Friday, September 28, 2012

தமிழர் ஆபத்தானவரா?

 ஆங்கிலேயர் தான் இந்தியாவை உருவாக்கினர் என்பது மிகையன்று.!.பல்வேறு சிறிய,பெரிய சமஸ்தானங்களை ஒன்றிணைத்து.ஒரு குடையின் கீழ்... அவர்களே கொண்டு வந்தனர்!..அது சரித்திரம்!

 வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது..சொன்னவை.." விரைவில் இந்தநாடு உள்நாட்டுப் போரில் சிதைந்து..மீண்டும் பலதுண்டுகளாக உடைந்து போகும்" என்பதேயாகும்!

வல்லபாய் படேலின் சீறிய முயற்சியால் நாடு, பிணைக்கப்பட்டு..65 வருடங்களாக உறுதியாகி வருகிறது!

நாட்டுப்பற்று நம் உடலில் ஊற்றி வளர்க்கப்பட்டது...
மொழி வாயிலாக..
ஊற்றியது தமிழ்!

 வெற்றிவேல்..வீரவேல் என்றிருந்த நம்மை" வாழிய பாரத மணித்திருநாடு" என்று பாவலர்..மாற்றிப் பேச வைத்தனர்..!
இயல்பாக அது நம்மிடம் ஏற்றுக் கொள்ளப்பட்டது!
ஏனெனில் இதுகாறும் நாட்டின், அண்டைப் பரப்புகளிடம் நமக்கு தொன்றுதொட்டு இருந்துவந்த பந்தம்!

தமிழர் ஆபத்தானவரா?

ஈழத் தமிழர் மற்றும் அவர்களின் தலைவர்கள்...மத்திய ஆளும்கட்சித் தலைமையின் எண்ணத்தின்படி, பழிவாங்கப்பட்டதாக..நம் இன ஆர்வலர்களால் கடுமையாக குற்றம் சாட்டப்பட்ட போதும்..பெரும்பாலோனார் அதைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை!

சமீபத்தில் அந்த நாட்டுப்பற்றுக்கு சோதனை ஒன்று வந்துள்ளது..! வடவர் மூலமாக!
மையாட்சியாளர் மட்டுமல்லாமல்..பொதுவாக வடவர் அனைவருக்கும்..தமிழர் மேல் ..நம்நாட்டவர் என்ற மதிப்பும்..அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை என்பதை...உணர்த்தும் விதமாக சமீப கால நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்!

கொடுங்கோலன் ராஜபக்ஷேவை அழையாதீர்..விரட்டுகள் என்று நம் மாநில ஆட்சியாளரும்..கட்சியாளரும், இனவாளரும் கதறியதை..கூக்குரலிட்டதை..தேசியக் கட்சிகள் புறக்கணித்தன!

நம் மாநில மக்களின் உணர்வை..கொடுங்கோலன் எதிர்ப்பின் மூலமாக உணர்த்தச் சென்ற..வைகோவை..வடவர்..எல்லையிலே மறித்ததோடு மட்டுமல்லாமல்..பாதுகாப்புப் படைகளுக்கு..ஒரு சுற்றறிக்கையும்,எச்சரிக்கையும்..விடுத்துள்ளனர்..பாருங்கள்! அது வெந்த புண்ணில் வேல் குத்தும் சமாச்சாரம்!

"தமிழர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்..ராஜீவ் காந்தியையே கொன்றவர்கள்!'' என்பதே அந்த எச்சரிக்கை!



இது நம் நாட்டுப்பற்றை சோதித்துப் பார்க்கும் செயல்! நம்மை வெறுப்பேற்றும் செயல்!

மகாத்மா காந்தியைக் கொன்றது யார்..தமிழனா..வடவன் தானே? நீயே கொடூரன் அன்றோ?

எங்கும் நமக்கு அவமானம்..இழப்பு..ஏன்?

வீரம் மட்டும் இருந்தால் போதாது..
விவேகமும் கூடவே வந்தாலும் பத்தாது..
ஒற்றுமை இல்லையே..
கருத்துத்தொற்றுமை காணவில்லையே!


ஏனெனில்லை நம்மிடையே ..ஓற்றுமை?
சுயவிமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இப்போது..!
கூடி செய்வோம் தப்பாது!


ஆவேசப்பட்டு பலனில்லை. சரியான நேரம் வரும்வரை.பொறுமை காக்க வேண்டும்! நம் எதிரியைப் போன்றே!

