Showing posts with label சூடான செய்தி. Show all posts
Showing posts with label சூடான செய்தி. Show all posts

Wednesday, February 11, 2015

அண்டைநாட்டு மீனவனின் அழுகுரல் கேக்கலையோ ?


அண்டைநாட்டு மீனவனின் அழுகுரல் கேக்கலையோ?

கடலில் வழி தெரியவில்லை என்று பதில் வருகிறது ...தொப்புள் கொடிகளின் வலைகளைக் கிழித்தாயே என்ற கூக்குரலுக்கு ! அனுதாப வார்த்தைகளில் குற்ற உணர்வு இல்லை !திருத்திக் கொள்கிறோம் என்று வரவில்லை ...பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்கின்றனர் !

அடுத்தவன் சோற்றில் கை வைப்பது அழகல்ல ! நமக்கான எல்லைகளை நாமே வகுத்துக் கொள்ளவேண்டும் ! தவறு நடந்திருந்தால் காரணமானவர்களை எச்சரித்து சரியான வழியில் பாடு பார்க்கச் செய்தல் வேண்டும் !

மறுபடியும் இலங்கை ராணுவம் தொல்லை தர, நாமே காரனமாகிவிடக்கூடாது !

ஆமாம் ....பொங்கும் ஈழ வியாபாரிகள் ஏன் வாய்மூடி இருக்கின்றனர் ?
நேர்மை உறங்கக் கூடாது ! யாரிடம் தவறு இருந்தாலும் கண்டிக்கனும் !

அண்டைநாட்டு மீனவனின் அழுகுரல் கேக்கலையோ ?


தில்லி வாலா

பங்காளிகள் குலசாமி கும்பிடுவதைப் போல், கட்சிப் பொதுக்குழு மீட்டிங் நடத்துவதைப் போல் ...இருக்கப் போகுது தில்லி அசெம்பிளி !

பொழுது போகறதுக்கு பைவ் ஸ்டார் சாப்பிடும் ரமேஷ் சுரேஷ் உடன் மகேஷ் என மூன்று தாமரைக்கட்சி உறவு முறைகள் வேறு !

தொப்பித் தலையர்கள் இனி சாலையில் தர்ணா கிரானா  என  சுற்றாமல் , கூரைக்குக் கீழே இருந்து வேலை செய்யட்டும் ! நாடகம் போட்டது போதும் ..ஆக்ஷன் நடக்கட்டும் !

பெருமாள்சாமியின் பேயாட்டம் !

கருத்துச் சொல்லி கந்தலாகிப் போனார் ...நம்ம நடைப் பயிற்சி வீரர் பெருமாள்சாமி !
தேர்தலில் அடுத்தவன் மட்டையாகிப் போனதைப் பார்த்து  ஆனந்தம் இருந்தால் அதை அடக்கமாக ரசிப்பது தான் முத்துன அரசியல்வாதிக்கு அழகு !

அதை விட்டுட்டு "சீரியல் மாமியார்" கணக்காக...வாய்க்கு வந்தபடி பேசியதை தமிழக் மக்கள் ரசிக்கவில்லை , என்பதை இணையத்தில் கழுவி ஊற்றியதை வைத்து அறிந்து கொள்வாராக ! நாம் எத்தனை முறை சாணிக் குளியல் போட்டோம் என்பதை மறக்க முடியுமா ?

உலகக் கோப்பை கிரிக்கெட்த் திருவிழா !

ஆஸி அணியின் 9வது பேட்ஸ்மேன் கூட அதிரடி ஆட்டம் ஆடும்போது , இந்திய அணியினரின் முன்னணி மட்டைவீரர்களும் திணறுவதைப் பார்க்கும்போது ..
எதையும் எதிர்பார்க்காத இந்திய  ரசிகர்கள் , ஜாலியாக பொழுதை கழிக்க விருக்கிறார்கள் !

நம்ம ஆட்டக்காரங்க கவனம் எல்லாம் ஐபிஎல் 8 ன் மீதே !
நமது கவனமெல்லாம் டிவியில் காட்டப்படவிருக்கும் ஆஸி நியுசி அழகுப் பெண்கள் மீதே !

ஸ்ரீ ரங்கா யாருக்கு பொங்கல் தருவார் ?

கேட்டவருக்கு தருவார் ! மற்றவருக்கு பேதி மருந்து தருவார் ! இந்தத் தேர்தலால் புதிதாகக் கட்டப்பட்ட "யாத்ரி நிவாசம் " பிரபலமாகி விட்டது ! கோவிலுக்கு போகவர 60ரூ ஆட்டோ வாடகை ..இப்போது செயல்படும் மெஸ் இன்னும் எத்தனை நாட்களுக்கோ ?

வெயில் அதிகரிக்கத் துவங்கி விட்டது !
ஏசிகள் உறுமத் துவங்கி விட்டன!
கரண்டுத் தொல்லை பயமுறுத்துகிறது !

அதோ ..வருகிறதே வசந்தகாலம் ..இள வேனிற் காலம் !







Monday, January 27, 2014

சுப்புசாமி கோபுசாமி !

பொறந்த குழந்தை...அஞ்சு வருசமானதும்
ஒண்ணாம் வகுப்பில் சேர்க்கணும்!
சமைஞ்சபையனை .. .அஞ்சு வருஷமாச்சும்
பொத்திபொத்தி வளக்கணும்!
மாஸ்டர் டிகிரிக்கு...அஞ்சுவருஷமாச்சும்
காலேஜுல சேர்ந்து படிக்கணும்!
சுதந்திர தேசம்னா..அஞ்சுவருஷமானதும்
தேர்தல் நடத்திப் பார்க்கணும்!

நாலு மாசத்துல தேர்தல் வரப்போது ங்கறதை 
நாலு மாசத்துக்கு முன்னாடி இருந்தே..
மீடியாக் காரன் கதறிட்டு நாட்டுக்கு
உடுக்கை அடிச்சு உலுப்பி சொல்லிட்டிருக்கான்!

மார்ச் மாசத்துல முடியுற நிதிஆண்டு வருமானவரிக்கு. ..
செப்டம்பர்லே அட்வான்ஸ்டேக்ஸ் கட்டுற கதையா,
2014 எலக்ஷனுக்கு, 2013லேயே 
கூட்டணி கும்மாளங்களுக்கு, கும்மாங்குத்துக ஆரம்பிச்சிட்டாங்க!

தேர்தலுக்கு நாலு மாசம்..அதுக்கப்புறம் ரெண்டு மாசம்..நமக்கெல்லாம் நல்ல செய்தித் தீனி, கருத்து திணிப்பு எல்லாம் கிடைக்கும்! அதென்ன தேர்தலுக்கு அப்புறம்..ஆமாங்கண்ணோவ்! யாருகிட்ட மெசாரிட்டி இருக்கப் போவுது?

யாரோ..ஜெயிக்கட்டும்..ராசாவாகட்டும், நமக்கு அது கவலை இல்லை, இன்ட்ரஸ்டும் இல்லே! எப்படியும் "பெவிகால் ஜாயிண்ட்"கள் தான் ஆளப் போவுது...இதுல நமக்கு எதுக்கு சைடு பேக்கிங்?(அணி ஆதரவு)

கண்ணை மூடிட்டு...நம்ம சனநாயகக் கடமைக்கு, சாவடிக்குள்ளே புகுந்து, பட்டனை ஒரே ஒரு தடவ,தடவிட்டு வந்துடணும்! அதுக்கு சாட்சியா..ஆபீசருங்க பொட்டு வெச்சு, மரியாதை செஞ்சு அனுப்புவாங்க!

என்ன உளறிட்டு இருக்குறே...சொல்ல வந்ததை சுருக்கால சொல்லிட்டு போய்யானு, நீங்க கடுப்பாகிறது எனக்கு கேக்குது!

இன்னும் ஆறு மாசத்துக்கு, நடக்குற அரசியல்  கூத்துக்கதைக்களுக்கு எல்லாம் "ஜெர்க்" ஆகி..யாருகிட்டயும் விவாதம்,சச்சரவு எல்லாம் செஞ்சுக்காம...ஜாலியா எடுத்துக்கிட்டு எஞ்சாய்" செஞ்சுக்கிடுங்க...என்ன நாஞ்சொல்றது?
சுப்புசாமி VS கோபுசாமி

ஒவ்வொரு தேர்தல்லேயும், ஏமாளியாக்கப்படற நம்ம கோபுசாமி அண்ணன்...இந்த தடவ, வெளியூர் ஆட்டக் காரங்களோட வேகமா போயி, காண்ட்ராக்ட் போட்டுட்டார்! முதல்ல எல்லோரும், சந்தோசப்பட்டாங்க..பெருசா விமர்சிக்கல!

அப்புறம் மெதுவா..ஆரம்பிக்கறாங்க மீடியாக்காரங்க! என்னான்னு? 
கோபுசாமி அண்ணே...அந்த வெளியூரு ஆட்டக்காரங்க, மடியிலே சுப்புசாமின்னு" ஒரு பூனைய செல்லமா உட்கார்ந்துட்டு இருக்கே...பாக்கலையா? 
அதை கிட்ட வெச்சுக்கிட்டு, எப்படி "தேர்தல் சகுனம்" பாத்துக்கிடுவீங்கனு, கேள்வியா கேக்கறாங்க..சீண்டிப் பாக்குறாங்க!

எப்படி சமாளிக்கப் போறாரோ..நம்ம கோபுசாமி அண்ணன்! இதுக்கு இடையிலே, நம்ம அரேபியசாமி  கட்சிக்காரங்க வேற..கோபு அண்ணனை நெருக்குறாங்க! கோபுஅண்ணன் புதுசா கண்டிராக்ட் செஞ்ச ஆளுக, ஆட்டக்காரங்க மட்டுமில்லையாம்! பில்டிங் டெமாலிஷும் சைடு பிஸினஸாசெஞ்சிட்டு இருக்காங்களாம்...அதனால அவங்களோட நீங்க சேரக்கூடாதுனு சொல்றாங்க!

