Friday, January 6, 2012

கொல வெறிக்கு சிம்புவின் பதிலடி!

எம்.ஜி.ஆர் சிவாஜி ,கமல் ரஜினி ,அஜித் விஜய் போட்டி 
திரையிலும் வெளியேயும் பொறாமை அடிதடி ஆகியவற்றை
வளர்த்தெடுத்து ரசிகர்களையும் சம்பந்தப்பட்டவரையும்
விலக்கியே  வைத்துக் கொண்டுருந்தது!
வெளியே நாசுக்கிற்கு அவர்கள் மறுத்தாலும் உள்ளே
அனல் கனன்று கொண்டுதான்
இருந்தது!

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் "நானும் ரவுடி தான் "
என்பது போல்,விளபரத்துக்காவும் பலசமயம் நிஜமாகவும்,
வம்படியாக வளர்க்கப்பட்டது தான் "சிம்பு - தனுஷ் " போட்டி!

எதோ ஒரு பிரச்சனையில் முறிந்த ஐஸ்வர்யா சிம்பு நட்பு ,
தனுஷை ஐஸ்வர்யா மணந்ததில் முடிந்தது! ரஜினியின்
மாப்பிள்ளை எனும் ஹோதாவும், நல்லபையன் இமேஜும்
சேர்ந்து தனுஷை தகுதி உயர்த்தி விட்டது! ஐஸ்வர்யாவின்
பங்கும் இதில் உண்டு!

 பிளேபாய் இமேஜை விட்டு வெளியே வரமுடியாமல் ஆனால்
திறமை பலவாய்ந்த சிம்புவுக்கு  அடி மேல் அடி! வி.தா.வ ஓரளவு
பாதையை மாற்ற நினைத்தாலும் சிம்பு மறுபடியும் களனி பானையை
தேடி போவது போல், உசத்தியை ஓவர் ஆக்டிங்க்க் செய்துவிட்டார்!

இதற்கிடையில் ஐஸ்வர்யா தன சொந்தக்காரப் பையனை மெட்டமைக்க
சொல்லி  தனுஷை  பாட வைத்த "கொல வெறி" பாட்டு கன்னாபின்ன வென்று
உலகமெங்கும் பிரபலமாகி விட்டது!

இதனால் உத்வேகப்பட்ட சிம்புவும் முயற்சி செய்து தானே பாடி
வெளியிட்ட பாடல் "லவ் ஆந்தம்"! பலமொழிகளில் அன்பை  சொல்லும் பாடல் !

இதுவும் தற்போது பிரபலமாகிவருகிறது!

உங்கள் பார்வைக்கு இங்கே!



4 comments:

  1. ஹா ஹா ஹா ஹா ஆஹா இவனுக்க நடுவுல சிக்கி சின்னாபின்னமாகிறது நாமதான் இல்லையா முடியல...!!!

    ReplyDelete
  2. நன்று,ரசித்தேன்

    ReplyDelete
  3. சி.பி.செந்தில்குமார்!

    MANO நாஞ்சில் மனோ!

    karthi.bsr!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete