வளவுதான்..சினிமா எடுக்க ஆரம்பிச்சு 80 வருஷமானாலும்...
இப்ப வந்த" விதேசி" படத்திலேயும் ..சோகக் காட்சியில் "ஷெனாய்" ஊதுறமாதிரி...ஆயிரம் சோககீதங்கள் காதுல கேட்குது !

வாயடைச்சுப் போயிடுவான்,..அதுக்கப்புறம் பாருங்க ஒரே சிந்தனைதான்..குழந்தை பொறந்து, பள்ளிக்கூட சீட் வாங்கற வரைக்கும்.".நெத்தியிலே பொட்டு வெச்சு"ன்னு மனசுக்குள் ஆயிரம் சிந்தனைகள் டேன்ஸ் ஆடும் !

 அடடா..புருஷனை "சேது"வாக்கிட்டோமேன்னு..பொண்டாட்டிக் காரி முழிச்சுக்குவா, பேக்கானுக்கு வழியும் சொல்லிக் கொடுப்பா!

ஏனுங்க..அந்த "கேக்கே மேக்கே"பப்ளிக் ஸ்கூல்ல..லச்சரூவாயக் கொடுத்தா..2017எல்.கேஜிஅட்மிஷன் போட்றுவாங்களாம்! பக்கத்துவீட்டு பரிமளா தான் சொன்னா! அவ போயி பணத்தைக் கட்டி..அட்வான்ஸ் புக்கிங்" செஞ்சுட்டாளாம்  என்பாள் !

மனைவி சொல்லே மந்திரம்னு கேட்டீங்க..பொழச்சுக்குவீங்க..இல்லைன்னா..எல்கேஜி அட்மிஷனுக்கு..நாயா..பேயாத் திரியணும்..நெறைய ஸ்கூல்களிலே..கண்துடைப்பு என்ட்ரன்ஸ்,இன்டர்வியூ எல்லாம் நடக்கும்..மாட்டிட்டு முழிக்கணும்..சொல்லிட்டேன் !

1வது 6வது சேர்க்கைக்கு..நுழைவுத் தேர்வு தேவையா ?

 இதைப் போல பெற்றோர்கள் படும் அவஸ்தைக்கு ..ஒரே தீர்வு.."கேட்" போன்ற பொது நுழைவுத் தேர்வு முறை !குழந்தைகளுக்கு ! கேஜி வகுப்புகளில் நன்றாக பயிற்சி அளித்தால்..நுதேர்வை எளிதில் எழுதிவிடலாம் !

வாங்கி இருக்கும் மார்க்குகள் அடிப்படையில், பல பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம்...அந்த அந்த பள்ளிகளுக்கு வந்திருக்கும் விண்ணப்பங்களின், மதிப்பெண்களின் அடிப்படையில்..வரிசைப் பட்டியல் போடப்பட்டு.."அட்மிஷன்" கொடுக்கலாம்! சேர்வது ..அல்லது வேறு பள்ளியை தேர்ந்தெடுப்பது  என்பது " பெற்றோரின் விருப்பத்துக்கு விட்டு விடலாம் !

ஆறாம் வகுப்பிலும் இந்த முறையையே கொள்ளலாம்..!
காரணம் பெரும்பாலான பெற்றோர்கள் வேறு பள்ளிகளுக்கு தங்கள் செல்வங்களை மாற்றும் சமயம் அது !

இது என் மேலான யோசனை...!

திரியைக் கொளுத்தி போட்டாச்சு..என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்!

வெயிலோடு வெளையாடி..வெயிலோடு உறவாடி !











Thursday, March 14, 2013

மாணவர் போராட்டத்தை ..கூத்தாடிகள் கண்டுகொள்ளவில்லையே?

 கூத்தாடிகள் எனும் பதம் கொச்சையானதாக இருக்கலாம்..ஆனால் அது ஒவ்வொரு முறையும் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கலைஞர்கள்..குறிப்பாக திரைத்துறையைச் சார்ந்தவர்கள்..செயல்படும்போது அல்லது எந்த செயலிலாவது ஈடுபடாமல் இருக்கும் போது..அவர்களை குறை சொல்வதற்காக..ஏவப்படும் பதம் !


கூத்து என்பது பாடிக் கொண்டும்..பாவனை செய்து கொண்டும்..கதை சொல்வது..! இது முதலில்..மந்தைகளிலும்,சந்தைகளிலும் ..மக்களின் நடுவே "ஓரங்க நாடகமாக" நடத்தப்பட்டது..! பிறகு கொட்டகை மற்றும் திறந்தவெளி மேடைகளில் ஏற்றப்பட்டது..கூத்தாடிகளும் நடிகர்கள் எனப்பட்டனர்..!
பின்னர் திரைக்குப்பின் ஒளிந்து கொண்ட பின்னர்..இருள் கொட்டகையில் மட்டுமே அவர்கள் தென்பட்டதால்..நட்சத்திரங்களாயினர் !


தமிழக மக்களுக்கு அடிக்கடி காணக் கிடைக்காததால்...திரைக் கலைஞர்கள்.."கடவுளா"கினர்..கொண்டாடப்பட்டனர்.!

எதைத் தின்றால் பித்தம் தெளியும்..எதை உபயோகப்படுத்தினால் நமக்கு ஆட்சி கிடைக்கும் ..என அலைந்து கொண்டிருந்த பிழைப்பு அரசியல்வாதிகள்..மக்களின் கவர்ச்சி மோகத்தை கணக்கிலிட்டு..அரசியலில் சினிமாக்கலைஞர்களை நுழைத்தனர்..!


அது ஆயிற்று..சற்றேறக்குறைய அறுபது ஆண்டுகள்..சற்றேனும் குறையவில்லை..சினிமா மோகம் ! இனியும் அரை நூற்றாண்டு காலம், இது தொடருமோ எனும் நிலையே.காணப்படுகிறது !