ஆனாப் பாருங்க..நீங்க அவங்களோட சேரலைனா, எங்களோட 13 சத வாக்குகளும், உங்களுக்கே, அப்படின்னு மட்டும் சொல்ல மாட்டாங்களாம்!

கோபு அண்ணே..சிறந்த பார்லிமெண்டேரியன்,  சிறந்த பேச்சாளரான நீங்க...கண்டிப்பா தேர்தல்லே நிக்கணும்! கூட்டணி இல்லைன்னா யாராலும் ஜெயிக்க முடியாது, அரசாளமுடியாதுனு வந்துட்டப்புறம்...நீங்க ஒண்ணும் பயந்துக்கிடாதீங்க!

கண்ணாலம்னு..போயாச்சுனா, அங்கே எல்லா "கவிச்சிக்"காரங்களும் வரத்தான் செய்வாங்க! குறுக்கநெடுக்கா திரிவாங்க! காதுல படறமாதிரி குசலம் பேசுவாங்க! வேடிக்கையிலும்,மோளசத்தத்திலேயும் கவனத்தை வெச்சு, சபையில மருவாதி வாங்கிக்கணும்!


சுப்புசாமி அண்ணே! உங்களுக்கு கவர்னர் போஸ்ட் கிடைக்குமுங்க...வாலை கவனமா சுருட்டி வையுங்க! வாய் பதனம் கட்டாயம்! 


இப்போ போயிட்டு நாளான்னிக்கு வர்றனுங்கோ! கொசுக்கடி தாங்க முடிலை..!








Wednesday, January 8, 2014

ஆடையின்றி பிறந்தோமே...!


தொல்லையின்றி பிறந்தோமா...?!

பிறக்கையில், வளர்கையில் தாய்க்கு தொல்லை தந்தோம்!

கல்விக்கு தந்தையையும்,
கலவிக்கு துணையையும்,
வளமாய் வாழ உடன்பிறப்புகளையும்,
வெளியே உறவுகளையும்,
வயோதிகத்தில் பிள்ளைகளையும்...
நோகடித்து விடுகிறோம்!


மழையின்றி சபிக்கப்பட்ட தமிழ்நாடு!

ஆயிற்று இரண்டு வருடம்...மழைப் பொழிவைக் கண்டு! அவ்வப்போது சிறு தூறல்கள் வந்து ஆவலைக் கிளப்ப முயன்று தோற்று விட்டன!
விவசாயி விட்டு விட்டான்....நம்பிக்கையை அல்ல! விவசாயத்தை!
30ல்..20 மாவட்டங்களில் தை மாசியிலேயே தண்ணீர் பஞ்சம் வந்துவிடும் போலிருக்கு!
வாழ்க எல் -நினோ ! இயற்கையின் சித்து விளையாட்டு!

 ஆடையின்றி பிறந்தோமே...!

 ஆயாசப்படுத்துகிறது கூட்டணி அனுமானங்கள் !

தேர்தல் வருடம்...! மீண்டும் அதே முகங்கள்..அதே ஆசைகளுடன்..ஆனால் முகமூடிகளை வேஷங்களை கோஷங்களை சற்று மாற்றி போட்டு !
அதிகார வெறி... பணவெறி இரண்டும் கூட்டணி அமைத்து, சாதி/மத வெறியாக பரிணமித்து உள்ளது!

எவன் எவனோட சேர்ந்தா ...நமக்கென்ன!
எவன் கிட்ட இருந்து எவ்வளவு ஓட்டுலஞ்சம் கிடைக்கும்...இலவசம் எவ்வளவு கிடைக்கும்..இது தாண்டா மக்கள்!

புகை விலகியதாம்...இளைஞர்களை விட்டு!

33 லிருந்து, 23 சதமாகக் குறைந்துள்ளதாம்..இந்த பத்தாண்டில்..இளைஞர்களிடையே புகைக்கும் பழக்கம் ! வாழ்த்துக்கள்...ஒருவேளை பெண்சிநேகம் கிடைப்பது எளிதாகிப் போனதால், இது நடந்தேறி இருக்குமோ? எதுவானால் என்ன..நல்லது நடந்தால் சரி!

ஆம் ஆத்மி..

இந்திப் பெயரில் ஒரு இயக்கம்! அவசரத்தில் பிறந்து..அதிரடியாக வளர்ந்து வருகிறது இதுவரை விசில் அடிச்சான் குஞ்சுகளுக்காக அதிரடி பேட்டிங் செய்துவரும் கேஜரிவால், அடங்குவாரா இல்லை அடக்கப்படுவாரா..இல்லை விஸ்வரூபம் எடுப்பாரா?

எதாவது ஒரு மாற்றுசக்தி வேண்டும்...நிதானித்து நீண்ட கால திட்டங்கள் அடிப்படையில் முயற்சிப்பது நலம்! கூடவே பிரகாஷ் காரத்தையும் இணைத்துக் கொள்ளலாம்..அவர் சீன அபிமானத்தை விட்டு வந்தால்!

நடிகனுகளுக்காக சண்டை!

ஓயல..ஓயல..ஓயாது! அஜித்/விஜய் படங்கள்..டீசர்கள்..டிரெயிலர்கள்..தியேட்டர்கள் என அடிச்சிக்கிறானுகோ..! 70 அடிக்கு கட் அவுட், பாலாபிஷெகம்..அட ராமசாமி..எங்கேப்பா இருக்குறே!

எந்த ஆக்டரு படத்துக்கு, பிளாக்லே அதிக விலைக்கு டிக்கெட் விக்குதுனு எல்லாம் பேசிக்கிறானுவோ...கெரகம் பிடிச்சவனுக!

நாய்க்கு பட்டுக்குஞ்சம்னு பேராம்!

கொடூரன் ராஜபட்சிக்கு..பாலஸ்தீனத்தில் பாராட்டு, விருது, வீதிக்கு அவனோட பேரு! இதுவரைக்கும் இஸ்ரேல் தான் இலங்கைக்கு உதவுது..அப்படிங்கிற அவப்பெயரை துடைக்க, தமிழ் மக்களைக் கொன்னது சரிதான்னு, முஸ்லீம் நாடும் கிளம்பிடுச்சு!

பாலஸ்தீனத்துக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம்...இதுலா இலங்கைக்கு சப்போர்ட்டு வேற! நல்ல இருங்கடா?!

ராகுலை பிரபலப்படுத்த காங்.திட்டம்!

கோடி கோடியா செலவு செய்யப் போறாங்களாம்! தங்கச்சியம்மா பிரியங்காளுக்கு வேற சலங்கை கட்டி, மேடையில இறக்கிவிட்டு இருக்காங்க! 

பையனை பிரபலப் படுத்தொணும்னா ஒரே வழி..டெய்லி ஷேவிங் செய்யச் சொல்லுங்க...ஒரு கண்ணாலத்தை செஞ்சு வெச்சீங்கண்ணா..பக்குவம் வந்துடும்! அஞ்சு வருஷம் ரெஸ்ட் எடுத்துட்டு மறுபடியும் வாங்க! பை பை..கலாய்ச்சி பை!

வைகோ அண்ணாச்சி!

அவரும் எத்தனை நாள் ..நடந்து கிட்டே இருப்பாரு!? பாஜகவோட நின்னு ஜெயிக்கணும்! மத்திய மந்திரி ஆகணும்! இலங்கையை மிரட்டணும்! கனவு காண்றதில் தப்பில்லை ..அது எங்க இஷ்டம்! கல்லைக் கீழே போடுங்க!


சர்க்கரைப் பொங்கல் செய்யும் முறை ..பாரம்பரிய முறையில் !


பொங்கல் பரிசு!

அடுத்த வருஷமாவது..குடும்பத் தலைவருக்கு குஷிப்படுத்த ஒரு குவாட்டரும், குடும்பக் குழந்தைகளுக்கு சத்து கூட்ட ஒரு கோழியும் கொடுத்தா  நல்லா இருக்கும்! 
அதிகாரம் கவனிக்குமா?


எத்தனை நாள் தான் ஒரே ஸ்டைல்லே எழுதறது?

மாற்றம் தேவை..அதனால் ஒரு கன்னி முயற்சி !
நல்ல கருத்தா சொன்னீங்கனா...சந்தோசம்,மகிழ்ச்சி!







Saturday, November 23, 2013

சாராயமும் புகையும் எண்ணெயுமே ...ஸ்வீட் ராஸ்கல்ஸ்!

உலகின் இரண்டாவது புராதானத் தொழில்... சாராயக் கண்டுபிடிப்பு தான் ! புகை கூட நெருப்பு கண்டு பிடிச்சதுக்கு அப்புறம் தான் வந்திருக்கும்!

அழுகுன பழக்குவியல்களில், தென்னைப்பூக்களில் இருந்து நொதிச்சு வந்த ரசத்தைக் ருசித்துப் பார்த்ததில் இருந்து சாராயம் பிறந்து விட்டது!

சோமபானம் சுராபானம் எல்லாம் புராண மதுபானங்கள்...
கள்ளு சாராயம் எல்லாம் புராதன பானங்கள்!

நம்மாளுகளோட கண்டுபிடிப்பை பாருங்க..!

கரும்பு மொலாஸஸில் இருந்து தயாரிக்கப்படும் ரம் போன்ற வகைகள் சாப்பிட்டால் "சுகர்" வந்துடுமாம்!
மால்ட்டில் இருந்து பெறப்படும் விஸ்கி சாப்பிட்டால், கொலஸ்ட்ரால் வருமாம்!
ஜின்.,வோட்கா சாப்பிட்டா..அல்ஸர் வருமாம்!
திராட்சை ரசமான "பிராந்தி" சாப்பிட்டா மட்டும் இதயத்துக்கு நல்லதாம்!

சாராயமும் புகையும் எண்ணெயுமே ...ஸ்வீட் ராஸ்கல்ஸ்!