நமக்கென்று ஒரேக் கருத்து தான்..பொதுக்கருத்து தான்..என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..ஏற்றுக் கொள்ள வெண்டும்!

வாருங்கள் ஒன்று கூடி வெற்றி மாலை சூடிடுவோம்!



Tuesday, September 11, 2012

விழிகள்...பேசுமே....மொழிகள்!


வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு'
என்றான் கவிஞன்!
விழிகள் பேசும்  அதை வருடும்  மனங்களைக் கண்டு'
என்கிறான் ரசிகன்!


இலக்கின்றி
வெறிக்கும் விழிகள்!
படபடக்கும் இமைகளோடு
கள்ளமறியா விழிகள்...

கவ்வி இழுக்கும்
காந்த விழிகள்...
மீண்டும் பார்க்கத் தூண்டும்
தெய்வீக மலர்கள்...
கடுப்பைக் காட்டும் தீக்கங்குகள்!

விழிகள்...பேசுமே....மொழிகள்!


வலையை வீசும்
குளத்து மீன்கள்..
மரபுகளைத் தாண்டி
மருளும் மான்கள்..!


எத்தனை எத்தனை மொழிகள்
படைக்கிறது
ஓசையின்றி  அவ்விழிகள்....!


அவை ஆரம்பித்த கதைகள் கணக்கில்லை...
சொல்லிய வார்த்தைகள் எண்ணவில்லை....
சொல்லாமல் விட்டவை இனிக்கவில்லை.....

அங்கே ஒலியில்லை..இசையில்லை
இலக்கணமில்லை..இணக்கம் மட்டுமே..
இலக்கியங்கள் மட்டும் ஏராளம்!
நினைவுகளோ தாராளம்!








Sunday, September 9, 2012

அஷ்வினுக்கு ஆபத்தா..இலங்கையில்?

 அடுத்த ஒரு வாரத்தில்..இலங்கையில் துவங்க இருக்கும்..ஐசிசி 20ஓவர்  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலைத் தூண்டியுள்ளது!

ஆனால் காலாண்டு தேர்வு சமயத்தில் இப்போட்டிகள் தொலைக் காட்சியில் ..அதுவும் படிக்கும் நேரத்தில் காட்சிக்கு வருவது.. பெற்றோருக்கு மிகுந்த எரிச்சலைத் தரக்கூடிய ஒன்றாகும்!

 20 ஓவர் போட்டிகளைப் பொறுத்த வரை,யார் ஜெயிப்பார்கள் என்பதைக் கணிப்பது மிகவும் கடினம்! குறைவான நேரத்தில்..விரைவாக ஆட வேண்டும் எனும் நிபந்தனை..வீரர்களின் இயல்பான ஆட்டத்தை பாதித்து விடுவதால் ..ஆட்டத்தின் போக்கை முன்னரே கணிக்க முடிவதில்லை..பெரும்பாலும்! சிறுசிறு தவறுகள் ஆட்டத்தின் முடிவை நிர்ணயம் செய்து விடுகிறது!

இந்திய அணி சமீபத்திய வெற்றிகளுக்குப் பிறகு சற்று துடிப்புடன் இருப்பதைப் போல் காணப்படுகிறது!
ஆனால்..இந்திய அணியில் ரசிகர்களின், "பார்வைக் குவியம்" மூன்று முக்கிய வீரர்களின் மீது படிந்து இருக்கிறது!

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கீமோதெரபி சிகிச்சையை அயல்நாட்டில் பெற்று மீண்டு வந்திருக்கும்..பஞ்சாப் சிங்கம்..இந்திய அணியின் காதல் நாயகன்..யுவராஜ்சிங்! மக்கள் தன் மேல் வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி சொல்லி அனுதாபப் பார்வையை உடைத்தெறியக் காத்திருக்கிறார்..அவருக்கு நம் வாழ்த்துகள்!

ஃபார்ம் இழந்து கேவலப்பட்டுப் போன..தோனியின் கார் நண்பன் ஹர்பஜன்சிங்..சமீபத்தில் தான் இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்து விட்டு வந்துள்ளார்! வாய்ஜாலக் கில்லாடி மட்டுமல்ல..என்னுடைய கையும்  ஜாலம் புரியும் என சுழற்றிய படியே காத்திருக்கிறார்..பந்தை!

 அஷ்வினுக்கு ஆபத்தா..இலங்கையில்?