திரைகலைஞர்களில் எதிர்கால திட்டங்களோடு சிலரும், கட்டாயத்தால் பலரும் ..மக்களின் பிரச்சனைகளுக்கு..குரல் கொடுப்பதும்..போராட்டங்களில்,போலி ஆதரவு கொடுத்து..கடனே என்று கலந்து கொள்வதும்..கண்கொள்ளாக் காட்சி மட்டுமல்ல..ரசிக சிகாமணிகள் பெருமைபட்டுக் கொள்ளும் அற்பவிஷயங்களும் கூட !

தற்போது ஈழவிடியல் வேண்டி நடை பெற்று வரும் இந்திய நடுவண் மற்றும் இலங்கை அரசுகளுக்கு எதிரான ..மாணவர் சமுதாய தொடர் போராட்டங்களுக்கு..திரைக்கலைஞர்கள் எந்தவித ஆதரவும் தராமல் "சிவனே" என்று இருப்பதால் ..கடுப்பான..ரசிக சிகாமணிகள்..தங்கள் கடவுள்களை.." கூத்தாடிகள்" என வர்ணித்து..இணைய சமூகங்களில் ..பொங்கி,கும்மி அடித்து..கழுவி ஊற்றி வருகின்றனர் !


கலைஞர்கள் பொதுவாக..எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்..தங்கள் துறைப் பிரச்சனைகளுக்கே..அவர்களால் தீர்வு காணமுடியாமல்.எங்கெங்கோ..அடித்துபிடித்து..அலைந்துதிரிந்து கொண்டு..தங்கள் பிழைப்பை நடத்தி வருகின்றனர்..!

அவர்கள் வந்து "குரல்" கொடுக்கவில்லை என புலம்பித் திரிகிறது ஒரு கூட்டம்! !


சமுதாயத்தின் ஒரு அங்கம் தான் "திரைக் கலைஞர்கள்" அவர்களுக்கு கிடைத்திருக்கும் குறைந்த அளவிலான..நட்சத்திரவெளிச்சத்தில்..நடித்து அவர்கள் பொருள் தேடி செல்லட்டும் ! அவர்களை நாம் போராட்டங்களுக்கு அழைக்க வேண்டாம்.. அவர்கள் முன்னெடுத்து சென்று தான் நாம் போராட வேண்டும் என்ற நிலை இனி வேண்டாம் !

அரசியல் ஆதரவே வேண்டாம் எனும்போது..கூத்தாடிகள் ஆதரவு நமக்கெதற்கு?

கூத்தாடிகள் எனப்படும் திரைக்கலைஞர்கள் நம்மை மகிழ்விக்க மட்டுமே...அறிவுறுத்தலுக்கோ, வழிநடத்தவோ அல்ல என்பதை நினைவில் ஏற்று..!


இனியும் நமக்கான ..நம்மை ஆளும் தகுதி வாய்ந்த தலைவர்களை..திரைக் கொட்டகையின் இருளில் சென்று தேடும் தன்மை வேண்டாம் !

இருளில் தேடினோம்..விடியவே இல்லை !

Tuesday, February 19, 2013

சண்டைக்கு வாரீயளா...மச்சான் !

பொத்தி பொத்தி ..தாயாரால் மராட்டிய சிவாஜி போல் வளர்க்கப் பட்டான் .அவன் ! காரணம்  பலகாலம் பேறு இன்றி..தவமிருந்து பிறந்தவன் என்பதால்..அதீத கவனம் !


தெரு விளையாட்டில் பங்கேற்க அனுமதி இல்லை..! காயம் பட்டுவிடுவான் என்பதற்காக..!
உறவினர் வீடுகளுக்கு விடுமுறையில் பெற்றோர் கூடவே சென்று..தங்கி திரும்ப வேணும் !

அதீத கட்டுப்பாடும்..கண்காணிப்பும்..விரும்பியவண்ணம் பெறாமை, ஏமாற்றத்தை தந்து..வளர்த்தெடுத்தது..அவனுள் கோபத்தை !

கண்காணிப்பு படிப்படியாக..குறைந்து..படித்து, வருவாய் ஈட்ட ஆரம்பித்தவுடன், அனைத்து குடும்ப பொறுப்புகளையும், அவன் மீது சுமத்தி விட்டு...அவன் வழிகாட்டுதலை விரும்பத் தொடங்கி விட்டது..குடும்பம் !

சண்டைக்கு வாரீயளா...மச்சான் !

இவ்வளவு நாளாக...சிறுகனலாக அவனுள் இருந்த..கோபம்..இப்போது வெடித்து அகம்/புறமெங்கும்..பரவத் தொடங்கிவிட்டது !

தொழிற்சாலையில், உறவு /நட்பு வகையறாக்களில் அவனது கோபம் ..பிரசித்தம்  !

இவனது பலமும்..பலவீனமும் கோபமே என்றாகி விட்டது..!
பலத்துக்கு காரணம் அவனது  நேர்மையும்..தொழில்பக்தியும்..!
பலவீனத்திற்கு காரணம்...இடம்பொருள் அறியா கோபம் !

திருமணமாகியும்..கோபம் குறையவில்லை..கூடவே சண்டைகளும் வந்துவிட்டது..காரணம் வந்த மகாராணி அம்மா..இவனை விட..கோபக்காரி !



இப்போதெல்லாம்..அவன் கோபப்பட்டால்..மகன் மட்டுமே பயப்படுகிறான்..அல்லது பயப்படுவதைப் போல நடிக்கிறான்..!
பெற்றோர் கண்டுகொள்வதில்லை..! மகளோ..நீ ஒரு டம்மி பீஸ்ஸுப்பா'' என்கிறாள்.. கோபப்பட்டால் காமெடியா இருக்குன்னு  சொல்றாள் !