எல்லாமே கெடுதல்கள் தான்...ஆல்கஹால் தான்! விலை கம்மியான சரக்குகளில் தரம்குறைவான ஆல்கஹால் கலந்திருக்கும் அவ்வளவுதான்!

மது குடிக்க வேண்டாமுனு சொல்ல வரலை! சொன்னாலும் உதைக்க தான் வருவாங்க! எப்படி டேமேஜ் கம்மியா, சாப்பிடலாமுனு சில டிப்ஸ்!

1. கூட்டம் சேர்ந்துட்டு அடிப்பதைக் குறையுங்கள்
2. ஒரு சில நண்பர்களுடன் மட்டுமே "குடிநட்பு" வெச்சுக்கோங்கோ
3. குறைஞ்ச பட்சம் 15 நாளுக்கு முன்னாடி சியர்ஸ் சொல்லாதீங்க!
4. நல்லா "டைலூட் செஞ்சுக்கோங்கோ! 1:4
5. ஒரு மணி நேரத்துக்கு ஒரு லார்ஜ் தான், 
   லிவர் ஃப்ரெண்ட்லி ஆல்கஹால் ட்ரிங்கிங் !\
6. மேக்ஸிமம் 3 லார்ஜ்கள், ஒரு நாளைக்கு!
7. முட்டை வெள்ளை, பாதாம், பிஸ்தா, சாலட்கள்,  
   பழங்கள் சைட் டிஷ் என சாப்பிடுங்கள்!

ஆல்கஹால் ஒரு "ஸ்ட்ரெஸ் பஸ்டர்" தான்! ஆனால், அதிகமாச்சுனா லிவரை..ஹார்டை பர்ஸ்ட் செஞ்சிடும்!

போன தலைமுறையை விட ...இந்த ஜெனரேஷன்ல ஸ்மோக்கிங்" கம்மிதான்! மெயின் ரீஜன்..குடலைப் புடிங்கி எடுக்கத் தோணும்..நாத்தம் தான்! அப்புறம் இன்னொரு முக்கியாமான விஷயம்...கிஸ்ஸிங் அதிகமானது தான்!

ட்ராவலிங் ஜாப்களில் இருக்கும் நண்பர்களின், பொழுது போக்கே இதுதான்! அவங்க தான் முயற்சி எடுக்கணும்!

ஆம்பளைக, பொம்பளைகன்னு வகை தொகை இல்லாம, விரும்பி சாப்பிட்டு நோய்கள் வாங்கிக்கிடறது..."டிரான்ஸ் ஃபேட்" அதிகம் இருக்கிற எண்ணெயால் செய்யுற, ஃபாஸ்ட்ஃபுட்"கள் தான்!

பத்து மில்லி எண்ணெயில்ல் சுமார் 100 தேவை இல்லாக் கலோரிகள், உடம்புல ஏறுது! உழைக்க மறந்தோம்னா கொழுப்பா மாறுது!

அளவா எடுத்துக்குவோம்...!
அருமையா வாழ்வோம்...!


Friday, April 12, 2013

தங்கம்..வெள்ளி தள்ளாட்டம் எப்போ முடியும் ?

 தங்கம் மேலிருந்து சுமார் 15 சதமும், வெள்ளி சமீபத்திய உயரத்திலிருந்து
30 சதமும் குறைந்து உள்ளது..இது குறித்து என்னுடைய பழைய பதிவைப் பார்க்கவும் !

http://rammy-rammys.blogspot.com/2013/02/blog-post.html

இது தங்கம், வெள்ளி வாங்கும் நேரமா?


தங்கம்..வெள்ளி இன்னும் சரியுமா..இல்லை வாங்க ஆரம்பிக்கலாமா..என்று கேட்போருக்கு, மீண்டும் சொல்லிக் கொள்ளுகிறேன்...S.I.P (Systematic Investment Plan) முறையில் அனைத்து விலைகளிலும்..சிறிது சிறிதாக நமது வருமானத்திற்கு ஏற்ற அளவில் வாங்கலாம்..

நீண்ட கால சப்போர்ட் நிலையை..இரண்டு உலோகங்களும் உடைத்து கீழே இறங்குகின்றன..புதிய சப்போர்ட் நிலை எங்கே..என்பது பெரிய கேள்விக்குறியே !

இந்திய மதிப்பில் ..இன்னும் 10 சத அளவிற்கு விலைகள் குறையலாம்..என உலோகசந்தை வல்லுஞர்கள் சொல்லுகிறார்கள்! ஃபிஸிகல், கோல்ட் ஈடிஃப்..இரண்டு முறைகளில் நீண்டகால் முதலீடு செய்யலாம் ! எம்ஸிஎக்ஸ் டெரிவேடிவில் விளையாட அனுபவம் வேண்டும்...நமக்கெல்லாம் அது ஒத்துவராது..! தில்லும், பணமும் உள்ளவர்கள் விளையாட்டு அது! அதன் பக்கம் செல்லாமல் இருப்பது மன/பண ஆரோக்கியம் !
 
தங்கம்..வெள்ளி தள்ளாட்டம் எப்போ முடியும் ? 

இந்த ஏப்ரல் முடிய கீழ்முகத்திலேயே இருக்கும் என சொல்லுகிறார்கள். அமெரிக்க மதிப்பில் தங்கம் சப்போர்ட் 1470, 1410, 1340..அதிகபட்சம் 1240 டாலர்கள்/ஒரு அவுன்ஸுக்கு, என எதிர்பார்க்கிறார்கள் ! வெள்ளி அதிகபட்சம் 22 அமெரிக்க டாலர்கள் வரை வரலாம் என எதிர்பார்க்கிறார்கள் ! 

பார்க்கலாம்..என்ன நடக்கிறது என்று !

Disclaimer : சந்தையில் நிலவும் சூழலைப் பொறுத்து.அவ்வப்போது வரும் வல்லஞர்களின் கட்டுரைகளில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பே இது..! என்னுடைய கருத்துகள் ஏதுமில்லை..!இந்த கட்டுரை வியாபாரம் செய்வதற்க்காக அல்ல..! வியாபாரமும்,விளைவுகளும் வியாபாரிகள் பொறுப்பு.! எனக்கும் விளைவுகளுக்கும் இஞ்சித்தும் சம்பந்தமில்லை..சந்தை நிலவரத்தை அவரவர்களே கணித்து வியாபாரம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது !

கனகமும்..ஸ்வர்ணமும் ஐஸ்வர்யங்கள்

Tuesday, February 12, 2013

உண்மையான தீவிரவாதியை சந்தித்தேன்!

  வாதம்..உடலில் ஒருமுறை வந்தால் வீடுபேறு அடையும் வரை விட்டுப் போகாது ! வாயால் வாதம்...செய்தால் ஏதாவது ஒரு இடத்திலாவது..நெஞ்சாகட்டும்..மூஞ்சியாகட்டும் ரணமாக்காமல் போகாது !

ஆக..வாதம் என்றாலே பாதிப்பு என்று தானே அர்த்தம்..?


 வாதத்திற்குக் காரணம் ..தடை..அல்லது அடைப்பு..மேலும் எதிர்ப்பு ! சீராக ஓடுவது/கிடைப்பது ஏதாவது ஒரு காரணத்தால் தடுக்கப்பட்டால் அல்லது திருப்பப்பட்டால்..ஏற்படும் !



தனக்கு இயல்பான, இஷ்டப்பட்ட செயல்..மாறுபடும் போது வாதம் பிறக்கிறது..!

ஏமாற்றம் வாதாடத் தூண்டுகிறது..! வாய்வாதம் ..மிதவாதம் ..எனப்படுகிறது ! சிலசமயம் வைத்தியம் பார்க்கப்பட்டு..ஓரளவு அதோடு மேலும் பரவாமல் நிறுத்திவிடலாம்..! இதுதான் பொதுவாக ..நடப்பது..! பொங்கிவிட்டு ..வலிதீர்ந்ததும்..காலம் எனும் மருந்திட்டு கோணல்களை..சற்று நேராக்கலாம்!



அடுத்து அறுவை சிகிச்சை..அது தான் "தீவிர வாதம்" !
அப்படிப்பட்ட ஒருவனைத் தான் இன்று ஒரு மலையோர பயணத்தில் சந்தித்தேன் !

தடாலடியாக முன்னே வந்து நின்றான்..அவன் ! அவன் கண்களில் ..தீர்க்கம்..ஏதோ அடைய வேண்டும் என்ற வெறியுடன் !அவன் பின்னே ஒரு பெண்..சற்று வயதான தோற்றம்..கவலையும்..கோபமும் அவள் கண்களில்..!

அவனாக வரவில்லை..எங்கள் முன் ஏறக்குறைய இழுத்து..தள்ளப்பட்ட நிலையில் ! பெரும்பாலும் ..கிராம இளைஞர்களே தீவிரவாததால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்!


என் நண்பனுக்கு ..அந்தப் பையன் ஏதோ தூரத்து உறவு போல! வயதான பெண்மணி அவனின் தாயாராம் ! மிகுந்த பதட்டத்தில் இருந்தார் அந்த அம்மணி! 

எந்த நேரத்தில்..எங்கிருந்து ஆபத்து வருமோ என்று பரபர ப்புடன் காணப்பட்டார்..அப்பெண்மணி!"இவன்கிட்ட எப்படியாவது எடுத்துச் சொல்லி..அங்கெ இருந்து விடுவிச்சு..நீதான் காப்பாத்தணும்..நீ சொன்னாத்தான் இவன் கொஞ்சமாவது கேப்பான்" என்று நண்பனிடம் சொன்னார் அந்தத் தாய்! 

இன்னும் பதினஞ்சு நாளில் இவனுக்கு கல்யாணம்..அவனோ ஒரே பிடிவாதமா அங்கேயே இருக்கான் ! எப்படி கல்யாணம் செய்யறது..ஒரே பையன் வேற..! வெளியில தெரிஞ்சா அசிங்கமாயிடும் ! குடும்ப கவுரவம் போயிடும்..! நீதான் ஏதாச்சு செய்யணும் ! பொண்ணு வீடு வேற பெரிய இடம்..ஆனாலும் ரொம்ப கோவக்காரங்க..ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப் போவுது !' என்றார்.!

