Wednesday, December 14, 2011

புதுசு கண்ணா புதுசு !

இது என்னுடைய ஐம்பதாவது பதிவு!

புதுசு ..யாருக்குப் பிடிக்காது? அதுக்காக
பழசு யாருக்குமே புடிக்காதுன்னு அர்த்தமாகாது!
என்ன பழசும் ஒரு காலத்துல, புதுசாத்தான் இருந்திருக்கும்!
ஆனா நாம அதுகூட பழகி பழகி பழசாயிருக்கும்!

புதுசுன்னு எப்படித் தெரியும்னா ..
மனசுக்குள்ள மலர்ச்சியைக்
கொண்டு வர்றதெல்லாமே புதுசுத்தான்!
உறவு , குழந்தை , துணிமணி, வாகனங்கள், வசதிகள்,
மழை, ஊர் ,வசிப்பிடம் இப்படி எவ்வளவோ...
சொல்லிட்டே போகலாம்!

புதுசுகள மனசுக்கு ஏன் புடிக்குதுன்னா..
வட்டத்துலையே வளைய வரதுன்னால,
நம்மகூட இருக்குற பழசு மேல ஒரு சின்ன சலிப்பு!
நான் சொல்ல வந்தது நம்ம உடம்பப் பத்தி !



எப்பவுமே மனசு மட்டும் பழசு ஆகறது இல்ல ..!
ஆகவும் கூடாது !
மனசும் உடம்பும் பழகரதுல உடம்பு மட்டும் பழசாயிடுது!

உடம்பு பழசாகுரத தடுக்க முடியாது !
ஆனா தள்ளிப் போடலாம்!
எப்படின்னா.... மனச புதுசாவே வெச்சுக்கணும்!

மனசு புதுசாவே இருக்கணும்னா ..அதுக்கு
இதமா சேதி சொல்லிட்டே இருக்கணும் !



இன்னிக்கு நம்ம மனசு இதமா இருக்குற மாதிரி ஒரு சேதி கிடைச்சது !

சொல்லப்போனா..குடும்பத்துல, நட்புல,ஊர்ல உறவுல ..எங்கேயாவது
நம்மள பாதிக்கிற மாதிரி ஒன்னு நடந்த்ததுன்னு யோசிச்சோம்னா ..
அங்க "கேன்சர் /புத்து நோயோட "பங்கு கண்டிப்பா இருக்கும்!

உடம்புல வர்ற 70 சத கேன்சர் நோய் வகைகள, வராம தடுக்குற மாதிரி,
ஒரு "ஸுப்பர் வேக்சினை " அமெரிககா ஜியார்ஜியா பலகலையில கண்டு பிடிச்சிருக்காங்க! 2020 ம் வருஷத்துல நடைமுறைக்கி வந்துடும்னு சொல்லியிருக்காங்க!

ஏதோ காரணத்தால உடம்புல ஒரு பகுதி செல்லுங்க கன்னாபின்னான்னு முறையற்ற வளர்ச்சி அடைஞ்சி, அந்த பகுதிய செயலிழக்க செய்யறது : பிறகு குளுக்கோஸ் முகமுடி போட்டுக்கிட்டு ,நோய் எதிர்ப்பு அரணுக்கு டிமிக்கி கொடுத்துட்டு மத்த பக்கமும் பரவ ஆரம்பிச்சுடுது !

இந்த வேக்சின், இந்த மாதிரி "ரோக் செல்கள " கண்டு பிடிக்க, நோய் எதிர்ப்பு அரணுக்கு சொல்லி கொடுத்து, பெரும்பாலானவற்றை அழிச்சு உடம்ப காப்பாத்திவிடுது!

இந்த புது சேதி சொன்னது ஹிந்து பிசினஸ் லைன்!
மனசுக்கும் உடம்புக்கும் இதமான சேதி!

மனசுக்கு இதமா ஒரு பாட்டு பாருங்க!




24 comments:

  1. புதுசு கண்ணா புதுசு !

    ReplyDelete
  2. சேதி தெரிந்தது நன்றி மாப்ளே!

    ReplyDelete
  3. புதிய தகவலை இனிய பாடலுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்.மேலும் பல
    புதுசு புதுசா பல விஷயங்கள் எங்களிடம் விதைக்க வேண்டுகிறோம்

    ReplyDelete
  5. இராஜராஜேஸ்வரி !

    மேடம்! முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  6. விக்கியுலகம்!