சக ஊழியர்கள் / நட்புகள் / உறவுகள்....கோபம் உங்களுக்கு சூட்'டாகலை என்கிறார்கள்..எப்படின்னா..  திருப்பி பேசுவதில்லை ! அவனும் எத்தனை நேரம் தான் கத்துவான் ! சாந்தமாகிட்டான் !

இதெல்லாம் எப்படி சாத்தியமாச்சுன்னு கேக்கறீங்களா?
அவனுக்கு வயசாகிட்டே வருது !
வீட்டுக்காரம்மா..குழந்தைகளின் பலம் கொண்டுவிட்டதால்..சிரித்துக் கொண்டே கேட்கிறார்..

சண்டைக்கு வாரீயளா...மச்சான் !







Friday, February 15, 2013

கடவுள் எந்த மதமய்யா?

கேட்டுட்டானே ..அந்தக் கேள்வியெ !
கேட்கும்போதே குழப்பம் தீரலே !

பளீரென்ற கேள்வி.!.இடுப்புக்கச்சையில் கைவைத்து நிறுத்தி முகத்தை நிமிர்த்தி..கண்ணோடு கண் நோக்கி ..பதிலை தராமல் செல்லமுடியாத நிலையில் ...பளீரென்ற பிரகாசத்துடன் ..கேட்கப்பட்டக் கேள்வி !


கடவுள் எந்த மதமய்யா?

என்ன பதில் சொல்லுவாய்..எப்படிச் சொல்லுவாய்?
கேள்வியே தவறா...இல்லை கேட்டதா?



உன்னைக் கேள்வி கேட்டதில் என்ன தப்பு?

முப்பத்துமுக்கோடி என்கிறாய்..முப்பெருந்தேவியர் என்கிறாய்..! ஆதித்தொழில் செய்யும் அவர்தம்  கணவர்களைக் கடவுள் என்கிறாய் ! 
திகம்பரம் வேறு..சரணம் ..கச்சாமி வேறு என்கிறாய்!
ஆப்ரகாமிய தேவதூதர்களை வணங்குகிறாய்..!

புரியாத மொழியில் மந்திரம் போட்டும்
பூ போட்டும்..
சாம்பிராணி, வத்தி,பத்தி,விளக்கு எரிவிக்கிறாய்!
பாவப்பட்ட சிற்றுயிர் பிராணிகளை பலி இட்டு மகிழ்கிறாய்..!

இது போக உலகெங்கும் குல,குடும்ப சாமிகள் வேறு..கோடிக்கணக்கில்!

சாமி உண்டென்றால்..அது  ஒன்றென்றால்
அகில லோகம் பூரா ஒரே ரூ(அரூ)பமாகத்தானே இருக்கணும்?
எதுக்கு இத்தினி கோலம்..
ஊருக்கு ஒரு வேஷம்?

இதுல எந்த சாமி 
பெருசு..சிறுசுன்னு பலம் காமிச்சுக்க 
வெட்டிக்கிறீங்க..
குண்டு வெச்சுக்கிறீங்க...
குடியை எல்லாம் கெடுக்கிறீங்க..?

கடவுள் எந்த மதமய்யா?

சரி..இப்ப சொல்லு ..எல்லாம் வல்லவன்..எந்த மதம்?

திடீரன்று மடக்கப்பட்டவன்..நிதானித்து பதில் சொல்ல ஆரம்பித்தான்!
"படைத்தவனை யாரும் பார்த்ததில்லை...ஆனால் 
இப்படித்தான் இருப்பான் என்று..
நாங்களே அவனைப் படைச்சோம்..தேவதூதன்னு
சொல்லி வந்தவங்க..எங்க பெரியவங்க உதவியோடு !
காரணம் ..நாங்க பஞ்சபூதங்களையும்..காலத்தையும்
பார்த்து ..ரொம்ப ஆச்சரிய்ப்பட்டோம்..! 
இயற்கைன்னு சொல்லுவீங்களே ..அதைதான் !

அடையாளம் வேணுமில்ல..நாங்க படைச்சதுக்கு..பேரு வெச்சோம்..
பொறவு நடந்ததுதான் ..எல்லாருக்கும் தெரியுமே..!

சண்டை எதுக்குன்னு கேக்கறீங்க...பாருங்க
எங்களுக்கு வேற வேலை இல்லை..உலக்மே சுபிட்சமா இருக்கு!
பொழுது போகணுமில்ல..அதான் நீயா..நானா'ன்னு 
கேட்டுக்கிட்டு இருக்கோம்..அடிச்சுபுடிச்சு..அடிதடி பண்ணிட்டு !

கடவுள் எந்த மதமய்யான்னு...
இப்ப நீ கேக்குற..தெளிவாச் சொல்றேன்..சூதானமா கேட்டுக்கோ..!

கடவுள் எங்க மதம்..!

இங்க இருக்கிற எல்லாரையும் கேட்டுக்கொ ...யாரும் மாத்திச் சொல்லமாட்டாங்க..!

ஏன்னா..அதுதான் உண்மை !




Tuesday, February 12, 2013

உண்மையான தீவிரவாதியை சந்தித்தேன்!

  வாதம்..உடலில் ஒருமுறை வந்தால் வீடுபேறு அடையும் வரை விட்டுப் போகாது ! வாயால் வாதம்...செய்தால் ஏதாவது ஒரு இடத்திலாவது..நெஞ்சாகட்டும்..மூஞ்சியாகட்டும் ரணமாக்காமல் போகாது !

ஆக..வாதம் என்றாலே பாதிப்பு என்று தானே அர்த்தம்..?


 வாதத்திற்குக் காரணம் ..தடை..அல்லது அடைப்பு..மேலும் எதிர்ப்பு ! சீராக ஓடுவது/கிடைப்பது ஏதாவது ஒரு காரணத்தால் தடுக்கப்பட்டால் அல்லது திருப்பப்பட்டால்..ஏற்படும் !



தனக்கு இயல்பான, இஷ்டப்பட்ட செயல்..மாறுபடும் போது வாதம் பிறக்கிறது..!

