Saturday, August 18, 2012

என் பார்வையில்....!


ஒரு ஞானி..விஞ்ஞானியாகும் ஆவலை, பெருந்தீயிட்டுக் கொளுத்திப் போட்டாயிற்று!இதுவரை கண்டதில்லை...இது போல எதிர்ப்பை..அதுவும் நேரடியாக! எதிர் அம்புகள் எத்தனை வந்தாலும் அதை லாவகமாக சந்தித்து புறம் தள்ளியவர்..! தானும் உடன்பிறப்புகளின் மூலமும் பல கணைகளை,  இதுகாறும் தொடுத்துக் கொண்டிருப்பவர்..!

 நானும் இளமையானவன் என்று காட்டி கொள்ளவும், சமூக வலைதளங்களில் இளசுகளை தொடர்பில் வைத்திருக்கவும் கலைஞர்  சமூகவலை தளங்களான..முகநூல்,கீச்சர் களில் கணக்கு ஆரம்பித்தார்!


கிளம்பி வந்த விமர்சன அலைகளை தலைவர் இதுகாறும் கண்டிருக்க மாட்டார் போல...எதிர்ப்பே இல்லாமல் எழுத இது முரசொலியுமில்லை..திரைப்பட வசனமும் இல்லை என, "கண்டு கொண்டார்..கண்டு கொண்டார்"!

விலகினார்..விடை பெற்றாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

உடம்பிறப்பே..கொடுமதியாளர் அதை புறமுதுகு காட்டுதல் என்கின்றனர்...அது புறநானூறு என்பதை நீ அறிவாய்..! பாரடா என் செல்லமே எத்தனை விழுப்புண்கள் என்று!(என்னா அடி)!


என் பார்வையில்....!


 பள்ளி மாணவர் மரணங்கள்!

இந்தக் கொடுமைகள் தொடர்வது அழகல்ல..கும்பகோணம் பள்ளி தீவிபத்துக்குப் பின்னும், பள்ளிக் குழந்தைகள் படிக்கச் செல்லும் இடத்தில் பலியாவது மிகுந்த ஆற்றாமையைத் தருகிறது!

பள்ளிகள் பெருகி வந்தாலும், சில குறிப்பிட்ட பள்ளிகளில் பெற்றோர் போட்டி போட்டுக் கொண்டு மாணவர்களை சேர்ப்பதால், கும்பல் அதிகமாகி விடுகிறது. மாணவர்கள் மீதான கண்காணிப்பு மிகவும் குறைந்து விடுகிறது. 

கல்ல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கைக்  கட்டுப்பாடு வைப்பது போல் இனி பள்ளிகளிலும் அதன் வசதிகளுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கைக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட வேணும்!


ஈரோட்டு ராஜாவின் மேடைப் பேச்சு!

டெசோ மாநாட்டாலும், சந்தர்ப்ப வாதத்தாலும் தன் தலைவனின் மேல் தரக்குறைவான விமர்சனம் வருவதைக் கண்டு, ஆவேசப்பட்டு மறைந்த ஈழத் தலைவர்களின் மேல், சமீபத்தில் ஈரோடில் திமுகவின் முன்னாள் மந்திரி என்.கே.கே.பி.ராஜா கக்கிய வார்த்தைகள் கன்டனத்துக்குரியது!

அவர் பேசியதில் சில உண்மைகள் இருக்கலாம்..ஆனால் நொந்து நைந்து போன ஒரு சமூகத்தை, வதைப்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல!


 வடகிழக்கு மாநிலத்தவர் வெளியேற்றம்!

பர்மாவில் வங்க முஸ்லீம்கள் மீதான தாக்குதல்..அஸ்ஸாமில் நாலு மாவட்டங்களில் பரவி..பழிதீர்ப்பதற்காக பம்பாய் முஸ்லீம்களின் வன்முறைகளுக்கு தீனி போட்டு...தென் மாநிலங்களின் தலைநகரங்களை நம்பி வந்த வடகிழக்கு மாநிலத்தவரை, பதட்டமாக்கி கூண்டோடு வெளியேற்ற வைத்துள்ளது..!

இதன் பின்னால் ஒளிந்திருப்பது..அறிவியல் வளர்ச்சி...இணையமும்,கைப்பேசியும்! வதந்தி வைரஸ் கிருமிகளைத் தாங்கி விரைவில் பரப்புகின்றன!

இதில் இனி மத்திய அரசின் இலவசக் கைப்பேசித் திட்டம் வேறு! இதன் பின்னால் 2ஜி யின் அடுத்த கட்ட ஏலம் வேறு உள்ளது!