என்னாசும்மா'ன்னு நாங்க கேக்கவும்..சட்டைய கழட்டுடா'ன்னு..பையன் கிட்ட சொல்ல ..உடம்பு பூரா கீறல்கள்..பிளேடால் கீறி ஆறியும்..ஆறாமயும் ! சட்டப் பாக்கெட்க்கு நேர் பின்னாடி.. " ஜெனிதா"ன்னு..டாட்டூ..முஞ்சிலடிச்ச மாதிரி தெரிஞ்சது !

  உண்மையான தீவிரவாதியை சந்தித்தேன்!
அம்மா செல்லம்..மாசம் முப்பதாயிரம் சம்பளம்..ஒரு பைசா விட்டுக்கு கொடுக்கிறதில்ல..முக்காவாசி சம்பளத்தையும் அந்த பொண்ணுக்கே செலவு செஞ்சிருக்கான் ! போதலைன்னா..அம்மாக்கரி கிட்டயும் வாங்கிட்டுப் போயிருக்கான்!
பொண்ணு ரொம்ப லட்சணமாம்..பையன் தீவிரவாதி ஆகிட்டான்! மூணு வருஷ லவ்வாம்! இவன் தான் "டாட்டு" குத்தி இருக்கான்.அவளோ"பிரெண்டாத்தான் நெனைச்சேன்'னு வசனம் பேசிட்டு நாமத்தையும் போட்டுட்டு..அமெரிக்கா போயிட்டா ! இவனால மறக்க முடியலை !

 இப்போ பிரச்சனை என்னன்னா .."டாட்டூ" வை அழிக்கணும்..கல்யாணத்துக்கு முன்னாடி..காயத்தையும் ஆத்தணும் ! எந்த டாக்டர் கிட்ட போறதுன்னு நாங்க பேசிட்டு இருந்தப்போ..அதுவரைக்கும் பேசாம ..நின்னுட்டு இருந்த அந்த தீவிரகாதல்வாதி" ராஸ்கல் கேட்டானே.ஒரு கேள்வி !

"அண்ணோவ்..இந்த பேர் அப்படியே நெஞ்சுல இருக்கட்டும்..மேல வேணும்னா ஒரு பூ மாதிரி போட்டு மறைச்சிட்டா என்ன'ன்னு !"

நெஞ்சுக்குள்ள அவளை எழுதி வெச்சேன் ...! அவன் !
காதல் ஒருவழிப்பாதை பயணம்..! நாங்கோ !

அனைவருக்கும் அட்வான்ஸ் காதலர் தின வாழ்த்துக்கள்!
 

Tuesday, January 8, 2013

பள்ளி வேலைநேர மாற்றம் ! இனி 10மாதங்களும் பாவைநோன்பே!

அடி..வெள்ளையம்மா வந்ததடி உன் காளைக்கு ஆபத்து.! கட்டபொம்மன் பட வசனம் இது!
பள்ளி வேலைநேர மாற்றம் பற்றிய திட்டம் குறித்து ஊடகங்களில் செய்தி வந்ததும்..அதை அறிந்ததும் என் மனதில் ஓடிய எண்ணமே அது !

 பெருகி வரும் மக்கள் கூட்டத்தில்..பள்ளிச் சிறார்களும், கல்லூரி கண்மணிகளும்..வேலைக்குச் செல்வாரோடு..காலை வேளைகளில் ..சாலையை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ! அதனால் அவதிகள்..ஆபத்துகள்..இழப்புகள்! 

குளிர் மிகுந்த வடமாநிலங்களில் காலை 7 மணிக்கு...சீருடை அணிந்தவாறு குழந்தைகள் கல்விச்சாலைக்கு நிதானமாகச் செல்வதை ..பல வருடங்களுக்கு முன்னரே ..கண்டிருக்கிறேன்..வியந்தும் இருக்கிறேன் !

 ஏழரை மணித்திட்டம் என்னவோ..ஏழரைசனீஸ்வரர் வந்து தாக்கியதைப் போல அலறுகிறார்கள்...வீட்டம்மணிகளும்..வாத்தியார்களும் !

வேலைக்குச் செல்லும் அம்மணியருக்கு..நேரத்திலேயே எழுந்திருப்பது பழகி இருக்கும்! வீட்டம்மணிகள் தான் பாவம்..அவர்களோட "ரொடீன்" எல்லாம் மாறிடும்னு பயப்படராங்க !

கர்மம் புடிச்ச டிவி சீரியல்களை விட்டொழிச்சீங்கன்னா...சீக்கிரம் தூங்கி..விழிக்கலாம்! உடலுக்கும்..மனசுக்கும் ஆரோக்யம் ! இதை என்னமோ தியாகம்னு எல்லாம் நினைக்க வேண்டாம்..! பரிகாரமா பகல்லே ரொம்ப நேரம் கிடைக்கும்.ஹாயா பொழுதைக் கழிக்கலாம்!

ஒரு அஞ்சு.அஞ்சரைக்கு எந்திரிச்சா போதும்..குழந்தைகளை எழுப்பிவிட்டு..சுடுதண்ணி போட்டு..பிறகு குக்கர் வெச்சா..சாப்பாடு ரெடி.! சமையலுக்கு அரை மணிநேரம்..இன்னொரு குக்கர்ல இட்லி வெச்சா..மூணு இட்லி சாப்டுட்டு..தயிர்சாதம் பாக்ஸ்லெ ஸ்கூலுக்கு!
ஆறே முக்காலுக்கு எல்லாம் பஸ்/வேன்/ஆட்டோ வர்றதுக்கு ரெடி ஆயிடலாம் !

ரெண்டு மாசம் சிரமமாயிருக்கும்..அப்புறம் பழகிடும் !

அடுத்ததாக..நம்ம குரு'க்களைப் பார்க்கலாம்..! சம்பள உயர்வு அறிவிப்பைத் தவிர...மற்ற எல்லா அறிவுறுத்தலுக்கும் அவங்க ஆதரவு கிடைக்கிறது..எதிர்பார்க்கவியலா சமாச்சாரம் !

ஸ்கூலுக்குப் பக்கத்துலேயே வீடு பார்த்துக்கோங்கோ..அவ்வளவு தான் சொல்லமுடியும்!

பெத்தவங்களுக்கும் அதே அட்வைஸ் தான்..! பக்கத்துல இருக்குற ஸ்கூல்லெ பசங்களை சேர்த்துவிடுங்க ! அமெரிக்காவுல அந்த அந்த ஏரியாஸ்கூல்ல தான் சேர்க்கிறது..ஓரளவு கட்டாயம் !  

அரசுக்கு ஒரு கோரிக்கை..எல்லா ஸ்கூல்லேயும் கட்டாய 'கேன்டீன்" வசதியும்,, அதிக அளவு " பாத்-ரூம்" வசதியும் அவசியமா செஞ்சு தரணும் !

அரசுப்பள்ளி/ கல்லூரிக்குன்னுத் தனியா ஸ்பெஷல் பேருந்துகளை இயக்கணும்..தனியார் பள்ளிகளுக்கு போக்குவரத்தில் தொடர்ந்து அதிகக் கண்காணிப்பும் அவசியம்!


பயப்படாதீங்க..மக்களே ! அருமையான திட்டம் !
பழைய காலம் மாதிரி 10 மணிக்கு முன்னாடி தூங்கப் போயிடுங்க..! காலை 5 மணிங்கிறது அதிகாலை அல்ல..'அதி உன்னத வேளை' ந்னு நெனைங்க..!

மத்தியான சாப்பாட்டுக்கு புள்ளைங்க வீட்டுக்கு வந்திடும்..படிக்க/விளையாடன்னு அதுங்களுக்கு ரொம்ப நேரம் கிடைக்கும்.! 

மத்தபடி பாதுகாப்பு கவனிப்பு.,..பத்திரம் எல்லாம் ரொம்ப ஜாஸ்தியா அவங்களுக்குக் கிடைக்கும்! உங்க சுகத்தை கொஞ்சம் ஒதுக்கி வையுங்க..அவ்வளவு தான்!

இனி..எல்லா நாளும் பாவை நோன்புதான்..ஆண்டாள் நாச்சியாரின் வழியில் நாமும் செல்வோம்!

வீட்டாம்பிளைகளா..கொஞ்சம் உங்க உதவியும் தேவை..மறந்திடாதீங்க! ரெண்டு மாடுகளும் இழுத்தாதான் குடும்ப வண்டி நகரும் ! 


Saturday, January 5, 2013

சங்கரமடம் அவ்வளவு இளக்காரமா ஆகிடுச்சா..மிஸ்டர் நல்லதம்பி !


முதல்ல அப்பா சொன்னாரு..அப்புறம் புதுவாரிசு ஆனந்தவிகடன்ல பதில் போட்டாரு..ஏமாந்து எரிச்சலான முதல் வாரிசு பேப்பர்காராளுக்கு அறிக்கை கொடுக்குறாரு!

என்னென்னு?

எங்க கட்சி ஆபீசு சங்கர மடமா' ந்னு?


ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஆங்கிள்லே சொல்றாங்கொ..ஆனா பாருங்க ..ஒரே வாக்கியமா சொல்றாங்கோ! இதைத்தான் " ப்ளட் இஸ் திக்கர் தென் வாட்டர்' நு சொல்றதா?

தானாடாவிட்டாலும் தன் நாவாடும்' என்பதும் இதே தானோ?


குதுரை ஆதீனத்தை விடுங்க..சொருணகிரி தான் கடைசி ஆதீனமா இருக்க ட்ரை பண்றார்..கூடிய சீக்கிரம் அறநிலையத்துறை நாட்டுக்கு அர்ப்பணிச்சிடும் !