ஏமாற்றம் வாதாடத் தூண்டுகிறது..! வாய்வாதம் ..மிதவாதம் ..எனப்படுகிறது ! சிலசமயம் வைத்தியம் பார்க்கப்பட்டு..ஓரளவு அதோடு மேலும் பரவாமல் நிறுத்திவிடலாம்..! இதுதான் பொதுவாக ..நடப்பது..! பொங்கிவிட்டு ..வலிதீர்ந்ததும்..காலம் எனும் மருந்திட்டு கோணல்களை..சற்று நேராக்கலாம்!



அடுத்து அறுவை சிகிச்சை..அது தான் "தீவிர வாதம்" !
அப்படிப்பட்ட ஒருவனைத் தான் இன்று ஒரு மலையோர பயணத்தில் சந்தித்தேன் !

தடாலடியாக முன்னே வந்து நின்றான்..அவன் ! அவன் கண்களில் ..தீர்க்கம்..ஏதோ அடைய வேண்டும் என்ற வெறியுடன் !அவன் பின்னே ஒரு பெண்..சற்று வயதான தோற்றம்..கவலையும்..கோபமும் அவள் கண்களில்..!

அவனாக வரவில்லை..எங்கள் முன் ஏறக்குறைய இழுத்து..தள்ளப்பட்ட நிலையில் ! பெரும்பாலும் ..கிராம இளைஞர்களே தீவிரவாததால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்!


என் நண்பனுக்கு ..அந்தப் பையன் ஏதோ தூரத்து உறவு போல! வயதான பெண்மணி அவனின் தாயாராம் ! மிகுந்த பதட்டத்தில் இருந்தார் அந்த அம்மணி! 

எந்த நேரத்தில்..எங்கிருந்து ஆபத்து வருமோ என்று பரபர ப்புடன் காணப்பட்டார்..அப்பெண்மணி!"இவன்கிட்ட எப்படியாவது எடுத்துச் சொல்லி..அங்கெ இருந்து விடுவிச்சு..நீதான் காப்பாத்தணும்..நீ சொன்னாத்தான் இவன் கொஞ்சமாவது கேப்பான்" என்று நண்பனிடம் சொன்னார் அந்தத் தாய்! 

இன்னும் பதினஞ்சு நாளில் இவனுக்கு கல்யாணம்..அவனோ ஒரே பிடிவாதமா அங்கேயே இருக்கான் ! எப்படி கல்யாணம் செய்யறது..ஒரே பையன் வேற..! வெளியில தெரிஞ்சா அசிங்கமாயிடும் ! குடும்ப கவுரவம் போயிடும்..! நீதான் ஏதாச்சு செய்யணும் ! பொண்ணு வீடு வேற பெரிய இடம்..ஆனாலும் ரொம்ப கோவக்காரங்க..ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப் போவுது !' என்றார்.!

என்னாசும்மா'ன்னு நாங்க கேக்கவும்..சட்டைய கழட்டுடா'ன்னு..பையன் கிட்ட சொல்ல ..உடம்பு பூரா கீறல்கள்..பிளேடால் கீறி ஆறியும்..ஆறாமயும் ! சட்டப் பாக்கெட்க்கு நேர் பின்னாடி.. " ஜெனிதா"ன்னு..டாட்டூ..முஞ்சிலடிச்ச மாதிரி தெரிஞ்சது !

  உண்மையான தீவிரவாதியை சந்தித்தேன்!
அம்மா செல்லம்..மாசம் முப்பதாயிரம் சம்பளம்..ஒரு பைசா விட்டுக்கு கொடுக்கிறதில்ல..முக்காவாசி சம்பளத்தையும் அந்த பொண்ணுக்கே செலவு செஞ்சிருக்கான் ! போதலைன்னா..அம்மாக்கரி கிட்டயும் வாங்கிட்டுப் போயிருக்கான்!
பொண்ணு ரொம்ப லட்சணமாம்..பையன் தீவிரவாதி ஆகிட்டான்! மூணு வருஷ லவ்வாம்! இவன் தான் "டாட்டு" குத்தி இருக்கான்.அவளோ"பிரெண்டாத்தான் நெனைச்சேன்'னு வசனம் பேசிட்டு நாமத்தையும் போட்டுட்டு..அமெரிக்கா போயிட்டா ! இவனால மறக்க முடியலை !

 இப்போ பிரச்சனை என்னன்னா .."டாட்டூ" வை அழிக்கணும்..கல்யாணத்துக்கு முன்னாடி..காயத்தையும் ஆத்தணும் ! எந்த டாக்டர் கிட்ட போறதுன்னு நாங்க பேசிட்டு இருந்தப்போ..அதுவரைக்கும் பேசாம ..நின்னுட்டு இருந்த அந்த தீவிரகாதல்வாதி" ராஸ்கல் கேட்டானே.ஒரு கேள்வி !

"அண்ணோவ்..இந்த பேர் அப்படியே நெஞ்சுல இருக்கட்டும்..மேல வேணும்னா ஒரு பூ மாதிரி போட்டு மறைச்சிட்டா என்ன'ன்னு !"

நெஞ்சுக்குள்ள அவளை எழுதி வெச்சேன் ...! அவன் !
காதல் ஒருவழிப்பாதை பயணம்..! நாங்கோ !

அனைவருக்கும் அட்வான்ஸ் காதலர் தின வாழ்த்துக்கள்!
 

Monday, February 11, 2013

இது தங்கம், வெள்ளி வாங்கும் நேரமா?

 கண்களை சுட்டி இழுக்கும்..ஆனால் ஆடம்பர உலோகங்கள் அல்ல அவை ! முதலீடு செய்தால்..வருவாயை அள்ளித் தருபவை ! அவசரத்துக்கு ஆபத்துக்கு "நண்பன்" போல கைகொடுப்பவை !


பத்து வருடங்களில் சுமார் ஐந்து மடங்கு ..அதாவது 500 சதம் வருவாயை கொடுத்திருக்கின்றன ! இனி எங்கே செல்லும் ?

30 வருட ஏறுமுகக் காலத்தில் ..காளைசந்தையில் இவ்விரு உலோகங்களும் ஏறுநடை போடுகின்றன ! இனியும் 5 முதல் 7 வருட காலத்திற்கு இது தொடரும் என கணிக்கிறார்கள் வல்லுஞர்கள்!


பங்கு சந்தையும்..உலோக சந்தையும் உலகளாவை ஆகிவிட்டன ! நியூயார்க்..லண்டன் உலோகச் சந்தைகள் முக்கியமானவை ! ஐரோப்பிய, அமெரிக்கப் பொரு ளாதாரமும் முக்கியமானது..விலைகளை நிர்ணயிப்பதில் ! உலோகச்சந்தை வலுவாக வேண்டுமெனில் அமெரிக்க டாலருக்கு எதிராக "யூரோ" வலுவாக வேண்டும்!

சீன..இந்தியப் பொருளாதார மந்தமும்..ஆபரண உலோகவிலை உயர்வை தடுத்து வைத்திருக்கிறது ! காரணம்..இந்தியாவில் தங்க இறக்குமதி வரி ..சன்னமாக உயர்த்தி வருகிறார்கள்! மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு நிலையிலாமல் ஏறி இறங்குவதால்..நகைத்தொழில்..ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது !


இது தங்கம், வெள்ளி வாங்கும் நேரமா?


வேகமாக மேலே வந்து கொண்டிருந்த தங்கவிலை சற்றே..இளைப்பாறி வருகிறது என்றே சொல்லலாம்..அடுத்த பாய்ச்சலுக்கு முன் ! இந்த வருடம் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கிறார்கள்..! அதற்கு முன்னர் இன்றைய விலையிலிருந்து 5 முதல் 15 சதம் வரை இந்திய விலைகளில் வீழ்ச்சி இருக்கும் என்றும்..பயப்பட வேண்டியதில்லை..அது ஒரு வாங்கும் வாய்ப்பாக அமையும் என்றும் வல்லுஞர்கள் உரைக்கிறார்கள்!

எதிர்வரும் மத்திய பட்ஜெட்டின் தாக்கம் இந்திய பங்கு மார்க்கெட்டிலும்..தொடர்ச்சியாக இந்தியரூபாயின் மதிப்பிலும் கணிசமாக இருக்கும் ! பங்கு மார்க்கெட் உயர்ந்தால்..ரூபாயின் மதிப்பு அதிகபட்சமாக 10 சதம் அளவில் குறைய வாய்ப்பிருக்கிறதாம்! இதெல்லாம் மத்திய கால அளவில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்..! ஒரே நாளிலோ..ஒரே வாரத்திலோ நடக்காது!

நியூயார்க் சந்தையில் தங்க விலை டாலரில் + டாலருக்கு இந்தியரூபாய்..இரண்டும் சேர்ந்தே ..இந்தியாவில் விலையை நிர்ணயம் செய்கின்றன..! நொடிக்கு நொடி ஏறி ..இறங்குகிறது !


எல்லா விலையிலும் வாங்கணும்..கீழே இறங்கினால் கொஞ்சம் சேர்த்து வாங்கலாம் ! காசுகளாகவும்,,கோல்ட் ஈ.டி.பண்டிலும் வாங்கலாம்! வேண்டும் போது நகைகளாகவோ..பணமாகவோ மாற்றிக் கொள்ளலாம்!

மொத்த முதலீட்டில் மூன்றில் ஒரு பாகம் தங்கம்,வெள்ளியில் போடலாம் !

Disclaimer : சந்தையில் நிலவும் சூழலைப் பொறுத்து.அவ்வப்போது வரும் வல்லஞர்களின் கட்டுரைகளில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பே இது..! என்னுடைய கருத்துகள் ஏதுமில்லை..!இந்த கட்டுரை வியாபாரம் செய்வதற்க்காக அல்ல..! வியாபாரமும்,விளைவுகளும் வியாபாரிகள் பொறுப்பு.! எனக்கும் விளைவுகளுக்கும் இஞ்சித்தும் சம்பந்தமில்லை..சந்தை நிலவரத்தை அவரவர்களே கணித்து வியாபாரம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது !

கனகமும்..ஸ்வர்ணமும் ஐஸ்வர்யங்கள்!



Thursday, January 10, 2013

கூடார வல்லியன்று பால்சோறு தின்னும் கும்மாளம் !குதூகலம் !



கண்ணனின் அன்பை வேண்டி..மார்கழி மாதம் முதற்கொண்டு அதிகாலை விழித்து,நாட்காலையில் நீராடி ..நெய்யுண்ணோம் ..பாலுண்ணோம்..மலரும் மற்ற மை அலங்காரமும் செய்யோம் ..பொல்லாங்கு பேசமாட்டோம் ..என வைராக்கியம் பூண்டு ..மாயனின் பல்வேறு லீலைகளை சொல்லி பாடி மகிழ்ந்து ..நோன்பிருந்த நம் பாவைகள்..விரதநாட்கள் முடியும் தருவாயில் ..

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் ..கொடுத்த பரிசாக எண்ணி ..சூடகமும்..தோள்வளையும் ..தோடும்.செவிப்பூவும்  சூடி அலங்காரமிட்டு புது ஆடைகள் அணிந்து ..



 பால்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார !

அனைவரும்  கூடி இருந்து கொண்டாடி மகிழும் நாளே .." கூடாரவல்லி " எனும் திருநாள் ! மார்கழி 27ம் நாள்!


இந்த பால்சோறு என்றால் என்ன ..என்று பார்ப்போம் !

இதுவும் ஒருவகை சர்க்கரைப் பொங்கல்தான் !

