அவ்வப்போது அடக்குமுறை தண்ணீர் ஊற்றி
அணைத்தாலும் ,
தெலுங்கானா தீக்கங்கு முழுதும் அடங்காது
உள்ளே எரிந்து கொண்டே
இருக்கிறது..
எரிமலை போல !
ஏன் மாநிலப் பிரிவினைக் கோரிக்கை எழுந்தது
என்பது எல்லாம் பழங்கதை !
இரண்டாகப் பிரிக்கலாமா என கமிஷன் போட்டு ,
ஆராய்ந்த போது ,மூன்றாகப் பிரிக்கலாம்
என ஆலோசனை சொல்லப்பட்டு
செம ரகளை தான் போங்கோ !
ஹைதரபாத் தலையாக தெலுங்கானா ...
விஜயவாடா தலைஊராக சர்க்கார்..
கடப்பா தலைநகரமாக ராயலசீமா ..
இந்தி பேசும் வடமாநிலங்களை எளிதில் பிரித்தனர் !
ஆந்திரா விஷயத்தில் தடுமாறுகின்றனர் ..!
செய்திகள் வரும் போக்கைப் பார்த்தால் ஆந்திரமாநிலப்
பிரிவினை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதைப் போல்
தோன்றுகிறது ! எந்த நேரத்திலும் அறிவிப்பு வரலாம் !
ஆந்திர மாநிலப் பிரிவினை செய்தி உறுதி ஆனாலும் ,
செயல்படுத்த சிலபல ஆண்டுகள் ஒதுக்குவார்கள் என
நம்பப்படுகிறது !
ஆந்திரா பிரிவினை உறுதி என்றால்
அடுத்து மேலும் சில மாநிலங்கள் வரிசையில் உள்ளன !
முதலாவது ...மராட்டியம்
பிறகு குஜராத் ....ம்ம்ம் நம்ம ஆளுக
சும்மா இருப்பாங்களா ..சேர்த்திகுவோம் !
குஜராத்தில் சௌராட்டிரம் மற்றும் மராட்டியத்தில் விதர்பா
என ஏற்கனவே பேச்சு ஓடிட்டு இருக்கிறது !
இங்கேயும் சிலபல கட்சித்தலைங்க்க வடக்கு தெற்கா
பிரிக்கணும் னாங்க ! கொங்குநாடு வேணும் னாங்க !
அவங்களுக்கு எல்லாம் உடனே அவசர வேலை வந்திடும் !
இருக்கவே இருக்கு காரணங்கள் :
1. எங்கள் பகுதி முன்னேறவில்லை !
2. எங்களுக்கு ஆட்சியில் அதிகாரத்தில்
பங்கு கிடைப்பதில்லை !
3. இரண்டாக வேண்டாம் ..முன்றாக பிரி !
போராட இங்கு விஷயமா இல்லை ..!
இது எல்லாம் நடந்திடும் னு சொல்லலை !
நடக்க வாய்ப்பு இல்லைன்னு சொல்ல முடியலை !
அப்படி இங்கே பிரச்சனை ..கோரிக்கை எழுந்தால்
எவ்வாறு விஷயங்கள் ஓடும் என சில கற்பனைகள் !
1. சக ட்விட்டர் சொன்னது :
காவிரிக்கு வடக்கு, தெற்காக பிரிப்பது !
2. சேர ,சோழா , பாண்டிய , பல்லவ நாடுகள் !
3. வன்னிய,கொங்கு , பாண்டிய நாடுகள் !
அனுமானங்கள் சிலசமயம் உண்மையாக
நடந்திடில் ரசனை மிக்கதாய் மாறிடும் வாய்ப்பு !
பொறுத்திருந்து பார்ப்போம்.. என்ன தான் ஆகும் என்று !
ஆடி மாத வாழ்த்துக்கள் !
எதுக்கா..?
இது கடா விருந்து மாசமன்றோ ..அசைவர்களுக்கு!
விரத மாதமன்றோ ...பெண்டிருக்கும், ஆன்மீகருக்கும் !
எனக்குப் பிடித்த பாடல் அது உமக்கும் பிடிக்குமே !