Saturday, August 18, 2012

என் பார்வையில்....!


ஒரு ஞானி..விஞ்ஞானியாகும் ஆவலை, பெருந்தீயிட்டுக் கொளுத்திப் போட்டாயிற்று!இதுவரை கண்டதில்லை...இது போல எதிர்ப்பை..அதுவும் நேரடியாக! எதிர் அம்புகள் எத்தனை வந்தாலும் அதை லாவகமாக சந்தித்து புறம் தள்ளியவர்..! தானும் உடன்பிறப்புகளின் மூலமும் பல கணைகளை,  இதுகாறும் தொடுத்துக் கொண்டிருப்பவர்..!

 நானும் இளமையானவன் என்று காட்டி கொள்ளவும், சமூக வலைதளங்களில் இளசுகளை தொடர்பில் வைத்திருக்கவும் கலைஞர்  சமூகவலை தளங்களான..முகநூல்,கீச்சர் களில் கணக்கு ஆரம்பித்தார்!


கிளம்பி வந்த விமர்சன அலைகளை தலைவர் இதுகாறும் கண்டிருக்க மாட்டார் போல...எதிர்ப்பே இல்லாமல் எழுத இது முரசொலியுமில்லை..திரைப்பட வசனமும் இல்லை என, "கண்டு கொண்டார்..கண்டு கொண்டார்"!

விலகினார்..விடை பெற்றாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

உடம்பிறப்பே..கொடுமதியாளர் அதை புறமுதுகு காட்டுதல் என்கின்றனர்...அது புறநானூறு என்பதை நீ அறிவாய்..! பாரடா என் செல்லமே எத்தனை விழுப்புண்கள் என்று!(என்னா அடி)!


என் பார்வையில்....!


 பள்ளி மாணவர் மரணங்கள்!

இந்தக் கொடுமைகள் தொடர்வது அழகல்ல..கும்பகோணம் பள்ளி தீவிபத்துக்குப் பின்னும், பள்ளிக் குழந்தைகள் படிக்கச் செல்லும் இடத்தில் பலியாவது மிகுந்த ஆற்றாமையைத் தருகிறது!

பள்ளிகள் பெருகி வந்தாலும், சில குறிப்பிட்ட பள்ளிகளில் பெற்றோர் போட்டி போட்டுக் கொண்டு மாணவர்களை சேர்ப்பதால், கும்பல் அதிகமாகி விடுகிறது. மாணவர்கள் மீதான கண்காணிப்பு மிகவும் குறைந்து விடுகிறது. 

கல்ல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கைக்  கட்டுப்பாடு வைப்பது போல் இனி பள்ளிகளிலும் அதன் வசதிகளுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கைக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட வேணும்!


ஈரோட்டு ராஜாவின் மேடைப் பேச்சு!

டெசோ மாநாட்டாலும், சந்தர்ப்ப வாதத்தாலும் தன் தலைவனின் மேல் தரக்குறைவான விமர்சனம் வருவதைக் கண்டு, ஆவேசப்பட்டு மறைந்த ஈழத் தலைவர்களின் மேல், சமீபத்தில் ஈரோடில் திமுகவின் முன்னாள் மந்திரி என்.கே.கே.பி.ராஜா கக்கிய வார்த்தைகள் கன்டனத்துக்குரியது!

அவர் பேசியதில் சில உண்மைகள் இருக்கலாம்..ஆனால் நொந்து நைந்து போன ஒரு சமூகத்தை, வதைப்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல!


 வடகிழக்கு மாநிலத்தவர் வெளியேற்றம்!

பர்மாவில் வங்க முஸ்லீம்கள் மீதான தாக்குதல்..அஸ்ஸாமில் நாலு மாவட்டங்களில் பரவி..பழிதீர்ப்பதற்காக பம்பாய் முஸ்லீம்களின் வன்முறைகளுக்கு தீனி போட்டு...தென் மாநிலங்களின் தலைநகரங்களை நம்பி வந்த வடகிழக்கு மாநிலத்தவரை, பதட்டமாக்கி கூண்டோடு வெளியேற்ற வைத்துள்ளது..!