 மத்த ஆதீனமாகட்டும்..மடமாகட்டும்..சர்ச்..மசூதி எங்க பார்த்தாலும்..அடுத்த பட்டம் பெரும்பாலும் பழைய பட்டத்தின் வாசமே இல்லாத இடத்தில் இருந்துதான் வர்றாங்க..!

அதுவும் இன்னார் தான் அடுத்த வாரிசுன்னு தெளிவா..சொல்லிடுவாங்க! அப்படியே சொல்லாம போய்ட்டாலும்..அடுத்த பட்டம் கட்றதுல பெரிய கலாட்டா எல்லாம் இருக்காது !


அப்படி ஏந்தான் கூட்டமா சேர்ந்து அப்படி ஒரு கேள்வி கேக்கறீங்களோ?

சரி..சங்கர மடம் இல்லை ..உங்க கட்சி...வேறென்ன?

வேறென்ன..பிரவேட் லிமிடெட் கம்பெனியா..இல்லை பார்ட்னர்ஷிப் கம்பெனியா?

பப்ளிக் லிமிடெட் கம்பெனின்னு சொல்லமுடியாது! லிமிடெட் பப்ளிக்கை தானே உள்வட்டத்தில் அனுமதிக்கிறீங்க?



தேவே கவுடா, முலயாம் சிங் யாதவ், காஷ்மீர் அப்துல்லா..குடும்பத்துல இப்படியா பப்ளிக்கா வெட்டு குத்து நடக்குது..கமுக்கமா முடிச்சுக்கல்ல! 

எம்ஜிஆரு தெளிவா செங்கோலைக் கொடுத்து காமிச்சாரே..யார் வாரிசுன்னு! அந்தத் தெளிவு இத்தனை நாள் கழிச்சாவது உங்க கட்சிக்கு வந்ததேன்னு சந்தோஷப்பட்டா..வாரிசு இல்ல..சங்கர மடமான்னு கேள்வி வேற கேக்கிறீங்க !


உங்க சண்டைக்கு சங்கரமடத்தை எதுக்கு இழுக்கிறீங்க? 


சரி..சங்கர மடம் இல்லைன்னு நாங்க..அதாவது மாக்களாகிய தமிழ் மக்கள் சொல்லணும்னா..அண்ணனும் வேண்டாம்..தம்பியும் வேண்டாம்...ஒரிஜினல்திராவிட  போராட்ட வாரிசு வைகோ இருக்காருல்ல ..அவரைக் கூப்பிட்டு ஒப்படைச்சிடுங்க ! 







Wednesday, January 2, 2013

அமெரிக்காவிற்கே ரூ28ஆயிரம் கடன் கோடி கொடுத்த கோவை !

 கோவைக்கே தனிப் பெருமை உண்டு ! யாராலும் எளிதில் நினைக்க..நிகழ்த்த முடியா காரியங்களை 'ஜஸ்ட் லைக் தட்'  டாக செய்து முடிப்பது !


பாசிட்டிவா சொல்லனும்னா 'பார்முலா 1 கார் பந்தய வீரரை உருவாக்கியது ; அரசாங்க ஆதரவு அதிகமில்லாமலேயே பஞ்சு மற்றும் இயந்திர தொழிலில் முன்னேறியது என பலப்பல !


 எங்க  ஊர் ஆளுங்க மூளையை..எக்சிபிஷன்ல வைக்கலாம்..! அப்படி நெளிவா ..சுளிவா கோளாறா எந்த காரியமும்  செய்வாங்க !
ஜி.டி.நாயுடு பத்தி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை !


செஞ்ச வேலையின் தகுதிக்கு   ஏற்றமாதிரி...பாராட்டும் கிடைக்கும் ..!
சிலசமயம் ஜென்மாந்திர ஜெயிலும் கிடைக்கும் !

அரசுக்குப் போட்டியாக ரூபாய் நோட்டு அடிச்சு மாட்டிக்கிட்ட பெரும்புள்ளிக எல்லாம் வசிச்ச ஊர் கோவை ! கவுண்டமணி கூட ஒரு படத்துல ,செந்திலைப் பார்த்து " ஏண்டா..கோயமுத்துர்ல பொறந்துட்டு அம்பது பைசாவா அடிக்கிறது ..ஊரு பேரக் கெடுக்காதிங்க-ன்னு ' அலப்பரை பண்ணுவாரு !

சுமார் முப்பது நாப்பது வருஷமா ..கோயமுத்தூர் காரங்களை ..மத்த ஊர்காரங்க கிண்டல் பண்றதுக்கு 'நோட்டு அடிக்கிற பசங்க' ன்னு தான் சொல்றது ..! ஏதோ சிலர் செஞ்சதுக்கு உரே பழி சுமந்தது !

அந்த தீராப் பழியை எளிதில் துடைத்தெறிந்து விட்டனர்..கோவை மக்கள் சிலர் ! அப்படி என்ன காரியம்னா ..அமெரிக்காவுக்கே கடன் கொடுத்திருக்காங்க ! அதுவும் எவ்வளவு ? ஒன்றல்ல ..நூறல்ல ..பல்லாயிரம் கோடி .!

.ரூ 28 ஆயிரம் கோடி !

அமெரிக்காவிற்கே ரூ28ஆயிரம் கடன் கோடி கொடுத்த கோவை !



அமெரிக்காவுக்கு பொருளாதாரப்பசி ! மசாலா கபே ' படத்துல வர்ற சிவா சொல்ற மாதிரி .."யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக்குவாங்க ..கடனா "!

நம்ம பக்கத்து நாடு சீனா இருக்குது தானே !  அமெரிக்காவுல அந்த நாட்டு அரசாங்கம் வெளியிடும் கடன் பாண்டு பத்திரங்களை ..சீனா மிச்சமிருக்கும் அந்நிய செலவாணி பணத்தை வெச்சு ..வாங்கிப போடும் ..வருஷம் கொஞ்சமா ! இப்போதைக்கு சுமார் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொறுமான அளவிற்கு அமெரீக்காவுக்கு சீனா கடன் கொடுத்திருக்கு !


 இதைக் கண்டு கேட்டு ..மனம் பொறுக்காத கோவை பங்குச்சந்தை அன்பர் ஒருவர் ..இந்தியாவின் மனம் காக்க ,சென்னை தனியார் வங்கி மூலம் ..பணம் அனுப்பி அமெரிக்க கருவூல .கடன் பத்திரங்கள் வாங்கியுள்ளார் !
(US treasury Bonds)

 http://tamil.oneindia.in/news/2013/01/02/tamilnadu-5-bn-us-bonds-seized-from-tn-stock-broker-167205.html

கோவை இவ்வளவு நாளாக சுமந்து வந்த "கள்ள நோட்டுப் பழி ' துடைக்கப்பட்டு ' குபேரபுரி ' எனும் புதுப்பட்டம் வந்து சேர்ந்தது மிகவும் 
மகிழ்ச்சியாகவும் ..பெருமையாகவும் இருக்கிறது !


ஃபாலோ- அப் !  

06/01/2013

$5-bn US bonds seized from TN stock broker


http://www.indianexpress.com/news/-5bn-us-bonds-seized-from-tn--stock-broker/1053200/

முதலில் வந்த செய்திகள் கொடுத்த பெருமையின் ஆயுள்..விட்டில் பூச்சி போல சிலநாட்கள் தான் போலும் ! மேற்கொண்டு வரும் தகவல்கள்..அந்தப்பத்திரங்கள் போலியாக இருக்குனென்ற கருத்தைச் சார்ந்து வருகின்றன. போலி என்று நிரூபணமானால்..குபேரபுரி" எனும் பெருமை தகர்ந்து..ப்ராடுபுரி" என்பதே நிலைத்து விடும் வாய்ப்பு உள்ளது!








Tuesday, December 25, 2012

தற்கொலை பூமியாகும் தஞ்சையில்...!

தற்கொலை பூமியாம் தஞ்சையில்..ஆறுகளில் சில இடங்களில் தடுப்பணைகளில் சிறிது நீர் தேங்கி உள்ளது..இனி இரண்டு வாரங்கள்  சென்றால்..அவையும் ஆவியாகிவிடும்!அதுவும் மேல் ஆயக்கட்டுகளில் தான் இந்த நிலை!..நாகை..திருவாரூர் போன்ற வடிகால் பகுதிகளில் வயல்வெளிகளில் நிஜமாகவே மாடுகள் மேய்ந்து வருகின்றன!

அந்த சோகத்தைப் படம் எடுக்க மனம் சிறிதும் ஒத்துழைக்கவில்லை..!

தஞ்சை விவசாய மக்கள் ஏற்கெனவே சிறுகடன் வலையில் சிக்கித் தவிப்பவர்கள்! பயிர் செத்ததால்..கடன் பயங்கரம் வட்டியுடன் வந்து கண்முன்னே கூத்தாடுவதால்..வழி தெரியாமல் உயிர்கள்செத்துக் கொண்டிருக்கின்றன..தவணை முறையில் !

மக்கள் சந்திப்பு..அவசியம் தேவை..இக்கணம்!
 அரசு மறுக்க, மண்ணின் மைந்தன் பேனாவில் மட்டுமே கண்ணீர் வடிக்க, எதிர்க்கட்சி இயங்காமல் இருக்க.அம்மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லுவது யார்?

 எப்போதும் " மிஸ்ஸிங் டைமிங்" போராட்டப் புயல் தலைவர்!
தஞ்சை தரணி தண்ணீர் இன்றி காய்கிறது.     அங்கு சென்று மக்களை   சந்திக்கலாமே!


தானைத் தலைவர் தன் படைப்பரிவாரங்களைக் கொண்டு..தில்லியிடம் பேசி..நிவாரணங்களைப் பெற்றுத் தரலாமே !

 ஆள்வோர் அரசு இயந்திரங்களை முடுக்கி விட்டு..பயிர்கடன், டீசல் மானியம், போன்ற மற்ற உதவிகளை செய்யலாமே..முழுவீச்சில் !



 சுனாமி, வெள்ளம் போல மழைஇன்மையும் அதனால் வரும் பஞ்சமும் ..ஒரு பேரிடர் தான்!
தஞ்சை விவசாயிகள் நம்பிக்கை இழந்துவிட்டனர்....!

நாங்கள் இருக்கிறோம்..நம்பிக்கை இழக்காதீர் என தஞ்சைவிவசாயிகளை மட்டுமல்ல..தமிழக விவசாயிகள் அனைவருக்கும் ஆறுதல் கூற வேண்டிய கடமை..மத்திய, மாநில ஆள்வோருக்கு உண்டு!

 


விவசாயத் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும்..அது நம் முதல்வர் கையில் தான் இருக்கிறது..! விதைத்த செலவையாவது மானியமாகக் கொடுத்தேயாக வேண்டும்!

இந்த தடவை நாம் விவசாயியைக்  கைவிட்டோமானால்   ..விவசாயமே செத்துவிடும்..!

நம்பிக்கையுடன் காத்திருக்கும் தமிழக விவசாயிகள்!










Friday, December 21, 2012

வைகுண்ட வாசனின் மார்கழி ஏகாதசித் திருவிழா !

 2012ல் டிசம்பர் 23ம் தேதி..வைகுண்ட ஏகாதசி..ஞாயிறு காலை ஆரம்பித்து..24ம் தேதி திங்கள் காலை நிறைவுறுகிறது ! பெரும்பாலான வைணவத் தலங்களில் ஞாயிறு இரவு முழுக்கக் கொண்டாட்டங்கள்.திங்கள் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு !

விரதம் மேற்கொள்பவர் ஞாயிறு காலையில் ஆரம்பித்து..ஞாயிறு இரவு கண்விழித்து..திங்கள் அதிகாலை வைகுண்ட வாசல் கடந்து..திங்கள் மாலை வரை விரதம் தொடர்ந்து அரிசியை பின்னமாக்கி சமைத்து சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும் ! ( ஒரு பட்டரிடம் அறிந்தது )

விரதகாலம் பால்பழம் அருந்தலாம்..நீராகரம்..சிறிது சிறிதாக அருந்திக் கொண்டே இருக்க வேண்டும் ! திட உணவை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் ! ( புதிதாக இருப்பவர்கள் ..முடியவில்லை எனில் வெங்காயம் போடாமல் உப்புமா சாப்பிடலாம் )

வைகுண்ட வாசனின் மார்கழி ஏகாதசித் திருவிழா !



பூலோக சொர்க்கமாம் திருவரங்கத்தில் கூட்டம் அலை மோதும். கடந்த சில வருடங்களாக கட்டணதரிசன முறை அமல்படுத்தப்பட்டு, சிறப்பாக நடைபெறுகிறது. வரிசைதான் என்றாலும், நேரம் எடுத்துக்கொண்டாலும், எளிதில் தரிசனம் கிடைக்கிறது.!

 உற்சவர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி இருப்பது அழகு..!ஆடல்..பாடல்கள் அங்கு அரங்கேறிய வண்ணம் இருக்கும்!

திருப்பதியில் மிகுந்த பக்தர்களை எதிர் பார்த்து ஏற்பாடுகள் நடக்கின்றன ! திருவல்லிக் கேணியில் சுமார் 5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது ! 


திருவரங்கன் திருவடியே சரணம்!



Monday, December 10, 2012

நீ ..நீ நடிகனாகவே இரு! தலைவனாக வேண்டாம்..!

 வந்தாரை வாழவைக்கும் எல்லா தேசமும்..
வந்தாரையும் கொண்டாடும் தமிழ்தேசம் !

தலைவன் என்று பேரும் சூட்டும்..
திலக'மிட்டு முடி'யும் சூட்டும்!


அரிமாயனை கும்பிடுவர் எம்மக்கள்..
திரைமாயரை நம்பிடுவர் அம்'மாக்கள்!



நிழல் போலே நிஜத்திலும்
இருக்கிறாய்..சரி!
இருப்பாய்..
என்றெண்ணி
நிஜமாகவே உன் நிழல்போல்
எம்மக்கள்!

நீ ..ஒரு தாரகை!  தலைவனாக வேண்டாம்..!


உள்ளூர் சாதித் தலைவர்கள் சலித்தவேளையில்
வெளிச்சமிட்டு வந்த மேனனின்
புன்னகையில் மயங்கி..
மகுடம் சூட்டி மகிழ்ந்தனர் எம்மக்கள்!
 அம்மக்கள் பெற்றமக்கள்
அதே வழியில் ராசனாக்க
ராயரை எண்ணி எண்ணி
இருந்த வேளையில்
உனக்கும் ஆசை வந்து வந்து
போகப் போக
வானத்து சந்திரனானாய்..
ரசிகனின் கண்மூடி கண்மூடி ரசித்தாய்!


நீ ஒரு ஆலமரம்..
உன்னோடு வளரலாம்
என உளறித் திரிந்தோர்க்கு
பேரன்கள் பிறந்துவிட்டனர்..!




கலை பொதுவல்ல..அது சுயம்..லாபம் !
அரசியல் பொது..அது பளு..தொல்லை !
என முடிவெடுப்பதற்கு
அறுபது அகவைகள்
கடந்து விட்டன!



ஐந்து வருடம் ஒருமுறை "வாய்ஸ்" மலர்வது
மகாமகத்தையும்..குறிஞ்சிக்கும் ஒப்பானது!


காவிரியில் துவைக்கப்பட்ட உன் சட்டை
உன் மறுபிறவியில் மன்னிக்கப்பட்டு விட்டது!


நதிநீருக்கு நீ அளித்த கோடி..
கரைந்துவிட்டது நதிகளின் சங்கமத்தில் ஓடி!
மகள்களின் திருமணத்தில் நீ அளித்த விருந்து..
பீமராஜனாம் ரசிகர்களுக்கு பெரு மருந்து!




எல்லா வயசுலயும் உண்டு..
எல்லா அமைப்பிலும் உண்டு..
எல்லா தேசத்திலும் உண்டு..
அவை உன் திரைநடிப்பெனும் பூவை
சுவைக்க சுற்றும் வண்டுகள்!
அவற்றுக்குத் தேனை அள்ளித்தா!
அறிவுரை எனும் கஷாயம் வேண்டாம்!

உன்வழி அதுதான்...
ஆம்..தனிவழி!
அதுவே பெருவழி..
வேண்டாம் உனக்கு வேற்று  படுகுழி..!

நீ
தலைவனாக வேண்டாம்..
தாரகையாகவே இருந்து கொள்!






வாழிய பல்லாண்டு..!
வாழிய ஐஸ்வர்யங்களுடன்..!
வாழிய புகழுடன்!





Friday, November 16, 2012

பராசக்தியில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டுமா?


  ஜனங்க நாளுக்கு நாள் ரொம்ப தொட்டாசிணுங்கியா மாறிட்டு வர்றாங்க..!இதுதான் பரிணாம வளர்ச்சியான்னு கேக்கணும்னு தோணுது..! ஆனா பாருங்க இந்த வார்த்தை தான் கைஇடுக்கிலெ  சிக்கிட்டு..எழுத வரமாட்டீங்குது !

மதம்.., சாதி..,மொழி ..அபிமானம் ரொம்பவே ஜாஸ்தி ஆயிட்டு! பெட்ரோல் குண்டுல வந்து நிக்குது..! ஒத்த சினிமாவ உருப்படியா உடமாட்டிங்குது! பதிவு..கீச்சுல திட்டிக்கிறாங்க..குழாயடி சண்டை வேற..ஜெயிலுக்கு அனுப்பிச்சு பவரக் காட்றாங்க..!

இஷ்டத்துக்கு பேசுறாங்க..எழுதுறாங்க..சினிமா காட்றாங்க..! அது சுதந்திரம்..பேச்சுரிமைனு சொல்லிக்கிறாங்க..! உடனே எதிர் கோஷ்டி..க்ருப்பா வந்து பொரண்டு உருண்டு ரகளை செஞ்சு..அவங்களோட போராட்ட உரிமையை டெமான்ஸ்ட்ரேட்' செஞ்சுக் காமிக்கிறாங்க!

பலமான க்ரூப் அப்போதைக்கு ஜெயிக்குது..!அடிவாங்குனவங்க காயத்தையே உத்து உத்து பாத்து கிட்டு வெறியேத்திக்கிறாங்க..! சந்தர்ப்பம் வர்ற வரைக்கும் கருவிட்டு இருக்காங்க!

காரணம் நம்ம தேசத்தோட பல வண்ணக் (வர்ணாசிரம) கலாச்சாரம் தானுங்க!

பராசக்தியில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டுமா?


இனிமே இங்க பொதுவா கூட ஒரு நியாயத்தை ..யோ'சிக்காம சொல்லமுடியாது போல!

கதையிலே..பாட்டுலே..படத்துலே பேரு வைக்கிறதுக்கு எல்லாம் சண்டைக்கு வர்றாங்க! நாகப்பா..நாகலிங்கம்..மாரினு நம்பியார் எத்தனை தடவ கூப்பிட்டு இருப்பாரு!

கதாப்பாத்திரத்துக்கு பேரு வைக்கிறதை கண்காணிக்க தனியா சென்ஸார் போர்டு அதிகாரிகளைப் போடணும்..!

திரைக்கதை மொதல்லயே எழுதிட்டு ஒரு ஆயிரம் காப்பி எடுத்து..எல்லா மத..சாதி..கட்சி..,மொழி..இனம்..,சங்கம்..அரசு ஆபீஸ்களுக்கு கூரியர் செஞ்சு "என்னோசி" வாங்கிட்டுத்தான் வேலையத் தொடங்கணும்..அதுக்குள்ள உனக்கு வயசாயிடுமா!..உருப்படியா  பொழைக்கணுமா .வேணாமா?