ராஜீவ்காந்திக்கே சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்துவிட்டு, அணிவகுப்பு மரியாதையின் போது..சிப்பாயை விட்டு துப்பாக்கிக் கட்டையை, தலை மீது தாக்கத் துணிந்த..ராஜதந்திர மிக்க இலங்கை அரசிடம்..நாம் எதையுமே எதிர்பார்க்கலாம்!

சமீபகால சிங்கள பயணிகள் எதிர்ப்பு நிலையை எடுத்துவரும் தமிழக அரசு மற்றும் இன உணர்வு சக்திகளின் நடவடிக்கைகள்..இனவாத சிங்கள அரசுக்கு கடுப்பைக் கொடுத்திருக்கும் என்பது வெளிப்படை!
பழிக்குப்பழி நடவடிக்கைக்காகவும்..அடையாள எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகவும்..இந்திய அணியின் தமிழக வீரர் அஷ்வினை..யாரையாவது விட்டு, தாக்க திட்டமிடக்கூடும் என பலரும் எதிர்பார்க்கிறார்கள்! மேலும் இப்போட்டியைக் காணச் செல்லும்..தமிழக ரசிகர்கள் மேலும்..ஏதேனும் தாக்குதல் நடக்கலாம்!


 சிங்கள அரசின் அயோக்கியத்தன்மையைக் கொண்டே..இவற்றையெல்லாம் யூகிக்க வேண்டியுள்ளது..!

எதுவும் நடக்காமல் இருந்தால் மகிழ்ச்சி...நடக்காமல் இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்!

புத்தம் அங்கு இல்லையாததால்...சரணம்..கந்தசாமி!




Saturday, September 8, 2012

மம்முட்டியின் உதவியும்..விமர்சகர்களும்!

மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி எனும் முகமதுகுட்டி, சமீபத்தில் சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் காயம் பட்டோருக்கு, ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதற்காக, பல லட்சம் பொறுமான மருந்துகளை, ஒரு மருத்துவ நிறுவனம் மூலம் அளிக்க முன்வந்துள்ளார்!

மனிதாபமிக்க மகத்தான இந்த சேவை..பாராட்டுக்குரியது, வரவேற்புக்குரியது!

பொதுவாழ்வில் இருப்போர்க்கு..அவர்களுக்கு இருக்க வேண்டிய சமூக அக்கறையை..செயலால் உணர்த்தும்... .. ..மம்முட்டியின் இச்செயல்!


சுனாமியின் போது இந்திநடிகர் விவேக் ஓபராயின் முயற்சியை, ஒப்பிட்டு கூறத்தக்க வகையில் மம்முட்டியின் செய்கை அமைந்துள்ளது! லாபத்தை ஏதும் இவர்கள் கணக்கிடவில்லை..மனிதாபிமானம் ஒன்றே தான் இவர்களின் செயல்களுக்குப் பின்னால்!

மம்முட்டியின் இச்சேவை பெரும்பான்மை பாராட்டு பெற்றிருப்பினும், மக்களின் கோபம் தமிழ்நடிகர்கள் மீதான கடும்விமர்சனமாக உருமாறி வெடிக்கத் துவங்கியுள்ளது!

கும்பகோணம் பள்ளி தீக்கொடுமையின் போது, நிறைய வாக்குறுதிகளை அள்ளி வீட்டு, பிறகு அதை செயற்படுத்த முனையாத தமிழ்நடிகர்கள் மீதும், நதிநீர் இணைப்பிற்கு நிதி அளிப்பதாக அளந்த ஸ்டைல்நடிகர் மீதும் மக்களின் கோபக்கணைகள் திரும்பியுள்ளன!


பொதுவாகக் கலைஞர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள்..ஏதாவது வேகத்தில் சொல்லி விடுவார்கள்..பிறகு மறந்துவிடுவார்கள் என்றாலும், தங்களை வாழவைக்கும் அவர்கள் சிறிய அளவிலாவது தொண்டாற்ற வேண்டுமென, மக்கள் எதிர்பார்ப்பு!

சூர்யாவின் அகரம், கமலின் ரத்தசேவை, சசிகுமாரின் கல்விச்சேவை..இவைப்பற்றி கேவலமாக விமர்சீக்கும் மாற்றுக் கருத்தாளர்கள்...திரைக்கு முன்னாலும் அவர்கள் நடிகர்களே எனும் பிரச்சாரத்தை..கைவிட வேண்டும்!