மழையின்மை!

பஞ்சம் என்பதே என்ன என்று தெரியாத நிலையில் நாடு சுபிட்சமாக் உள்ளது! விவசாயமும், தொழில்களும் அழிக்கப்பட்டுக் கொண்டுள்ளன! அதிகம் உழைக்காமல் அதிக வருவாய் வேண்டுவோர் அதிகரித்து விட்டனர்! கட்டிடத் தொழில் மட்டுமே செழித்து உள்ளது! 

நுகர்வுக் கலாச்சர்ரத்தின் பிடியில் மதிமயங்கித் திளைத்துக் கொண்டிருக்கும் மானுட இனத்திற்கு இயற்கையின் நியதிகளை நியாபகமூட்டம் வண்ணம்,,மழை பெய்யாமல் போகிறதோ!

கனிமவளக் கொள்ளை!

மாநிலத்தில் மணலும்.கிரெனைட் கல்லும்.!.மத்தியில் நிலக்கரி! நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆட்சியாளர் மேல் ஏற்கெனவே ஊழல் கறை!

முதலில் சொத்துக்களைப் பறிமுதல் செய்து விட்டு, பிறகு வழக்குகளை நடத்த வேண்டும்! இனிவரும் ஊழல்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாக வேண்டும்!
"Pending inquiry seizures are must!

மம்தாவின் பேச்சு!

போராளி இமேஜைத் தனக்குக் கொடுத்துக் கொள்ள போராடும், மமதா தீதி முரட்டு அராமியாகத் தெரிகிறார்! தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்ட விவசாயிக்கு, ஜாமீன் மறுப்புக் கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றத்தையே," தீர்ப்புகள் விலைபோகிறது" என்று வர்ணித்தமை..தான் தலைவி அல்ல ..தவளை தான் என நிரூபிக்கிறது!

நீதிமன்ற அவமதிப்பு  செய்த தீதி மேல் நடவடிக்கை இல்லையெனில்..அது மேற்கோட்டுத் தனமாகிவிடும்..இனிமேல் வரும் இது போன்ற வழக்குகளுக்கு..இதுவே உதாரணமாகிவிடும்! யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்றாகிவிடும் . சொல்லமுடியாது..நீதிமன்ற விமர்சனம் தவறில்லை என்று தீதி சட்டம் போட்டாலும் ஆச்சரிமில்லை!

 மீண்டும் வருகிறேன் !



Saturday, August 11, 2012

உன் பார்வை போலே.. !


 நான் அல்ல!

 காரணம் கண்கள்!
கண்களின் பாவை...
காணுமே பார்வை!
அழகாய்க் காட்டும் காலமும்
காரணம்!




ஏன் என்கிறாயா..
எப்படித் தவிர்ப்பது
என்னால் முடியவில்லை...!
எங்கெங்கும்
எழில்கள்!







கறுப்பில் ஒளி ஊடுறுவுமாமே
அது பொய்..!
உன் கண்ணில் பட்டுத் தெரிக்கிறதே!
தெரித்த ஒளி பட்டு கண்ணின்
வெண்மை சிவப்பானதோ?
என் கண்ணைப்பார் ..நீலமாக உள்ளதல்லவா
வானத்தைப் போல!
 உன் பார்வை போல..என்பார்வை தெறிப்பதில்லை!
காட்சிகள் கண்ணை ஊடுருவி விடுகின்றன!
காட்சிகள் அல்லவா..
கலைந்துவிடுகின்றன..
நிலைபெறுவது உன்னில்தான்!என் கண்களை விட்டுவிடு..
என்னை விடாதே..விலக்காதே!

உன் பார்வை போலே.. !



எவ்வளவு சொல்லியும்
உன்னைக் காயப்படுத்திய ....

அளவில்லா அம்பெய்யும்
 என் கண்களை
தண்டிக்கிறேன் பார்!

நாளின் மூன்றிலொரு காலம்
திறக்கக் கூடாது என்றும்
கனவில் அம்பு விடக்கூடாது என்றும்!






 உன்னிலும் உண்டு..
உன்னில் மட்டும் இல்லை
உன்மேல் அதிகம் உண்டு..!






Thursday, August 2, 2012

ஆடிப் பதினெட்டும் பாலங்களும்!

