Friday, September 28, 2012

தமிழர் ஆபத்தானவரா?

 ஆங்கிலேயர் தான் இந்தியாவை உருவாக்கினர் என்பது மிகையன்று.!.பல்வேறு சிறிய,பெரிய சமஸ்தானங்களை ஒன்றிணைத்து.ஒரு குடையின் கீழ்... அவர்களே கொண்டு வந்தனர்!..அது சரித்திரம்!

 வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது..சொன்னவை.." விரைவில் இந்தநாடு உள்நாட்டுப் போரில் சிதைந்து..மீண்டும் பலதுண்டுகளாக உடைந்து போகும்" என்பதேயாகும்!

வல்லபாய் படேலின் சீறிய முயற்சியால் நாடு, பிணைக்கப்பட்டு..65 வருடங்களாக உறுதியாகி வருகிறது!

நாட்டுப்பற்று நம் உடலில் ஊற்றி வளர்க்கப்பட்டது...
மொழி வாயிலாக..
ஊற்றியது தமிழ்!

 வெற்றிவேல்..வீரவேல் என்றிருந்த நம்மை" வாழிய பாரத மணித்திருநாடு" என்று பாவலர்..மாற்றிப் பேச வைத்தனர்..!
இயல்பாக அது நம்மிடம் ஏற்றுக் கொள்ளப்பட்டது!
ஏனெனில் இதுகாறும் நாட்டின், அண்டைப் பரப்புகளிடம் நமக்கு தொன்றுதொட்டு இருந்துவந்த பந்தம்!

தமிழர் ஆபத்தானவரா?

ஈழத் தமிழர் மற்றும் அவர்களின் தலைவர்கள்...மத்திய ஆளும்கட்சித் தலைமையின் எண்ணத்தின்படி, பழிவாங்கப்பட்டதாக..நம் இன ஆர்வலர்களால் கடுமையாக குற்றம் சாட்டப்பட்ட போதும்..பெரும்பாலோனார் அதைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை!

சமீபத்தில் அந்த நாட்டுப்பற்றுக்கு சோதனை ஒன்று வந்துள்ளது..! வடவர் மூலமாக!
மையாட்சியாளர் மட்டுமல்லாமல்..பொதுவாக வடவர் அனைவருக்கும்..தமிழர் மேல் ..நம்நாட்டவர் என்ற மதிப்பும்..அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை என்பதை...உணர்த்தும் விதமாக சமீப கால நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்!

கொடுங்கோலன் ராஜபக்ஷேவை அழையாதீர்..விரட்டுகள் என்று நம் மாநில ஆட்சியாளரும்..கட்சியாளரும், இனவாளரும் கதறியதை..கூக்குரலிட்டதை..தேசியக் கட்சிகள் புறக்கணித்தன!

நம் மாநில மக்களின் உணர்வை..கொடுங்கோலன் எதிர்ப்பின் மூலமாக உணர்த்தச் சென்ற..வைகோவை..வடவர்..எல்லையிலே மறித்ததோடு மட்டுமல்லாமல்..பாதுகாப்புப் படைகளுக்கு..ஒரு சுற்றறிக்கையும்,எச்சரிக்கையும்..விடுத்துள்ளனர்..பாருங்கள்! அது வெந்த புண்ணில் வேல் குத்தும் சமாச்சாரம்!

"தமிழர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்..ராஜீவ் காந்தியையே கொன்றவர்கள்!'' என்பதே அந்த எச்சரிக்கை!



இது நம் நாட்டுப்பற்றை சோதித்துப் பார்க்கும் செயல்! நம்மை வெறுப்பேற்றும் செயல்!

மகாத்மா காந்தியைக் கொன்றது யார்..தமிழனா..வடவன் தானே? நீயே கொடூரன் அன்றோ?

எங்கும் நமக்கு அவமானம்..இழப்பு..ஏன்?

வீரம் மட்டும் இருந்தால் போதாது..
விவேகமும் கூடவே வந்தாலும் பத்தாது..
ஒற்றுமை இல்லையே..
கருத்துத்தொற்றுமை காணவில்லையே!


ஏனெனில்லை நம்மிடையே ..ஓற்றுமை?
சுயவிமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இப்போது..!
கூடி செய்வோம் தப்பாது!


ஆவேசப்பட்டு பலனில்லை. சரியான நேரம் வரும்வரை.பொறுமை காக்க வேண்டும்! நம் எதிரியைப் போன்றே!

நமக்கென்று ஒரேக் கருத்து தான்..பொதுக்கருத்து தான்..என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..ஏற்றுக் கொள்ள வெண்டும்!

வாருங்கள் ஒன்று கூடி வெற்றி மாலை சூடிடுவோம்!