 மம்முட்டியின் உதவியும்..விமர்சகர்களும்!
சமீபகாலமாக தலைநிமிர்ந்து வரும், இன உணர்வாளர்கள்..வெறுமென வீம்புக்காக மம்முட்டியின் செயல்களை எதிர்க்காமல்..பெருந்தன்மை நமக்குமிருக்கிறது என காட்டவேண்டிய நேரம்!

தேர்தலுக்கு பலகோடிகள் செலவளிக்கும் அரசியல் சக்திகள்..தங்களின் சேமிப்பின் சிறுபகுதியை போட்டி போட்டுக் கொண்டு கொடுத்து..வாழ்விழந்த மக்களுக்கு சிறுநம்பிக்கையை ஊட்டலாமே! அதற்கு மம்முட்டியின் இச்செவை ஒரு தூண்டுகோலாக அமையட்டுமே!





கடந்த ஒரு வருட காலமாக, இரு மாநிலத்தவர் இடையே ஏற்பட்டு இருக்கும் மனக்காயங்களுக்கும், மம்முட்டியின் இச்சேவை ஒரு காரணமானால் அது பாராட்டுக்குரியதே!

Friday, September 7, 2012

அனுபவங்கள்.. விருந்தாளிகள்!


சுகமும்...புதியன தெரிந்த ஆனந்தமும்
சோகமும்..அலைச்சலால் வந்த எரிச்சலும்
கோபமும்..எதிர்பாராத தாக்குதல்களும்
அன்பும்..பிரதிபலன்பாராத உதவிகளும்....

பற்பல அனுபவங்கள்..
நாள்தோறும்..வேளைதோறும்
அவைகள் விருந்தாளிகள்..
சிலவை அழையா விருந்தாளிகள்!

வயதில் உடலிலும் மற்றுமா ? 
அனுவத்திலும்..கிடைக்கும்..!
சில மாற்றம்..பல ஏமாற்றம்!

உறவிலும் நட்பிலும் கடமையிலும் தேவையிலும்
பயணத்திலும் பக்கத்திலும்..கிடைக்கும் படிப்பினையே அனுபவம்!

அனுபவங்கள்..  விருந்தாளிகள்!

முதன்முறை ஒன்றை புதிதாக எதிர்கொள்வதே..அனுபவம்!
தொடர்ந்தால்..பழகி விட்டால் அதுவே பழக்கம்!
பழக்கம் தொடர்வது..புது அனு பவத்திற்குத் தடைக்கல்..!

புதியப்புதிய எதிர்கொள்ளல்களே அனுபவம்!
அந்நியத்திலும் தொலைவிலும் தேவைகளாலும் அடைவது!
சிலவற்றை நோக்கியே நாம்..!
பலவை நம்மை சூழ்ந்து...
விரும்பியோ..கட்டாயத்தாலோ..தாட்சண்யத்தாலோ!

 அனுபவங்கள் விருந்தாளிகள்...விருந்தாளிகளால் அடைவது!
அதில் அழையா விருந்தாளிகளே அதிகம்!

புதுப்புது மனிதர்கள்..இடங்கள்
மாறும் காலங்கள்
மாறும் தலைமுறைகள்...
அனுபவக் களஞ்சியங்கள்..!
அவற்றில் சில கழுநீர் தொட்டிகள்!

மாற்றங்கள் சிரஞ்சீவி...மாறாதது!
மாற்றங்களே அனுபவங்கள்!
அனுபவங்கள் நல்ல ஆசான்கள்.. 
அடையாளம் காட்டும் ஆசான்கள்!

வாருங்கள் எதிர்கொள்வோம் அனுபங்களை!
இலக்கியமாக்கி படைத்திடுவோம்..இனியவைகளை!
எச்சரிக்கை பதிவுசெய்வோம்..கசடுகளை!



Wednesday, September 5, 2012

இன்ஸ்யூரன்ஸ் வேறு..இன்வெஸ்ட்மென்ட் வேறு!

இப்போ எல்லோரும் கொஞ்சம் விவரமாத்தான் இருக்காங்க...ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில சேரும் நபர்கள் குறைந்துவருகிறார்கள்! காரணம்..விலையேற்றத்திற்கு தகுந்த  வருவாய் கிடைப்பதில்லை..இத்திட்டங்களில்!

ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் சராசரியாக 6 சத அளவில் தான், வருவாய் கிடைக்கிறது..காப்பீட்டுத் தொகையின் அளவும் குறைவாகவே இருக்கிறது!

இன்று மருத்துவக் காப்பீடு அனைவருக்கும் தெரிந்த ஒன்று..பெரும்பாலான குடும்பங்கள் சேர்ந்து, பயன் பெறுகின்றன! அரசும் ஏழைக் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்துகிறது!

