Monday, July 30, 2012

வருமோ மதுவிலக்கு?



ஊரெங்கும் பரபரப்பு...கொளுத்திப்
போட்டது சிறுநெருப்பு..!
புலனாய்வுப் பத்திரிக்கையாம்..
சின்ன ஆனந்தனாம்..
வைத்தானய்யா.. வெடி வேட்டு!
வைதானய்யா.. எல்லா தட்டு!


தீ'ரா விடக் கூத்தாடி... வாயாடி
மயக்கினரே தமிழ் மக்களை!
தேனெடுத்து புறங்கையை நக்கிவிட்டு
மதுர ருசிகண்டு மதி மயங்கி
கிறங்கிய வேளையிலே...




சுதந்திர தாகம் அடங்கி
கால்நூறாண்டு தவமிருந்த
தமிழ்க்குடிமன்களின் தாகமறிந்து
கருணை' கொண்டு..தாயுள்ளத்தோடு
கள்ளுப்பாலை வார்த்த
தனிப்பெரும் இனக்காவலனே ..!
அவர்தம் வாழ்த்தே உன்னை நீடூழி
வாழ்வைக்கிறது!


ஜனத்திலகமும் கனகதாரைகையும்
கருணைத்தொகையை மிஞ்சினர்
செல்வாக்கிலும்..
அள்ள அள்ளக் கொடுத்த
அமுதபானத்திலும்!

 வருமோ மதுவிலக்கு?

கழுதைக்கு வயசு பத்தாம்..
அறிமுகமாகி ஆச்சே நாலுகழுதை வயசு!
தாத்தன்,அப்பன்,பிள்ளை,பேரன்..
இதுதான் அந்த நாலு கழுதையும்!
எவனுக்கும் பாலு பிடிக்கறதில்ல..தக்காளி
விவசாயிங்க கொட்ராங்க பாலை ரோட்ல !


பசும்பால்..எருமைப்பால்
பருத்திப்பால்..தாய்ப்பால்

இதெல்லாம் டூப்பு..!
பார்லிப்பாலே டாப்பு!
புளிச்சக் கரும்புப்பாலே சேர்ப்பு!





பிரம்மன் தலையில தான் எழுதுவான்..
தமிழ்க்குடிமகன் ஜீன்லேயே எழுதிட்டான்!

கமிஷன் கிடைக்காதவனும்
வாந்தி எடுக்குறவனும்
வயசுப்புள்ளக்காரனும்
வயசுக்கு வராதவனும்
காட்டுக்குப் போறவனும்..
குடிக்கிறதில்ல..மத்தவன்?

அட..நீயும்தாம்பா அதுல..!

விலக்கிட்டு நாளைலே இருந்து
தப்பு..தண்டனைன்னு சொன்னா..
இதுநாள் வரைக்கும் கடையத் திறந்து
பரிமாறிக் கொடுத்த அறிஞர்களுக்கு
கொடுக்கணும்..தூக்கு! 

நேத்து நீ செஞ்சே..அது தப்பு!

இன்னிக்கு அரசும், நீயும் சேர்ந்து செய்யறிங்க..
அதுனால அது தப்பில்ல!

நாளைக்கு நீ மட்டும் செஞ்சா அது தப்பு!
அப்ப தப்பு யார் மேல?..மகாஜனங்களே சொல்லுங்க தீர்ப்பு!




இன்று விலக்கப்படுவது..நாளை அமலாகும்..!
இங்கு விலக்கப்படுவது..வேறொரு ஊரில் வழக்கில் இருக்கும்..!
எங்கும் விலக்கப்படுவது யாதாயினும், இங்கும் விலக்கலாம்!
இங்கு மட்டுமே விலக்கம்..எங்கும் தாராளம் எனில்..இங்கு மட்டும் எதற்கு விலக்கம்!

உடனடித் தேவை விலக்கம் அல்ல விளக்கம் தான்!

Tuesday, July 24, 2012

நட்பின் அவசியமும், அவசிய நட்பும்!

நட்பின் அவசியமும், அவசிய நட்பும்!


 அறிமுகம் அம்மாவின் மூலம் ஆரம்பம்..முதல்ல அப்பா..ஏறக்குறைய ரெண்டு பேரையும், குழந்தைகள் DNAவாசனையை வைத்துக் கண்டுபிடித்துவிடுகின்றன!..வளர வளர..எடுக்கும், அரவணைக்கும் கைகளை அம்மாவின் உதவியோடு இனம்   கண்டு கொள்கிறது! உறவுமுறைகளை உணர்ந்து கொள்கிறது!

 எடுக்கும் கைகளில் குழந்தை மாறிமாறி செல்கையில் மனிதர்களில் மாற்றத்தை உணருகிறது! வீட்டிலிருந்து வாசலுக்கு  வருகையில் 'நட்பு' அறிமுகமாகிறது..சக குழந்தைகள் மூலம்!