    மாமு! சேதி தெரிந்து இதமானதுக்கு நன்றி!

    ReplyDelete
  7. கோகுல்!

    உங்கள் கருத்துக்கள் மனதுக்கு இதம்!நன்றிகள் பல!

    ReplyDelete
  8. பதிவு நல்லா இருக்கு.. 2020 வரைக்கும் காத்திருக்கனுமா?..

    ReplyDelete
  9. புதிய தகவல் மனதிற்கு உற்சாக மூட்டுவதாய் இருந்தது
    மனசை புதிதாக வைத்துக் கொண்டாலே உடலும்
    பழசாவது உறுதியாய் தள்ளிப் போகும்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 3

    ReplyDelete
  10. 50 வது பதிவிற்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்
    இது நூறாய் ஆயிரமாய் வளர்ந்து பெருக வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. அம்பாளடியாள்//

    சகோதரியின் வரவிற்கும், உற்சாகத்திற்கும் நன்றிகள்!

    ReplyDelete
  12. கோவி//

    வாருங்கள் கோவி! சோதனைகள் முடிந்து வெளிவர நாள் பிடிக்கும்! கவலைப்படாதீங்க! ஜெனரிக் வெர்ஷன் முறையில் மருந்துகளை இந்தியக் கம்பெனிகள் முன்னரே தயாரித்து விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

    ReplyDelete
  13. Ramani//

    நண்பரின் வாழ்த்து மனதிற்கு மிகவும் இதமளிக்கிறது! நன்றிகள் பல!

    ReplyDelete
  14. நண்டு @நொரண்டு //

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  15. மனதுக்கு உரமூட்டும்
    தைரியமூட்டும்
    அருமையான புதிய தகவல் நண்பரே.

    ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    தமிழ்மணம் 5

    ReplyDelete
  16. மகேந்திரன் //

    தங்கள் வருகையினாலும் கருத்துகளினாலும் மகிழ்வுற்றேன்! தொடர்புக்கு நன்றி!

    ReplyDelete
  17. ஐம்பது நூறாகி,நூறு ஆயிரமாக வாழ்த்துகள்!

    ReplyDelete
  18. //இது என்னுடைய ஐம்பதாவது பதிவு!//

    50௦-வது பதிவுக்கு வாழ்த்துகள் சார்.. இன்னும் பல பதிவுகள் தந்து முத்திரை பதிக்க மேலும் வாழ்த்துகள் !

    ReplyDelete
  19. //உடம்புல வர்ற 70 சத கேன்சர் நோய் வகைகள, வராம தடுக்குற மாதிரி,
    ஒரு "ஸுப்பர் வேக்சினை " அமெரிககா ஜியார்ஜியா பலகலையில கண்டு பிடிச்சிருக்காங்க! 2020 ம் வருஷத்துல நடைமுறைக்கி வந்துடும்னு சொல்லியிருக்காங்க!//

    சில தினங்களுக்கு முன் ஒரு சேதியை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. அது இரத்தப் புற்று நோய்க்கு (லுகேமியா) மருந்து உண்டு என்றும், அதன் பெயர் 'Imitinef Mercilet' என்றும், அது "Adyar Cancer Institute in Chennai"- இல் இலவசமாக கிடைக்கிறது என்றும் கூறுகிறது..(Medicine for Blood Cancer (Lukemia)!!!! 'Imitinef Mercilet' is a medicine which cures blood cancer. Its available free of cost at "Adyar Cancer Institute in Chennai". )

    ReplyDelete
  20. //மனசு புதுசாவே இருக்கணும்னா ..அதுக்கு இதமா சேதி சொல்லிட்டே இருக்கணும் !//

    வரவேற்கப்பட வேண்டிய கருத்து.. 50 திலும் (பதிவு) ஆசை வரவேண்டும் என்பதை சூசகமாக உணர்த்தியதற்கு நன்றி.. மனது சந்தோசமாக, இளமையாக இருந்து விட்டாலே முதுமை தோன்றது... என்றும் தங்களைப் போல் (திருப்பூர்) குமாரனாக பட்டைய கிளப்பலாம்.. வாழ்க..!

    ReplyDelete
  21. சென்னை பித்தன்//

    ஐயாவின் ஆசிகளுக்கு நன்றி!

    ReplyDelete
  22. Advocate P.R.Jayarajan//

    தங்களின் மேலதிக தகவல்களுக்கும், பாராட்டுதலுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி!

    ReplyDelete