அடுத்து சுய இழப்புக் காப்பீடு தான்! அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும், 'டெர்ம் பாலிஸி" என்று தங்கள் திட்டத்தில் வைத்துள்ளார்கள்! ஆனால் கேட்டால் தான் சொல்வார்கள்! இன்று வலைப்பக்கங்களில் நிறுவனங்களையும்.திட்டங்களையும், சந்தாத் தொகைகளையும் ஒப்பிட்டு வைத்துள்ளார்கள்! அங்கு சென்று பார்த்து, நமக்குத் தேவையான திட்டங்களில், தொகைகளில் சேர்ந்து கொள்ளலாம்!

இன்ஸ்யூரன்ஸ் வேறு..இன்வெஸ்ட்மென்ட் வேறு!

டெர்ம் பாலிஸி என்பது வருடாவருடம் புதுபிக்கவேண்டும்..சந்தா கட்ட வேண்டும்! ஆனால் சந்தாத் தொகை மிகவும் குறைவு! பாலிஸி காலத்தில் அசம்பாவிதம் ஏற்பட்டால் பிடித்தங்களுடன் தொகை நம் வாரிசுக்கு கிடைக்கும்! ஒருவருட காலம் தான் அதன் வாழ்வு!

எவ்வளவு அளவிற்கு எடுக்க வேண்டும் என்றால்..அளவு ஏதும் இல்லை! ஆனால்..குறைந்தபட்சம் நம்முடைய மொத்தக் கடன் தொகைகள் அளவிற்காவது எடுப்பது நல்லது!

எந்த நிறுவனம் நல்ல நிறுவனம் என்பதில்..எண்ணக் குளறுபடி இருக்கும்..தயக்கமே வேண்டாம். பொதுத்துறை நிறுவனங்களையே நாடவும்!பிற்காலத்தில் பிரச்சனைகள் குறையும்!

இதில் மீதமாகும் நிதியை பொது சேமநல நிதி, தேசிய ஓய்வூதிய நிதிகளில் சேமிக்கலாம். அருகினில் உள்ள தபால் அலுவலகம்..மற்றும் அரசு சார்பு வங்கிகளை அணுகவும்!

 வேண்டும் நலம்!





Tuesday, September 4, 2012

கனகாவின் காலுக்கு வெள்ளிக் கொலுசு!


கனகாவின் கண்ணழகில் மயங்காதவர் உண்டோ?
ஸ்வர்ணலதாவின் இன்னிசையை வெறுப்பாரும் உண்டோ?

மலர்மாலை ஓரிரு நாளில் வாடிவிடுமென்று தானே..கண்ணே
கனகமாலையை உன் தோளில் தவழ விட்டுள்ளாய்!

கறுத்த உன்மேனிக்கு எடுப்பாய் இருக்குமென்று தானே
மஞ்சளழகியை காதிலும் மூக்கிலும் ஏற்றிருக்கிறாய்?

மஞ்சளுக்கெ இங்கு மவுசு..அதனாலெ என்னை உன்கழுத்தில்
தாலியாக்கி காத்து வருகிறாய்!

வெளுப்புத் தலையில் ஏறினால்..கம்பீரம் கூடுது
ஆனா..அழகும் இளமையும் போயிடும்!
அதனால..உன்னோட கால்களில் கொலுசாகவும்
மெட்டியாகவும் சத்தமிடுகிறாய்!


பெண்ணுக்கும் ஆணின் கண்ணுக்கும் தேவை
தங்கமும்..வெள்ளியும்!
பெண்ணின் முழுப்பரிமாணமும் வெளிப்படும்
இவைகளின் சேர்ப்போடு!

கனகாவின் காலுக்கு வெள்ளிக் கொலுசு!


வயது ஏறுவதைத் தடுக்க முடியாது.கூடவே
கனகவெள்ளியின் விலையையும்..!
அழகும் விலையும் கூடும் ..குறையும்.!.ஆனா
வயதும்.மதிப்பும் அதிகரித்துதான் செல்லும்!

மாசம் கொஞ்சம் வாங்குவோம்..ஒவ்வொரு
மாசமும் வாங்குவோம்..!
எல்லா விலையிலும் வாங்குவோம்! பயமா இருந்தா
EXCHANGE ETF    லும் வாங்குவோம்!








கொங்குநாட்டு அரிசிபருப்பு சாதம்!