பள்ளிக்குச் செல்லுமுன் உடன்பிறப்புகள் வந்துவிட்டால் நலம்! விட்டுக் கொடுத்தல் என்பது புரிந்து விடும்!சகோதரங்களுடன் வளரும் குழந்தை அனுசரித்துப் போகப் பழகிக் கொள்கிறது!
அனுசரிப்பே பிறமனிதர்களோடுக்கூடிய பரிவு,அன்பு,பழக்கம்,பாசம் ஆகியவற்றின் அடிப்படை!


அனுசரிப்பு எனும் அடிப்படையின் ஆதாரம்..எண்ணங்களின்,விருப்பங்களின்,செயல்களின் -- 'அலைவரிசை' !

அலைவரிசை ஏற்புடையாதாக இருப்பின் அனுசரிப்பு இயல்பாகிறது.!..பலசமயம் அலை மோதும் அலைவரிசை, ஈகோ எனும் சுயமேலெண்ணத் தடையால்.!.காலமும்,அவசியமும் அத்தடையை உடைத்து, கட்டற்ற அலைவரிசையை 'பண்பலை'யாக மாற்றித் தருகிறது!

 விதை செடியாகி,மரமாகி மணம் வீசுவதைப் போலவே நட்பும்!
மரம் பூக்கும்,காய்க்கும்,கனிதரும் அதே சமயம் நோயும் தாக்கும்! அதையெல்லாம் தாங்கியும் வளரும்..நட்பும்!




நட்பும் எதிர்பார்க்கும்..சிலசமயம் அவசரத் தேவையை..ஆனால் பெரும்பாலும் 'சமத்துவ'த்தை!வர்க்க,இன,பால்,வயது,அந்தஸ்து எது தடுத்தாலும், நடத்தையில், எண்ணங்களின் வெளிப்பாட்டில் நட்பு எதிர்பார்க்கிறது 'சமத்துவத்தை!'

நம் இடத்தை விட்டு வெளியில் சென்றால்"நட்பின்" உதவியின்றி எதையும் சாதிக்க முடியாது! சாதிப்பது பிறகு.. சரிவர நடைமுறைக்கு அவசியம் 'நட்பு'!
நட்பே நமக்கு வாழ்க்கையைக் கற்றுத்தரும்..வழிநடத்தும்!

நட்பு புதுவித பலத்தைக் கொடுக்கும்! போராடத் துணிவைக் கொடுக்கும்! விட்டுக் கொடுப்பதை, அதனால் மனங்களை வென்றெடுப்பதை சொல்லிக் கொடுக்கும்!



ஒரே பகுதியில் வசித்தோமெனில் நீண்டநட்பு கிடைக்கும்..ஆனால் எண்ணிக்கையில் குறைவிருக்கும்!
இடம்மாறும் வாழ்க்கையில் நட்பில் பலமிருக்காது..அவசியமே மேலோங்கி இருக்கும்..ஆனால் எண்ணிக்கையோ பலமடங்கு.!இங்கு நட்புகள் மறையும்..புலரும்..சூரிய சந்திரரைப் போல!

நட்பு வெளிப்படுவது கருத்து பரிமாற்றத்தில்..முக்கியமாக அளவளாவதில்...! தடை அதிகமில்லா சுதந்திர எண்ணப் பரிமாறல்கள் நட்பில் மட்டுமே சாத்தியம்!
இரு(ற)ந்தாலும் நம்மை சுமப்பது நட்பே!

நட்பு புன்னகையில் ஆரம்பித்து,தலைமுறைகளில் தொடர வேண்டும்!
நம்மால் முடிந்தவரை நிறைய நட்புகளை சம்பதிப்போம்!







Monday, July 2, 2012

என்னதான் நடக்கும்..நடக்கட்டுமே!

 ஒரு நாடோ,வீடோ வளமுடன் இருக்கிறது என்றால் வரவு அதிகரிக்க வேண்டும்..செலவு அதிகரிக்கக் கூடாது! முன்னால் பிறந்தவன் அண்ணன்..பின்னால் வந்தவன் தம்பி என்னும் ஒப்பற்ற அப்பாயிஸக் கொள்கை (தங்கப்பதக்கம் சோ) போன்று எளிமையானதே வளமாயிஸத் தத்துவமும்!


நாட்டின் வருவாயை அதிகரிக்க ஒரேவழி வரிகள்!வரிவருவாயை அதிகரிக்க இருவழிகள்! ஒன்று - வரிகளை அதிகரிப்பது: இரண்டு - நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியை அதிகரித்து, விகிதாசாரப்படி அதிகவரியாகக் கிடைப்பது!

வரிகளை ஓரளவிற்கு மேல் உயர்த்துவது பலனளிக்காது.கம்பியை ரொம்ப முறுக்கினால் உடைந்துவிடும்!எனவே இருக்கும் ஒரே வழி - உற்பத்தியைப் பெருக்குவது!