 தென்மேற்குப் பருவக்காற்று ஆரம்பிச்ச ஒரு மாசத்துல,  பொள்ளாச்சிலே எந்திரவியல் பட்டயப்படிப்புக்கு சேர்த்துவுட்டாங்க..அப்படியே ஹாஸ்டல்யும் மூணு பேர் இருக்குற அறையில் அடைச்சுட்டாங்க...திரும்பிப் பார்க்குறேன்..என்னோட பத்தாப்பு படிச்ச பய முக்கால் பேண்ட் போட்டுட்டு நிக்கிறான்.."வாடா ரேங்க் வாங்குன நீயும்,குறைச்ச மார்க் வாங்குன நானும்..ஒரே காலேஜ், ஒரே ரூம்'னு வெறுப்பேத்துனான்!

கோவமா வந்தாலும், தெரியாத தேவதைக்கு தெரிஞ்ச பேயே பரவாயில்லன்னு சமாதானம் பண்ணிக்கிட்டேன்...ஆளு கொஞ்சம் சிறுசானாலும்,நம்மள விட உலகஞானம் ஜாஸ்தின்னு போகப் போக தெரிஞ்சது!


இப்பெல்லாம் பசங்க, ஒருநா க்ளாஸுக்குக் கட் அடிக்கவே பயப்படறானுக..புதுப்படம் ரிலீஸ் ஆனாலோ இல்லே படப்பிடிப்பு டீம் காலேஜ்க்கு எதுக்கால இருக்குற பயணியர்விடுதியிலெ வந்து இறங்குனாலோ, ' மாஸ் கட்" தான்!
அதுலேயும் 'மண்டே மாஸ்கட்" ரொம்பப் பிரபல்யம்!
ஆடிப் பதினெட்டும் பாலங்களும்!
ஹாஸ்டல்ல காலைல 6 மணிக்கு சீனியர் பக்கத்து அறைகளில் இருந்து கூட்டமா விசில் சத்தம், தொடர்ச்சியா 5 நிமிஷத்துக்கு விடாமக் கேட்கும்..அதான் சிக்னல்! நேரா மெஸ்ஸுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு, 8 மணிக்கெல்லாம் எல்லோரும் வெளியா போயிடணும்.பஸ்ஸுல வர்ற வெளிப்பசங்கள கேட்லயெ நிறுத்தி, கூட்டிட்டுப் போயிடுவாங்க!

மொதல்ல கண்டிச்ச நிர்வாகம், பசங்க பண்ற குறும்பப் பார்த்து மாசத்துல 2 நாளைக்கு மேல கட்' அடிக்கக் கூடாதுன்னு எழுதப்படாம ஒப்பந்தம் ஆயிடுச்சு!

அந்த வருஷம் ஆடிப்பதினெட்டுக்கு, ஊருக்குப் போகவிருந்த என்னை,நம்ம ரூம்மேட் தொல்லை பண்ணி..ஆழியார்டேமுக்குக் கூட்டிட்டுப் போயிட்டான்! ஏண்டா...அவனோட போணோம்னு ஆயிடுச்சு!

காதலிக்க நேரமில்லை படத்துல ரேடியோப் பெட்டிய பார்க்ல இருக்குற சின்ன பாலத்துலெ இருந்து, ராஜஸ்ரீ போடுவாங்க இல்ல..அதே பாலத்து மேல நானும்..அவனும் நின்னுட்டு இருந்தோம்!

பொண்ணுங்க கூட்டம் ஒண்ணு கடந்து போச்சு..உடனே நம்ம தொல்லை என்ன பண்ணினான் தெரியுமா...ஜன்னல் வெச்சு, பஃப் கை ஜாக்கெட் போட்ட ஒரு பொண்ணப் பார்த்து, " டிசைன் பாப்பா டிசைன்" நு கத்திட்டான்!

அப்புறம் ரொம்பப் பாவமா மூஞ்சிய வெச்சுட்டு நின்னுட்டான்..அந்த பொண்ணுக திரும்பி பக்கத்துல இருந்த நான் தான் கத்துனேன்னு தெளிவா முடிவு பண்ணிட்டாளுக..! கொஞ்ச நேரம் கடுமையா மொறச்சுப் பாத்தாளுக..ஒண்ணுமே பேசல..போயிட்டாளுக!
நமக்கு வாழ்க்கையே வெறுத்திருச்சு..குசும்புக்காரன் அடக்க முடியாம சிரிக்கிறான்! அன்னிக்கு முடிவு பண்ணதுதான்..கூட்டமா பசங்களோட பராக்குப் பாத்துட்டு நிக்கிறதில்லன்னு!


நீங்களும்..பார்த்துங்க..ஆடி 18 அன்னிக்கு பாலத்துக்குப் பக்கம், தொல்லைகளோட போகாதீங்க..
ஆனா..தனியா போங்க!