அரிசிபருப்பு..பருப்பரிசி சாதம்னு எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்..நம்ம விருப்பம் போல!

எங்க காங்கேயம் காளைக..அதிகமா வெளியில மேயாதுக..பருப்பரிசி சாதவாசனைய புடிச்சா, எங்க சுத்துனாலும் வூட்டுக்கு ஓடி வந்துடுங்க!
வாரத்துல ரெண்டு..மூணு தடவைக்குக் குறையாம, ஒவ்வொரு வூட்லயும் இத செஞ்சுடுவாங்க! பக்கவாத்யங்களோட ஆளாளுக்கு, மினி/மேக்ஸி ஹாட் பாக்ஸ் சாப்பாட்டை வெட்டிப்புடுவாங்க!

கண்ணால வூடுகள்ல கூட இந்த சாதத்தை பரிமாற ஆரம்பிச்சுட்டாங்கன்னா..பாத்துகோங்கோ..இதோட மகிமைய!

This One is nothing but.. Kongu version of BisibelaBath!


சாம்பார் சாதம், பிஸிபேளா பாத் மாதிரிதான், இந்த பருப்பரிசி சாதமும்..ஆனா..அதை யெல்லாம் மெய்ன் கோர்ஸா சாப்பிட முடியாது.! பருப்பரிசி சாதத்தை மெயின் கோர்ஸாக சாப்பிடலாம்!



ரெஸிபி மற்றும் செய்முறை! 

* புழுங்கல் அரிசி 2கப் + பருப்பு -அரை கப்..ரெண்டையும் ஒண்ணா சேர்த்துக் கழுவி, வடிக்காம 45 நிமிஷம் ஊற வைக்கணும்!

பருப்புன்னா..துவரம் பருப்பு தான்! துவரைக்கு பதிலா அவரைப்பருப்பு போட்டோம்னா..அது தனி டேஸ்ட்! மூணு தடவை துவரம்பருப்பு போட்டு செஞ்சோம்னா ஒரு தடவை அவரைப்பருப்பு போட்டு செய்யலாம்! பாசிப்பயிறு போடறவங்களும் உண்டு! அவங்க அவங்க டேஸ்ட் பட்ஸ்க்கு ஏத்த மாதிரி!

* எலுமிச்சை அளவுக்கு புளிய எடுத்து ஊறவெச்சு, வடிச்சு கரைசலை எடுத்து தனியா வெச்சுக்கோங்க!

* சின்ன வெங்காயம் உரிச்சது 100கி, மிளகாய் வத்தல் - 4, தக்காளி (நீளமா நறுக்கி) - 1, தாளிப்பு அயிட்டங்கள், உப்பு..மிளகாய் பொடி, பட்டை- சிறுசு, கிராம்பு - 1, சீரகம் - கொஞ்சூண்டு!


செய்முறை 1 / முதல்லய தாளிச்சுட்டு, பொறவு சாப்பாட்டையும் அதே குக்கர்ல சமைக்கிறது! எல்லாமும் உடனே முடிஞ்சிடும்..வேலை கம்மி!பிரியாணி மாதிரியே தான்!

செய்முறை 2 / சாதத்தை மட்டும் சமைச்சிட்டு, பொறவு வாணலியில தாளிக்கறது..ஃப்ரைட் ரைஸ் போல!வேலை ஜாஸ்தி..எண்ணெய் அதிகம்..டேஸ்டும் அதிகம்!

கொங்குநாட்டு அரிசிபருப்பு சாதம்!



 முதல் முறையிலே செய்வோம்!

* குக்கர்ல 50மில்லி ஆயில் + பட்டை + கிராம்பு + சீரகம் + கடுகு + மிளகாய் வத்தல் + சின்னவெங்காயம் + கறி வேப்பிலை ..வரிசைப்படி..ஒவ்வொண்ணா சேர்த்து வதக்கணும்! 3-4 Mins.

* புளிக்கரைசல். (அரை கப்).கல்லுப்பு..மிளகாய்த்தூள்..மஞ்சத்தூள் எல்லாம் வரிசைப்படி சேர்க்கணும்..! 2-3 Mins.

* அடுத்து தண்ணி சேர்க்கணும்..ஒரு கப் அரிசிக்கு ரெண்டரை கப் தண்ணி..அப்ப ரெண்டுகப்புக்கு 5 கப் தண்ணி! பருப்புக்கு தண்ணி கணக்கு இல்ல! அரிசிக்கு மட்டும்தான்!கூடவே தக்காளியையும் போடுங்க!

* உப்புக்காரம் எல்லாம் சரி பாருங்க..!

* தண்ணி நல்லா கொதிச்சு பொங்கும்போது..ஊறவெச்ச அரிசி+பருப்பை குக்கர்லெ சேர்த்துடுங்க!

* நல்லா கலந்து விடுங்க..தண்ணி முக்கால் பாகம் சுண்டுனதுக்கு பொறவு..மூடி போட்டு உடனே வெயிட் போடுங்க..3- 4 நிமிஷம் மட்டும் ஹைல எரியவிட்டு, 10 நிமிஷம் சிம்மில் வெச்சிடுங்க!

* அடுப்பை அணைச்சிடுங்க..ஆவி அடங்குற வரைக்கும் மூடியத் திறக்காதீங்க..(15நிமி)..பிறகு திறந்து, கலந்து கொத்துமல்லி தூவி பரிமாறுங்க!

ரெண்டாவது முறை!

* புளிக்கரைச்சல், தண்ணி,உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சத்தூள் மட்டும் போட்டு..கொதிக்க வெச்சு அரிசிபருப்பு சேர்த்து சாதம் தயாரிக்கணும்!

*  பிறகு வாணலியில தாளிப்பு ஐட்டங்களை சேர்த்து, சாதத்தை வாணலியில் கொட்டி, ப்ரைட்ரைஸ் போல தயாரிக்கணும்! 


பக்க வாத்யங்கள்!

 அப்பளம், வடாம், பப்படம், அவிச்ச முட்டை, உருக்குன நெய் , தயிர், பூண்டு ஊறுகாய், இஞ்சிப்புளி சட்னி,இன்னும் பலப்பல..மனம் போல!


 எச்சரிக்கை! 

சாப்பிட்டு 10 - 15 நிமிடத்தில் பலன் தெரியும்..நித்ராதேவி மெல்ல அணைத்துக் கொள்வாள்!

இதுதான் ஒரிஜினல் கொங்கு முறை அரிசிபருப்பு சாதம்! மத்ததை நம்பி ஏமாந்து போனா..கம்பெனி பொறுப்பல்ல!





Monday, September 3, 2012

மாத்தி யோசி!

 ஒவ்வொருத்தரும் தங்கள் கருத்தை, மத்தவங்களுக்கு பிடிக்குதோ..இல்லையோ போகுற போக்குல சொல்லிட்டுப் போறாங்க!அதை கொஞ்சம் மாத்தி யோசிச்சதுன்னால, வந்த வினைங்க இது! வேணும்னா ..நீங்களும் இதிலிருந்து மாத்தி யோசிங்களேன்!

இப்படித்தான்  சகோதர யுத்தம் பத்தி கலைஞர் அய்யா..பேசப்போயி, நம்ம நெடுமாறன் அய்யா..ஆரம்பிச்சு வெச்சதே நீங்கதான்னு பத்திரிக்கையில பேட்டி கொடுத்துட்டாரு!

சகோதர யுத்தம் நடந்தது உண்மைன்னு நெடுமாறன் ஒத்துக்கிட்ட மாதிரி அல்லவா ஆயிடுச்சு.!

இலங்கை விஷயத்துல கலைஞரை கும்முறது அல்லாருக்கும் அல்வா சாப்பிடற மாதிரி ஆனதினால..சரித்திர மேற்கோள் எல்லாம் காட்டி, இவரும் தாளிச்சிருக்கார்..!
அதுல பாருங்க..கலைஞர்
சொன்னதுனால தான் சகோதர சண்டை ஆரம்பிச்சதுன்னா..கலைஞரை இனத்தலவர்ன்னு ஏத்துக்கிட்ட மாதிரி அல்ல ஆகுது.? சண்டைய ஆரம்பிச்சு வெச்சவருக்கு முடிச்சு வைக்கத் தெரியாதா...வந்து பஞ்சாயத்து பேசி தீர்த்திருக்கலாமே?

இவரு சொல்ற தேதிக்கு முன்னாலயே, மெட்ராஸ் பஜார் வீதியில ஒருத்தர் மேல ஒருத்தர் கொளுத்திப் போட்டுக்கிட்டது....கலைஞர் அய்யா சொல்லிக் கொடுத்துங்களா நெடுமாறன் அய்யா?