பாலிலேயே செய்யப்படும் சர்க்கரைப் பொங்கல் !இதன் இன்னொரு பெயர் " அக்காரவடிசல்" !




எவ்வாறு செய்வது என்பது குறித்த காணொளி ..இங்கு இணைக்கப்பட்டுள்ளது !

இதை செய்து காண்பிப்பவர் ஸ்ரீ ரங்கம்  ராது மாமி ! இணைய உலகில் மிகவும் பிரபலமானது ..இவரது பல படைப்புகள் ! புது மணப்பெண்களுக்கும் ..சமைத்து சாப்பிடும் ஆண்களுக்கும் ..இவரது காணொளிகள் மிகவும் உதவி செய்கிறது ! யூ-ட்யூபில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் !







இரண்டு பகுதிகளாக காணொளிகள் கிடைக்கும்,,கண்டு செய்து உண்டு மகிழுங்கள் ! அற்புதமாக இருக்கும் ! ஸ்ரீரங்கம் கோவிலில் தாயார் சந்நிதியில் அபூர்வமாகக் கிடைக்கும் !


பார்க்க இயலாதவர்களுக்காக !

தேவையான பொருட்கள் :
1.பச்சரிசி                  -  1 கப் 
2.பாசிப்பருப்பு          -  கால் கப்
3. பால்                       -  1 லிட்டர் 
4.நெய்                       -  150 மில்லி
5.உடைத்த வெல்லம் - 1 கப்
6.அஸ்கா சர்க்கரை - 1 கப்
(தண்ணீர் 2 கப், முந்திரி பருப்பு, ஏலக்காய் போடி, குங்க்குமப்பூ ..!)

செய்முறை:

1.முந்திரியை நெய்யில் வறுத்து தனியே வைக்கவும்.
2.வாணலியில் பாதி நெய்+பச்சரிசி+பாசிப்பருப்பு சேர்த்து சிறிது நேரம் வறுக்கணும்.
3.பால் 4கப் +தண்ணீர் 2கப் அதில் சேர்த்து 5நிமிடம் வேகணும்!
4.மொத்தக் கலவையை குக்கருக்கு மாற்றி 5,6 விசில் வரை வேகணும்!
5.மீண்டும் கலவையை வாணலிக்கு மாற்றி மீதி நெய் + பால் 2கப் சேர்த்து கொதிக்கனும். 5-7 நிமி
6. வெல்லம்+சர்க்கரை சேர்த்து அடிபிடிக்காமல் கிளறணும்.
7.கெட்டியாகும் போது நெய்+முந்திரி +குங்க்குமப்பூ +ஏலக்காய் போடி சேர்த்து இறக்கிவிடலாம் 

8.ஆறினால் கெட்டியாகி விடும் !



Tuesday, January 8, 2013

பள்ளி வேலைநேர மாற்றம் ! இனி 10மாதங்களும் பாவைநோன்பே!

அடி..வெள்ளையம்மா வந்ததடி உன் காளைக்கு ஆபத்து.! கட்டபொம்மன் பட வசனம் இது!
பள்ளி வேலைநேர மாற்றம் பற்றிய திட்டம் குறித்து ஊடகங்களில் செய்தி வந்ததும்..அதை அறிந்ததும் என் மனதில் ஓடிய எண்ணமே அது !

 பெருகி வரும் மக்கள் கூட்டத்தில்..பள்ளிச் சிறார்களும், கல்லூரி கண்மணிகளும்..வேலைக்குச் செல்வாரோடு..காலை வேளைகளில் ..சாலையை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ! அதனால் அவதிகள்..ஆபத்துகள்..இழப்புகள்! 

குளிர் மிகுந்த வடமாநிலங்களில் காலை 7 மணிக்கு...சீருடை அணிந்தவாறு குழந்தைகள் கல்விச்சாலைக்கு நிதானமாகச் செல்வதை ..பல வருடங்களுக்கு முன்னரே ..கண்டிருக்கிறேன்..வியந்தும் இருக்கிறேன் !

 ஏழரை மணித்திட்டம் என்னவோ..ஏழரைசனீஸ்வரர் வந்து தாக்கியதைப் போல அலறுகிறார்கள்...வீட்டம்மணிகளும்..வாத்தியார்களும் !

வேலைக்குச் செல்லும் அம்மணியருக்கு..நேரத்திலேயே எழுந்திருப்பது பழகி இருக்கும்! வீட்டம்மணிகள் தான் பாவம்..அவர்களோட "ரொடீன்" எல்லாம் மாறிடும்னு பயப்படராங்க !

கர்மம் புடிச்ச டிவி சீரியல்களை விட்டொழிச்சீங்கன்னா...சீக்கிரம் தூங்கி..விழிக்கலாம்! உடலுக்கும்..மனசுக்கும் ஆரோக்யம் ! இதை என்னமோ தியாகம்னு எல்லாம் நினைக்க வேண்டாம்..! பரிகாரமா பகல்லே ரொம்ப நேரம் கிடைக்கும்.ஹாயா பொழுதைக் கழிக்கலாம்!

ஒரு அஞ்சு.அஞ்சரைக்கு எந்திரிச்சா போதும்..குழந்தைகளை எழுப்பிவிட்டு..சுடுதண்ணி போட்டு..பிறகு குக்கர் வெச்சா..சாப்பாடு ரெடி.! சமையலுக்கு அரை மணிநேரம்..இன்னொரு குக்கர்ல இட்லி வெச்சா..மூணு இட்லி சாப்டுட்டு..தயிர்சாதம் பாக்ஸ்லெ ஸ்கூலுக்கு!
ஆறே முக்காலுக்கு எல்லாம் பஸ்/வேன்/ஆட்டோ வர்றதுக்கு ரெடி ஆயிடலாம் !

ரெண்டு மாசம் சிரமமாயிருக்கும்..அப்புறம் பழகிடும் !