தேனிகய்னா ரெடி..தெலுகு படத்துனால..அந்த ஊர் பிராமணர் கொதிச்சுப் போய் போராட்டம் எல்லாம் செஞ்சிருக்காங்க..இங்க துப்பாக்கி பட்ற பாடு எல்லாத்துக்கும் தெரியும்!


இன்னொரு அரங்கேற்றமோ ..சாவித்திரியோ... பாரதி கண்ணம்மாவோ, அலைகள் ஓய்வதில்லையோ..தட்டத்தின் மறையத்து வோ..இனி எடுக்கப்படும் சமீப சாத்தியம் ஒரு கேள்விக்குறியே!

 கொடூர..மோசமான கேரக்டர்களுக்கு இனி எந்தப் பெயர் வைத்தாலும் எதிர்ப்பார்கள்..! காண்பிக்கப்படும் சம்பவங்கள், தோரணைகள், பழக்கவழக்கங்களில் எந்த மத..சாதி சாயல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் திரைத் துறையினரும்..கதாசிரியரும்!

ஜெயம் படத்தில் மோசம் போகும் பெண்பாத்திரத்திற்கு " அலங்காரம்"னும்..கலகலப்பில் மொக்கை வில்லனுக்கு ' வெட்டுப்புலி"னும்  பேரு வெச்சமாதிரி..புயலுக்கு ஆப்பிரிக்க பேரு வெக்கறமாதிரி ரோசணை செஞ்சுத்தான் வைக்கணும்!

வைக்கப்புல்லு..மண்ணாங்கட்டி, திருகாணி,,தலைகாணி..,திருவாத்தான்..,வரிப்புலி..,வண்டுருட்டி..,மாதிரி பேரு வெச்சிங்க..தப்பிச்சீங்க!


திரைப்படங்கள்.. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசினால் நியமிக்கப்படும் தணிக்கைத்துறை சான்று பெற்று வரும்போதே அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்றுதானே அர்த்தம்!
மறுபடியும் ..உணர்வுகளின் அடிப்படையில் மாற்றம் கோருவதோ..நீக்கக் கோருவதோ..கல்ச்சுரல் போலீஸிங்..என ஆகிவிடுமே!


 இந்நிலை தொடர்ந்தால்..வேறு வழியில்லை..எல்லாக் கோட்டையும் அழிங்க..முதல்ல இருந்தே நான் 50 பரோட்டா சாப்பிடறேன் கதையாக...பராசக்தியில் இருந்துதான் ஆரம்பிக்கணும்! அந்தப்படத்தில் வரும் மத சம்பந்தமான வசனங்களை  நீக்குவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் ..சுத்தப்படுத்தலை!

என்னவோ போங்க..! ஆனா ஜாலியா எடுத்துக் கோங்க..!













Monday, November 5, 2012

இந்த தீபாவளிக்கு என்ன ஃபேஷன்?

ஃஃபேஷன் பத்தி பேசுனாலே அது பெண்களை மட்டுமே குறிக்கும் சொல்லாக மாறி விட்டது..அதிரடி ஸ்டைல்..டிசைன் மாற்றங்கள் மட்டுமே அவர்களை திருப்தி செய்யும்!

 விளம்பரங்கள் அனைத்தும் அவர்களையே குறி வைத்து எடுக்கப்படுகின்றன! அதுவும் அப்போதைய 'செலிபிரிட்டி நங்கையரை' வைத்து..!
 

பாட்டியாலா டிசைன்கள்!



ஆண்கள் பாவம்..ஜீன்ஸ்..கட்டம் போட்ட சட்டைலேயே இன்னும் திரியறாங்க..இந்த வருஷமும்..எந்த மாற்றமும் இல்லை..!
பசங்களோட இந்த வருஷம் கலர் ஆல்மோஸ்ட் பேண்டுல டார்க் கிரே..கறுப்பு..இப்படித்தான் போகுது..!
செக் ஷர்ட் இன்னும் ஒரு வருஷம் தாங்கும் போல..! 


செருப்பு போடறவன் எல்லாரும் கிராமத்தானுங்கன்னு நெனப்பு பரவிடுச்சு..! 
கேஸுவல் ஷூ கூட..டார்க் வண்ணத்துல தான் போடறாங்க!
ரெடிமேட் ஐட்டங்கள் தான் இளசுகளின் சாய்ஸ்..! கல்யாணத்துக்குப் பின்னாடி உடம்பு சைஸ் கூடக்குறைச்சல் ஆணவங்க தான்..பாவம்! துணி எடுத்துதான் தைக்கணும்! தையல் கூலி எல்லாம் எக்கச்சக்கம்!   பெரிய டைலருக..பேண்டுக்கு ரூ500ம், ஷர்ட்டுக்கு ரூ350ம் சார்ஜ் செய்யறாங்க! ஜாக்கெட்டுக்கு ரூ200 ஆயிடுச்சு!


பொதுவா..சில உஷார் பார்ட்டிங்க..ஆடித்தள்ளுபடியிலேயே தீபாவளிக்கும் சேர்த்து துணி எடுத்து வெச்சுக்கிறாங்க..காரணம்.சீப்பா வாங்கிறாமன்னு தான்!

இந்த வருஷம் தீபாவளிக்கு சரியா..45 நாளைக்கு முன்னாடி தான் துணிக்கடைகளுக்கு புது சரக்கு வந்திருக்கு! வந்ததெல்லாம் அதிர வைக்கிற " பளீச் " வண்ணங்கள் தான்!

பஞ்சு மிட்டாய் ரோஸ்..பிரைட் பச்சக்கிளி கலர்..மலைக்க வைக்கும் மஞ்சள்..இது தான் இந்த வருஷக் கலர்கள்!
காட்டன் ரகமெல்லாம் 25 சதமும், செயற்கை இழை துணிகள் 15 சதமும்..பட்டு  20 சதமும் விலைகூடி இருக்குது! மின்வெட்டினால தொழில்கள் எல்லாம் சுணங்கி போனதும் ..விலை ஏற்றதுக்கு ஒரு காரணம்!

Rosy Pink Faux Georgette Printed SareeGreen Faux Georgette Printed SareeShaded Orange Faux Georgette Printed Saree

Yellow Baluchari SareeChanderi Cotton


 போன வருஷம் துணிக்கடைய விட எலக்ட்ரானிக்ஸ் மோகம் அதிகமா இருந்தது..இந்த வருஷம் துணிக்கடைக நல்லா ஓடுது!

பெரிய..அகலமான டிவி வாங்கறதுலயும்..மெட்ராஸ்ல டிஜிட்டல் டைரக்ட் கனெக்ஷன்லேயும் மக்கள் ஆர்வமா இருக்காங்க..!
செல்போன்..கேமராவும் நல்லாபோகுது!

பட்டாசு தான் ரொம்ப விலை கூடிருச்சுன்னு சொல்றாங்க! என்ன பட்டாசு வாங்கோணூம் ங்கிறத விட ..எவ்வளவு ரூபாய்க்கு வாங்கப் போறம்னு மொதல்லேயே முடிவு பண்ணிக்கிறது  புத்திசாலித்தனம்! சரவெடி..புஸ்வானம்..சங்குசக்கரம்..மத்தாப்புன்னு முடிச்சிக்கிறது நலம்! நாம விடற ராக்கெட்டை விட மத்தவங்க விடறது தான் நல்லாத் தெரியும்!

ஒரு கூட்டம் பல்ஸர்..யமஹான்னும், சிலர் நேனோ..,ஆல்டோ 800ம்னும் திட்டம் போடறாங்க! டிசம்பர்ல வண்டிக கொஞ்சம் எளிதா கிடைக்கும்..வருஷக்கடைசின்னு பார்க்காதவங்க அப்போ வாங்கிக்கலாம்!

கூட்டுக் குடும்பம் குறைஞ்சதினாலே..பட்சணம் எல்லாம் கடையிலதான் வாங்குறாங்கோ..! முடிஞ்சவரைக்கும் கடைப் பலகாரம் ஒதுக்கிடுங்க..செஞ்சு நாளாயிருக்கும்..விலையும் அதிகமா இருக்கும்! ஆச்சி குளோப்-ஜாமூன் மிக்ஸ் சூப்பரா இருக்கு..டிமாண்ட்லே ஒடிட்டு இருக்கு! காரத்துக்கு முறுக்கு அல்லது ஓலைமுறுக்கு செஞ்சிடுங்க..ரொம்ப ஈஸி! வயிறும் கெடாது!

தீபாவளி அன்னிக்கு கதவ சாத்திட்டு கன்றாவி நிகழ்ச்சிகளை பாக்காம..சொந்தங்களை..நண்பர்களை கூப்பிட்டு பேசுங்க..பக்கமா இருந்தா போயிட்டு வரலாம்.! அடுத்த மத ஃபிரெண்டுகளுக்கு பட்சணம் கொடுங்க..நீங்க மட்டும் கேக்கு, பிரியாணின்னு அவங்ககிட்ட வாங்கி சாப்பிடறீங்க இல்ல!




எல்லாருக்கும் இனிய 2012 தீபாவளி வாழ்த்துக்கள் !











Thursday, October 11, 2012

வயசானா இல்ல..விவரம் இருந்தாதான் இனி வாத்தி!


நம்ம தலைவருக்கு திரைப்பட " வாத்தியார' கொஞ்சம் கூட பிடிக்காது..சென்ம விரோதி.! ஆனாக்க..பள்ளிக்கூட வாத்தியாருகன்னா அம்புட்டு பிரியம்!

அதே மாதிரி நம்ம செனத்துக்கும்...மிலிட்டரி வேலைக்குப் போகறத விட கவுர்மிண்ட் வாத்தியார் வேலைக்குப் போறதுல உசிரு! சரி..மிலிட்டரிக்கு வேண்டாம்..போலீசாகிறயா..வாத்தி ஆகிறயான்னா..என்ன சொல்லுவோமுனு எல்லாருக்கும் நல்லாத் தெரியும்!