பேராசிரியர் அன்பழகன் அய்யாக வேற கோபமாகி..எங்க ஆட்சியில தினமும் 2 மணிநேரம் தான் வெட்டு..வெளியில கரண்டு வாங்கி எப்படி சமாளிச்சோம்?அதுக்கே (கொ)கத்துனீங்க! இப்ப 12 மணிநேர வெட்டுக்கே வாய் மூடிமவுனியா இருக்கிறீங்களேன்னு..மக்கள் மேல கோவப்பட்டு இருக்காரு!

 ஆட்சி ஆரம்பிக்கும்போது அஞ்சாயிரமா இருந்த மின்வாரியக் கடன் முடியும்போது அம்பதாயிரம் கோடியாயிடுச்சே! வருஷம் வட்டியே அஞ்சாயிரம் கோடி கட்டணுமே! வட்டிய கட்றதா..கடனக் கட்றதா..புது உற்பத்திய பெருக்கிறதா..இப்படி நட்டாத்துல உட்டுட்டுப் போய்ட்டீங்களே..நியாயமா?அதெல்லாம் இருக்கட்டும்..அந்த கொண்டைக்கார ஆட்சிக்காரர் கிட்ட பேசி..நம்ம அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி வாங்கிக் கொடுங்க..அது போதும்!

மாத்தி யோசி!

உலகத்துலேயே சுலபமான வேலை எதுன்னு சொல்ல வேண்டியதில்ல..வெண்ணைய வெட்றது! அதவிட சுலபமான வேலை இருக்கு..அதான் 100நாள் வெட்டிவேலைத் திட்டம்!
அந்தகாலத்துல வறட்சி,வெள்ளம்,பூகம்பம் வந்தா..மக்களுக்கு சும்மா அரசுப் பணத்தைக் கொடுக்கக்கூடாதுன்னு "நிவாரண வேலை"ன்னு சொல்லி சின்ன சின்ன வேலைகளைக் கொடுத்து,சம்பளம்னு கொடுப்பாங்க..கொஞ்ச நாளைக்கு!

இந்த ஓட்டுவங்கி அரசியல்..ஜனங்களை ரொம்ப பதமா..இதமா கவனிச்சுக்கிது..இந்தமாதிரி திட்டங்கள்னால! எந்த ஒரு வேலைக்கும் குறைந்தபட்ச ஊதியம், இன்னிக்கு ரூ200ன்னு ஆயிடுச்சு..இந்தத் திட்டத்தினால வந்த பொதுப்பலன்..நற்பலன்னு சொல்லலாம்!

மழைகம்மியானதால..வேலை கிடைக்காதுன்னு முடிவு பண்ணி..100 நாளை 150ன்னு ஜாஸ்தியாக்கலாமான்னு பேச்சு ஓடிட்டு இருக்கு! ஏற்கெனவே..விவசாய வேலை இருக்கும்போது ஆளுங்க அரசு வேலைக்குப் போய்டறாங்க..ஆள் தட்டுப்பாடு..!
இன்னம் விவசாயமே செய்ய வேண்டாம்னு அரசு சொல்ற மாதிரியில்ல இருக்கு? எங்க பஞ்சமோ அங்க மட்டும் உசத்திட்டு, மத்த இடத்துல அப்படியே வெச்சுக்கலாமே!

இந்த அரசு 150நாள் பிக்னிக்கை ரோட்டோரத்துல வெக்கறதுக்கு பதிலா..விவசாயக் காட்டுல வெச்சுக்கிட்டா..விவசாயமும் நல்லா நடக்குமுல்ல..என்ன நான் சொல்றது..! மலையாள சேட்டன்க ஏற்கெனவே இப்படித்தான் பண்றாங்களாம்!


அரசு ரூ132,விவசாயி ரூ132 கொடுத்தா..அடா அடா..கிராமப்புற பொருளாதாராம் பிரமாதமா..பறக்குமே..செய்வீகளா..?

அம்மாவுக்கு ஐடியா இருக்குன்னு சொல்லிக்கிறாங்க..விரைசலா ஆர்டர் வரோணுமே!


அஸ்ராகார்க் எஸ்பி மூணே மாசத்துல திருப்பூரை விட்டு மாத்திட்டீங்க..நேர்மையான அதிகாரிங்க,ஆர்வக் கோளாறுல சின்னசின்ன குளறுபடிகள் செய்யறதுதான்..ஒரு வருஷமாவது ஒரு இடத்துல போட்டிங்கன்னா..கொஞ்சம் ஊரு சுத்தமாகும்.

மறுபடியும் சந்திப்போமுங்க! வணக்கமுங்கோ!