இதன் பின்னால் ஒளிந்திருப்பது..அறிவியல் வளர்ச்சி...இணையமும்,கைப்பேசியும்! வதந்தி வைரஸ் கிருமிகளைத் தாங்கி விரைவில் பரப்புகின்றன!

இதில் இனி மத்திய அரசின் இலவசக் கைப்பேசித் திட்டம் வேறு! இதன் பின்னால் 2ஜி யின் அடுத்த கட்ட ஏலம் வேறு உள்ளது!


மழையின்மை!

பஞ்சம் என்பதே என்ன என்று தெரியாத நிலையில் நாடு சுபிட்சமாக் உள்ளது! விவசாயமும், தொழில்களும் அழிக்கப்பட்டுக் கொண்டுள்ளன! அதிகம் உழைக்காமல் அதிக வருவாய் வேண்டுவோர் அதிகரித்து விட்டனர்! கட்டிடத் தொழில் மட்டுமே செழித்து உள்ளது! 

நுகர்வுக் கலாச்சர்ரத்தின் பிடியில் மதிமயங்கித் திளைத்துக் கொண்டிருக்கும் மானுட இனத்திற்கு இயற்கையின் நியதிகளை நியாபகமூட்டம் வண்ணம்,,மழை பெய்யாமல் போகிறதோ!

கனிமவளக் கொள்ளை!

மாநிலத்தில் மணலும்.கிரெனைட் கல்லும்.!.மத்தியில் நிலக்கரி! நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆட்சியாளர் மேல் ஏற்கெனவே ஊழல் கறை!

முதலில் சொத்துக்களைப் பறிமுதல் செய்து விட்டு, பிறகு வழக்குகளை நடத்த வேண்டும்! இனிவரும் ஊழல்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாக வேண்டும்!
"Pending inquiry seizures are must!

மம்தாவின் பேச்சு!

போராளி இமேஜைத் தனக்குக் கொடுத்துக் கொள்ள போராடும், மமதா தீதி முரட்டு அராமியாகத் தெரிகிறார்! தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்ட விவசாயிக்கு, ஜாமீன் மறுப்புக் கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றத்தையே," தீர்ப்புகள் விலைபோகிறது" என்று வர்ணித்தமை..தான் தலைவி அல்ல ..தவளை தான் என நிரூபிக்கிறது!

நீதிமன்ற அவமதிப்பு  செய்த தீதி மேல் நடவடிக்கை இல்லையெனில்..அது மேற்கோட்டுத் தனமாகிவிடும்..இனிமேல் வரும் இது போன்ற வழக்குகளுக்கு..இதுவே உதாரணமாகிவிடும்! யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்றாகிவிடும் . சொல்லமுடியாது..நீதிமன்ற விமர்சனம் தவறில்லை என்று தீதி சட்டம் போட்டாலும் ஆச்சரிமில்லை!

 மீண்டும் வருகிறேன் !



6 comments:

  1. தற்போதைய நிகழ்வுகளை தங்கள் பார்வையாக
    பதிந்தவிதம் அருமை.தொடர வாழ்த்துக்கள்
    குறிப்பாக..


    கிளம்பி வந்த விமர்சன அலைகளை தலைவர் இதுகாறும் கண்டிருக்க மாட்டார் போல...எதிர்ப்பே இல்லாமல் எழுத இது முரசொலியுமில்லை..திரைப்பட வசனமும் இல்லை என, "கண்டு கொண்டார்..கண்டு கொண்டார்"

    ReplyDelete
  2. நண்டு @நொரண்டு -ஈரோடு!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வக்கீல் சார்!

    ReplyDelete
  3. Ramani Sir!

    ஒரே நளில் ஓடிப் போனவர் என்ற அவச்சொல் நீங்க, தலைவர் மீண்டும் முகநூல் தளத்தில் குதித்துவிட்டாராம்..இன்றையத் தகவல்!

    ReplyDelete
  4. நிகழ்வுகளின் தொகுப்பு அருமை! நன்றி!

    இன்று என் தளத்தில்
    அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
    http://thalirssb.blogspot.in/2012/08/180.html
    பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html

    ReplyDelete
  5. படித்{ததை}து தெரிந்துகொண்டோம்...

    நல்லது தொடருங்கள்...

    ReplyDelete