அடுத்ததாக..நம்ம குரு'க்களைப் பார்க்கலாம்..! சம்பள உயர்வு அறிவிப்பைத் தவிர...மற்ற எல்லா அறிவுறுத்தலுக்கும் அவங்க ஆதரவு கிடைக்கிறது..எதிர்பார்க்கவியலா சமாச்சாரம் !

ஸ்கூலுக்குப் பக்கத்துலேயே வீடு பார்த்துக்கோங்கோ..அவ்வளவு தான் சொல்லமுடியும்!

பெத்தவங்களுக்கும் அதே அட்வைஸ் தான்..! பக்கத்துல இருக்குற ஸ்கூல்லெ பசங்களை சேர்த்துவிடுங்க ! அமெரிக்காவுல அந்த அந்த ஏரியாஸ்கூல்ல தான் சேர்க்கிறது..ஓரளவு கட்டாயம் !  

அரசுக்கு ஒரு கோரிக்கை..எல்லா ஸ்கூல்லேயும் கட்டாய 'கேன்டீன்" வசதியும்,, அதிக அளவு " பாத்-ரூம்" வசதியும் அவசியமா செஞ்சு தரணும் !

அரசுப்பள்ளி/ கல்லூரிக்குன்னுத் தனியா ஸ்பெஷல் பேருந்துகளை இயக்கணும்..தனியார் பள்ளிகளுக்கு போக்குவரத்தில் தொடர்ந்து அதிகக் கண்காணிப்பும் அவசியம்!


பயப்படாதீங்க..மக்களே ! அருமையான திட்டம் !
பழைய காலம் மாதிரி 10 மணிக்கு முன்னாடி தூங்கப் போயிடுங்க..! காலை 5 மணிங்கிறது அதிகாலை அல்ல..'அதி உன்னத வேளை' ந்னு நெனைங்க..!

மத்தியான சாப்பாட்டுக்கு புள்ளைங்க வீட்டுக்கு வந்திடும்..படிக்க/விளையாடன்னு அதுங்களுக்கு ரொம்ப நேரம் கிடைக்கும்.! 

மத்தபடி பாதுகாப்பு கவனிப்பு.,..பத்திரம் எல்லாம் ரொம்ப ஜாஸ்தியா அவங்களுக்குக் கிடைக்கும்! உங்க சுகத்தை கொஞ்சம் ஒதுக்கி வையுங்க..அவ்வளவு தான்!

இனி..எல்லா நாளும் பாவை நோன்புதான்..ஆண்டாள் நாச்சியாரின் வழியில் நாமும் செல்வோம்!

வீட்டாம்பிளைகளா..கொஞ்சம் உங்க உதவியும் தேவை..மறந்திடாதீங்க! ரெண்டு மாடுகளும் இழுத்தாதான் குடும்ப வண்டி நகரும் ! 


Saturday, January 5, 2013

சங்கரமடம் அவ்வளவு இளக்காரமா ஆகிடுச்சா..மிஸ்டர் நல்லதம்பி !


முதல்ல அப்பா சொன்னாரு..அப்புறம் புதுவாரிசு ஆனந்தவிகடன்ல பதில் போட்டாரு..ஏமாந்து எரிச்சலான முதல் வாரிசு பேப்பர்காராளுக்கு அறிக்கை கொடுக்குறாரு!

என்னென்னு?

எங்க கட்சி ஆபீசு சங்கர மடமா' ந்னு?


ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஆங்கிள்லே சொல்றாங்கொ..ஆனா பாருங்க ..ஒரே வாக்கியமா சொல்றாங்கோ! இதைத்தான் " ப்ளட் இஸ் திக்கர் தென் வாட்டர்' நு சொல்றதா?

தானாடாவிட்டாலும் தன் நாவாடும்' என்பதும் இதே தானோ?


குதுரை ஆதீனத்தை விடுங்க..சொருணகிரி தான் கடைசி ஆதீனமா இருக்க ட்ரை பண்றார்..கூடிய சீக்கிரம் அறநிலையத்துறை நாட்டுக்கு அர்ப்பணிச்சிடும் !

 மத்த ஆதீனமாகட்டும்..மடமாகட்டும்..சர்ச்..மசூதி எங்க பார்த்தாலும்..அடுத்த பட்டம் பெரும்பாலும் பழைய பட்டத்தின் வாசமே இல்லாத இடத்தில் இருந்துதான் வர்றாங்க..!

அதுவும் இன்னார் தான் அடுத்த வாரிசுன்னு தெளிவா..சொல்லிடுவாங்க! அப்படியே சொல்லாம போய்ட்டாலும்..அடுத்த பட்டம் கட்றதுல பெரிய கலாட்டா எல்லாம் இருக்காது !


அப்படி ஏந்தான் கூட்டமா சேர்ந்து அப்படி ஒரு கேள்வி கேக்கறீங்களோ?

சரி..சங்கர மடம் இல்லை ..உங்க கட்சி...வேறென்ன?

வேறென்ன..பிரவேட் லிமிடெட் கம்பெனியா..இல்லை பார்ட்னர்ஷிப் கம்பெனியா?

பப்ளிக் லிமிடெட் கம்பெனின்னு சொல்லமுடியாது! லிமிடெட் பப்ளிக்கை தானே உள்வட்டத்தில் அனுமதிக்கிறீங்க?



தேவே கவுடா, முலயாம் சிங் யாதவ், காஷ்மீர் அப்துல்லா..குடும்பத்துல இப்படியா பப்ளிக்கா வெட்டு குத்து நடக்குது..கமுக்கமா முடிச்சுக்கல்ல! 

எம்ஜிஆரு தெளிவா செங்கோலைக் கொடுத்து காமிச்சாரே..யார் வாரிசுன்னு! அந்தத் தெளிவு இத்தனை நாள் கழிச்சாவது உங்க கட்சிக்கு வந்ததேன்னு சந்தோஷப்பட்டா..வாரிசு இல்ல..சங்கர மடமான்னு கேள்வி வேற கேக்கிறீங்க !


உங்க சண்டைக்கு சங்கரமடத்தை எதுக்கு இழுக்கிறீங்க? 


சரி..சங்கர மடம் இல்லைன்னு நாங்க..அதாவது மாக்களாகிய தமிழ் மக்கள் சொல்லணும்னா..அண்ணனும் வேண்டாம்..தம்பியும் வேண்டாம்...ஒரிஜினல்திராவிட  போராட்ட வாரிசு வைகோ இருக்காருல்ல ..அவரைக் கூப்பிட்டு ஒப்படைச்சிடுங்க ! 







Wednesday, January 2, 2013

அமெரிக்காவிற்கே ரூ28ஆயிரம் கடன் கோடி கொடுத்த கோவை !

 கோவைக்கே தனிப் பெருமை உண்டு ! யாராலும் எளிதில் நினைக்க..நிகழ்த்த முடியா காரியங்களை 'ஜஸ்ட் லைக் தட்'  டாக செய்து முடிப்பது !


பாசிட்டிவா சொல்லனும்னா 'பார்முலா 1 கார் பந்தய வீரரை உருவாக்கியது ; அரசாங்க ஆதரவு அதிகமில்லாமலேயே பஞ்சு மற்றும் இயந்திர தொழிலில் முன்னேறியது என பலப்பல !


 எங்க  ஊர் ஆளுங்க மூளையை..எக்சிபிஷன்ல வைக்கலாம்..! அப்படி நெளிவா ..சுளிவா கோளாறா எந்த காரியமும்  செய்வாங்க !
ஜி.டி.நாயுடு பத்தி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை !


செஞ்ச வேலையின் தகுதிக்கு   ஏற்றமாதிரி...பாராட்டும் கிடைக்கும் ..!
சிலசமயம் ஜென்மாந்திர ஜெயிலும் கிடைக்கும் !

அரசுக்குப் போட்டியாக ரூபாய் நோட்டு அடிச்சு மாட்டிக்கிட்ட பெரும்புள்ளிக எல்லாம் வசிச்ச ஊர் கோவை ! கவுண்டமணி கூட ஒரு படத்துல ,செந்திலைப் பார்த்து " ஏண்டா..கோயமுத்துர்ல பொறந்துட்டு அம்பது பைசாவா அடிக்கிறது ..ஊரு பேரக் கெடுக்காதிங்க-ன்னு ' அலப்பரை பண்ணுவாரு !

சுமார் முப்பது நாப்பது வருஷமா ..கோயமுத்தூர் காரங்களை ..மத்த ஊர்காரங்க கிண்டல் பண்றதுக்கு 'நோட்டு அடிக்கிற பசங்க' ன்னு தான் சொல்றது ..! ஏதோ சிலர் செஞ்சதுக்கு உரே பழி சுமந்தது !

அந்த தீராப் பழியை எளிதில் துடைத்தெறிந்து விட்டனர்..கோவை மக்கள் சிலர் ! அப்படி என்ன காரியம்னா ..அமெரிக்காவுக்கே கடன் கொடுத்திருக்காங்க ! அதுவும் எவ்வளவு ? ஒன்றல்ல ..நூறல்ல ..பல்லாயிரம் கோடி .!

.ரூ 28 ஆயிரம் கோடி !

அமெரிக்காவிற்கே ரூ28ஆயிரம் கடன் கோடி கொடுத்த கோவை !



அமெரிக்காவுக்கு பொருளாதாரப்பசி ! மசாலா கபே ' படத்துல வர்ற சிவா சொல்ற மாதிரி .."யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக்குவாங்க ..கடனா "!

நம்ம பக்கத்து நாடு சீனா இருக்குது தானே !  அமெரிக்காவுல அந்த நாட்டு அரசாங்கம் வெளியிடும் கடன் பாண்டு பத்திரங்களை ..சீனா மிச்சமிருக்கும் அந்நிய செலவாணி பணத்தை வெச்சு ..வாங்கிப போடும் ..வருஷம் கொஞ்சமா ! இப்போதைக்கு சுமார் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொறுமான அளவிற்கு அமெரீக்காவுக்கு சீனா கடன் கொடுத்திருக்கு !


 இதைக் கண்டு கேட்டு ..மனம் பொறுக்காத கோவை பங்குச்சந்தை அன்பர் ஒருவர் ..இந்தியாவின் மனம் காக்க ,சென்னை தனியார் வங்கி மூலம் ..பணம் அனுப்பி அமெரிக்க கருவூல .கடன் பத்திரங்கள் வாங்கியுள்ளார் !
(US treasury Bonds)

 http://tamil.oneindia.in/news/2013/01/02/tamilnadu-5-bn-us-bonds-seized-from-tn-stock-broker-167205.html

கோவை இவ்வளவு நாளாக சுமந்து வந்த "கள்ள நோட்டுப் பழி ' துடைக்கப்பட்டு ' குபேரபுரி ' எனும் புதுப்பட்டம் வந்து சேர்ந்தது மிகவும் 
மகிழ்ச்சியாகவும் ..பெருமையாகவும் இருக்கிறது !


ஃபாலோ- அப் !  

06/01/2013

$5-bn US bonds seized from TN stock broker


http://www.indianexpress.com/news/-5bn-us-bonds-seized-from-tn--stock-broker/1053200/

முதலில் வந்த செய்திகள் கொடுத்த பெருமையின் ஆயுள்..விட்டில் பூச்சி போல சிலநாட்கள் தான் போலும் ! மேற்கொண்டு வரும் தகவல்கள்..அந்தப்பத்திரங்கள் போலியாக இருக்குனென்ற கருத்தைச் சார்ந்து வருகின்றன. போலி என்று நிரூபணமானால்..குபேரபுரி" எனும் பெருமை தகர்ந்து..ப்ராடுபுரி" என்பதே நிலைத்து விடும் வாய்ப்பு உள்ளது!