அரசாங்கத்தின் வேலை - உற்பத்தியை வருவாயைப் பெருக்க சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பது!தற்போது வணிகம் உலகமயமாக்கப்பட்ட சூழலில், பொருட்களின் விலைகள் அனைத்தும் உலகம் முழுவதும் ஏறக்குறைய ஒரே அளவில்! உள்நாட்டு பொருட்கள் எனில் அரசாங்கம் எளிதில் கட்டுப்படுத்தலாம்..ஆனால் கச்சா எண்ணெய்,உலோகங்கள் விலைகளின் நிர்ணயம் உலகச் சந்தையின் கைகளில்!

என்னதான் நடக்கும்..நடக்கட்டுமே!




தேவைகளை அனுசரித்தே விலைகள்! தேவை அதிகரிக்கும் போது விலைகளும் அதிகரிக்கிறது! தேவைகளின் அதிகரிப்பு சதம் சீராக இருக்க வேண்டும்! ஆனால் நாட்டில் நுகர்வுக் கலாச்சாரத்தின் தாக்கத்தின் விளைவாக, தேவைகள் சதம் தாறுமாறாக உயர்ந்துள்ளது! உதாரணமாக கச்சா எண்ணெயும்,தங்கமும்!


உற்பத்தி வருவாயை அதிகரிப்பவை தொழிற்சாலைகளும்,விவசாயமும் தான்!கடந்த பலவருட சீரான வளர்ச்சிக்குப்பின் இந்தவருட தொழிற்வளர்ச்சி விகிதம் தடாலடியாகக் 6சத அளவிற்குக் குறைந்துள்ளது..அதே சமயம் பணவீக்கத்தின் வளர்ச்சி 10 சத அளவில் உள்ளது!

தொழிற்சலைகள் அடிவாங்குவதற்குக் காரணிகள் - உலகப் பொருளாதார மந்தம், மின்பற்றாக்குறை(சுமார்50சதம்),மாசுக்கட்டுப்பாடுகள்,வேலைஆட்கள் தட்டுப்பாடு, அதிகவரிகள் மற்றும் செலவீனங்கள்!

விவசாயத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்.வேலைஆட்கள் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது.வெட்டித் திட்டமான ஊரக வேலைத்திட்டம் விவசாயிகளை அலற வைத்துக் கொண்டுள்ளது!விதை/உரம் தட்டுப்பாடு/விலையேற்றம் மேலும் கால்வாய்பாசன வசதியில்லா விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்காமை, விற்பனை பொருட்களுக்கு இடைத்தரகர் சரிபங்கு கேட்பது என பலதடைகள்..விவசாயம் வேகமாக செத்துக் கொண்டுள்ளது!


மறுபக்கம் செலவீனங்கள் அதிகரிப்பு - கவர்ச்சித்திட்டங்கள், மானியங்கள், ராணுவச் செலவுகள், அரசு அதிகாரிகளுக்கு அள்ளித்தருதல்,ஆடம்பரச் செலவுகள்,அதிகரிக்கும் இறக்குமதி..!

வரவு குறைகிறது ..அல்லது அதிக மாற்றமில்லை..ஆனால் செலவோ எகிறுகிறது...முடிவில் வணிகப்பற்றாக்குறை அதிகரிக்கிறது..பற்றாக்குறையை சமாளிக்க நோட்டு அச்சடிக்கப்படுகிறது..பணத்தின் மதிப்பு சரிகிறது!

அயல்நாட்டு முதலீடுகளை அதிகரித்தால் பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்கலாம் என்று அரசு அவர்களை பலசலுகைகளைக் காட்டி ஊக்குவிக்கிறது.ஆனால் உளநாட்டுத் தொழில்களுக்கு அதே சலுகைகள் மறுக்கப்படுகிறது..மேலும் உள்நாட்டுத் தொழில்களுக்கு கட்டுப்பாடும்/தட்டுப்பாடும் அதிகரிக்கப்படுகின்றது..உதாரணமாக மின்சாரம்.மற்றும் மூலப்பொருட்கள்!

ஆடம்பர செலவுகளை கட்டுபடுத்துவதும், முதலீடுகளை உற்பத்தியைப் பெருக்குவதில் இடுவதிலும், வீடு/நுகர் பொருட்களுக்கான செலவுகளுக்கு கடன் வழங்குவதைக் குறைப்பதும், அரசுசம்பள அளவைக் கூட்டாமல் இருப்பதும்,கவர்ச்சி/வெட்டித் திட்டங்களுக்கு மானியங்கள் தருவதைக் குறைப்பதும்......
.நீ ண்டகால பயனளிப்பவை!

தற்போது டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 58 வரை சென்று 56ல் இருக்கிறது.இது மேலும் குறைந்து 52 வரை வருவதற்கு வாய்ப்புள்ளதாக மும்பை பணச்சந்தை வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன!(டிஸ்கி: வியாபாரத்திற்கு அல்ல..தகவலுக்கு மட்டுமே)



என்னதான் நடக்கும்..நடக்கட்டுமே!