10 comments:

  1. எனக்கிருந்த நம்பிக்கை போய்விட்டது. இனி ஒன்றும் செய்ய முடியாது.நம்மை பலவாறாக ஜாதி மதம் கட்சி என்று பிரித்துவிட்டார்கள் நம் சுயநல அரசியல்வாதிகள். வேறு வழியில்லாமல், வாழ்க்கையை எதிர்கொள்ளமுடியாமல் இனி எதிர்காலத்தில் கூட்டம் கூட்டமாக சேர்ந்து கொள்ளையடிப்பார்கள். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கொள்ளை கூட்டத்தில் சேர்ந்தால்தான் பிழைக்க முடியும் என்று வலுக்கட்டாயமா தள்ளபடுவார்கள். ரொம்ப சீர்கெட்டு போய்விட்டது நாடு. கடவுள்தான் காப்பாற்றணும். யாராவது தட்டி கேக்கட்டுமே. உடனே நீ என்ன யோக்கியனா என்று எதிர் கேள்வி கேட்டு திசை திருப்பிவிட கற்றுக்கொண்டு விட்டார்கள். தேச நன்மைகளைவிட்டு ஊடகங்களும் லாபம் சம்பாதிக்கும் வியாபார்களாகிவிட்டனர். அன்று வெள்ளையனிடம் அடிமையா இருந்தோம் இன்று வடநாட்டினரிடம் அடிமையாய் உள்ளோம். என் காலம் போர்க்காலம் கடந்து வந்து விட்டேன். எதிர்கால இளைய சமுதாயத்தினரை எண்ணினால் பரிதாபமாக உள்ளது. நன்றி.

    ReplyDelete
  2. chinnapiyan Sir!

    அவ்வாறு மூத்தவர் விட்டுச் செல்லக்கூடாது! களப்போர் செய்வதை இளைஞர்களுக்கு கொடுத்துவிட்டு..வழிநடத்தும் உரிமையை எடுத்துக் கொள்ள வேண்டும்! இளைஞர்களைக் கட்டுப் படுத்த வேண்டும்!

    வீரம்..விவேகம்..திட்டமிடல்..பொதுநலம் எல்லாமும் கூடினால் தான் ..இலக்கை அடையமுடியும்!

    நம்பிக்கைதான் வாழ்க்கை..! நம்பினோர்க்கு தோல்வியில்லை!

    மிக்க நன்றி அண்ணே!

    ReplyDelete
  3. தி.மு.க திராவிட நாடு கேட்டது, நமது இந்தி எதிர்ப்பு, விடுதலைப்புலிகளுக்கு தமிழர்கள் ஆதரவு போன்றவற்றை அவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை....புரியவைத்து விட்டால் பிரச்சனை தீர்ந்தது.
    அதற்க்கு ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.
    நடக்குமா....நடக்கும்....காத்திருங்கள்...காட்சிகள் மாறும் :)

    ReplyDelete
  4. R.Puratchimani Sir!

    இனிமேல் தனிக்கட்சி ஆட்சி என்பது சிலகாலம் வரை மத்தியில் வர வாய்ப்பில்லை! 40 தமிழக உறுப்பினர்கள் ஒரே சிந்தனையில்..தமிழர்/க நலனுக்குக்காக செயல் பட்டால் சாதிக்கலாம்! 40 உறுப்பினர்களும் எந்தக் கூட்டணி ஆட்சிக்கு வருகிறதோ அதற்கு மாறிக் கொள்ள வேண்டும்! யார் நகைத்தாலும் வெட்கமில்லை! மாநிலநலன் ஒன்றே குறியாக வேண்டும்!

    மிக்க நன்றி..நண்பரே!

    ReplyDelete
  5. நல்ல கருத்துக்கள்...

    ஓற்றுமை...

    /// பொறுமை காக்க வேண்டும்! நம் எதிரியைப் போன்றே...! ///

    நன்றி...

    ReplyDelete
  6. திண்டுக்கல் தனபாலன் sir!

    உங்கள் வருகை எனக்குப் பெருமை! நன்றி!

    ReplyDelete
  7. நன்றுரைத்தீர்.. நயமிக்க கருத்துரைத்தீர் :)

    ReplyDelete
  8. கலாகுமரன் Sir!

    தங்கள் வருகை தந்தது மிக்க உவகை!

    நன்றி!

    ReplyDelete
  9. இந்தியா என்ற மாயை உடைய வேண்டும்;தமிழக அரசியல் சக்கிதிகள் ஒன்று இணையவேண்டும்

    ReplyDelete
  10. Palani Chamy Sir!

    இநத மத்திய ஆட்சியாளர்களின் செயல்கள் இது போலவே தொடர்ந்தால்..நம் ஆயுட்காலத்திலேயே அந்நிலை வந்தாலும் ஆச்சரியமில்லை!

    நன்றி!

    ReplyDelete