கலக்டர் போஸ்ட விட பிரியமானது..அரசு வாத்தியார் வேலதான்! ஏன்னு கேட்டா..அது அப்பிடித்தான்..வெளக்கம் வேணும்னா உங்க புள்ளைகள..கவுர்மிண்ட் பள்ளிக்கூடத்துல சேத்து படிக்க வையுங்க..நீங்களே தெரிஞ்சுக்குவீங்க!


இன்னும் புரியலையா..போட்டி போட்டுட்டு எல்லா கவுர்மிண்டும் அள்ளிக் கொடுக்கறத..கேட்டு தெரிஞ்சுக்கோங்க! இப்பக்கூட ஏழு பெர்செண்ட் பஞ்சப்படி ஏத்தியிருக்காங்க! அதெல்லாம் ஆட்டாமேடிக்!

பெரைவேட் கம்பெனிகளும் கவுர்மிண்ட் வாத்திகளுக்கு சலுக கொடுக்குது! கார் வெலையில பத்தாயிரம் கம்மியாம்!

வயசானா இல்ல..விவரம் இருந்தாதான் இனி வாத்தி!


உறவுக்கார டீச்சர் ஆத்தா ஒண்ணு..நான் வாங்குன கடசி மாச சம்பளத்த வுட இப்ப வாங்குற மாச பின்சின் ஜாஸ்தின்னு..சொல்லிட்டு,,மனசாட்சி கொஞ்சம் உறுத்துதுன்னும் சொல்லிட்டு போச்சு!



கவுர்மிண்ட்/ பெரைவேட்ன்னு இல்லாம, எந்த ஒரு இடத்துல இருக்குற உத்யோகஸ்தனையும், நெனச்சு..நெனச்சு பொறாமப் பட வெக்கிற..ஒரே உத்யோகம்..கவுர்மிண்ட் வாத்தியார் உத்யோகம்தான்!

அதுவும் கவுர்மிண்ட் வாத்தியாருக மேல இந்த பெரைவேட் பள்ளிக்கூட வாத்திகளுக்கு இருக்குற வவுத்தெரிச்சல் இருக்கே..சொல்லிக்கவே முடியாது...கொஞ்ச நஞ்சமல்ல..அம்புட்டுத் தேறும்!

அவிக வவுத்தெரிச்சல் எல்லாம் சாபமா மாறி ஒண்ணு சேர்ந்து, பெரிய இடியா வந்து இறங்கிடுச்சு! கரஸ்'ல பெரிய படிப்புக படிச்சாலும் சேரி, சந்தைக்கு பின்னால இருக்குற வாத்தியார் ட்ரெய்னிஙில படிச்சலும் சேரி...வேலவாய்ப்பு ஆபீஸ்ல பதியிறது தான் ரொம்ப முக்கியமா இருந்தது! 

அடுத்த முக்கியம்..முன்னால பொறந்து இருக்குற வேண்டியது!ஒப்பற்ற "அப்பாயிஸ"க் கொள்கதான் இதுவரைக்கும்..வாத்தியார்களை முன்னேத்தி இருக்குது! அதென்னுன்னு கேப்பீக..சொல்றேன்!

'முன்னால் பிறந்தவன் அண்ணன்..பின்னால் பிறந்தவன் தம்பி!' இதாங்க அது!

இப்போ அதுக்கு வேட்டு வந்திருச்சு!
வயசெல்லாம் இனி வேகாதாம்..வரிசப்படி இனி ஆர்டர் வராதாம்!
என்ட்ரன்ஸ் எழுதணுமாம்! அதுல கிடைக்குற ரேங்க் தான் முக்கியமாம்! 

அதுலயும் பாருங்க..புதுசா அடுத்த இடி.."வெயிட்டேஜ்" வேணுமாம்.! என்னாய்யா ..வேல வேணும்னா யார வெயிட்டா கவனிக்கனுமினு நீங்க கேப்பீங்க..! அதில்லைங்..உங்க இளங்கலை..முதுகலை மார்க்க வெச்சு,,ஏத்துவாங்களாம்..உங்களுக்கு வெயிட்!
ஏனுங்..இப்படி உங்க முகமெல்லாம் வெளிறிப் போச்சு!

காலேசுக்குப் போணோம்..கன்னிகளைப் பாத்து கவித வரஞ்சோம்..அரசியல் பேசுணோம்..சினிமா போணோம்..ஸ்ட்ரைக் செஞ்சோம்..லேடியோப் பெட்டியில கரஸ் செஞ்சோம், ஜஸ்ட் பாஸ் பண்ணா போதும்னு நெனச்சோம்..இப்ப அப்பத்திய   காலேசு மார்க்கும் வேணும்னா எப்படி?
மார்க்கு வாங்குனவனுக்குத் தான் அறிவும் ..விவரமும் ரொம்பத் தெரியமான்னு ..நீங்க கேக்குறது நியாயமாத்தான் தெரியுது!

என்ன பன்றது..அம்மாவத் திட்டி என்ன பிரயோச்சனம்..மத்திய அரசோட கட்டாயாமாம் இது!

புலம்பி ஆவறது ஒண்ணுமில்லே! ஒரு ரோசனை வேணும்னா சொல்ரேன்..கேட்டுக்கோங்! இன்னம் போய் படிக்கிறதெல்லாம்..சும்மா தமாசு!
ஏதாவது ஒரு கட்சியில சேர்ந்து..மபி ஆகிடுங்க..அதாங்க மக்கள் பிரதி"நிதி"!
நம்ம தமாசுக் கவுண்டமணி சொல்றாப்புல..அந்தக் கருமத்துக்கு அதெல்லாம் தேவையில்லையப்பா!

கவுர்மின்ட் பள்ளிக்கூடத்துல...வயசுக்கு மட்டுமே வேலை இடமில்லைன்னு இப்ப வந்திருக்கு! 

அரசு காலேசுக்கு அட்மிசன் அடிதடி நடக்குற மாதிரி..அரசு பள்ளி வாசல்களிலும் "மாணாக்கர்கள் அட்மிஷன் முடிந்துவிட்டது..இனி அடுத்த வருடம் தான்" அப்படிங்கிற போர்ட் மாட்டப்படும் காலம் வரணும்! கண்டிப்பா அடுத்த பத்தாண்டுகளில் நடக்கும்!

வாய்மையே வெல்லும்! 









Tuesday, October 9, 2012

திருட்டு மின்சக்தியை அனுபவிக்கும் தலைநகரவாசிகள்!

 கொங்கிலிருந்து சென்று வேலை நிமித்தமாக சென்னையில் வசிக்கும் நண்பர் வீட்டில் விஷேமாம்..ஊருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம்.ஆனாலோ அவருக்கு கொங்கு செல்ல விருப்பமில்லை.காரணம் கேட்டால்..அந்த மின்வெட்டில் சென்று சிரமப்பட அவரால் முடியாதாம்!

என்ன செய்வது? உறைக்கும்படி  நன்கு வைதேன்....சிரித்துவிட்டு" கோபமா இருக்கிறாய் போல..அப்புறம் பேசறேன்'னு சொல்லிவிட்டு தொலை பேசியை வைத்துவிட்டார்!

பத்து நாளா அனைத்துப் பத்திரிக்கைகளிலும் பார்க்கிறேன், யாராவது சென்னைவாசிகளின் மின் திருட்டை எழுதிகிறார்களா என்று..ஊஹூம்.. மின்வெட்டை  சிறிய அளவில் எதிர்க்கும் மக்களின் போராட்டங்களை மட்டும் 13ம் பக்கத்தில்..மரணசெய்திகளுக்கு நடுவில் போட்டுவிட்டு ஒளிந்து கொள்கிறார்கள்!

திருட்டு மின்சக்தியை அனுபவிக்கும் தலைநகரவாசிகள்!




என்னய்யா..சென்னைவாசிகளைத் மின்சாரத்தைத் திருடுபவர்கள் என்று எப்படிச் சொல்லலாம்..மீட்டர் பணத்தை சரியாகத்தானே கட்டுகிறார்கள்? என்று வாதிகள் கேட்கலாம்.
ஏனைய தமிழ்வாசிகளின் மின்சாரத்தையும் சொற்ப வெட்டைத் தவிர்த்து, அலங்காரமாக அட்டகாசமாக லஜ்ஜை ஏதுமின்றி அனுபவிக்கும் தன்மையை வேறு எவ்வாறு அழைப்பது? கொள்ளை என்று அழைக்கலாமோ?

ஏனைய தமிழகம் மின்வெட்டினால் வாடி வதங்கி வாழ்வாதாரம் மறுக்கப்பட்டுத் தவிப்பதை ஆட்சியாளருக்குக் கொண்டு செல்ல அரசியல்வர்க்கமும் , அதிகாரவர்க்கம் தவிர்க்க முயல்வதை வேணுமானாலும் சகித்துக் கொள்ளலாம்...ஊடகவியலாரும் சேர்ந்து மறைப்பதை சாடியே ஆக வேண்டும்!


சனநாயகத்தின் இந்த நாலாவது தூண்களின் செங்கற்கள்..அதாங்க செய்தியாளர்கள் .பெரும்பாலானோர் வசிப்பது சிங்காரச் சென்னையிலே..இதில் பார்ப்பன..பகுத்தறிவு..புரட்சிகளும் அடக்கம்! இவங்கதான் தமிழகத்தின் தலை எழுத்தை தங்கள் பேனாவில்,மைக்கில் நிர்ணயிப்பவர்கள்!தங்களின் விருப்பங்கள்,எண்ணங்களை ஊடக வாயிலாக மக்களின்  மண்டைக்குள் திணித்து,பொதுக்கருத்தாக மாற்ற முயன்று..அதில் பலசமயம் வெற்றியை ருசிப்பவர்கள்!

இதுல ஒருத்தராவது அடடா..நாம மட்டும் 24 மணிநேரமும் வெட்டில்லாமல் சுகப்படுறோமே..மற்ற தமிழ்பகுதிகாரர்கள் வாடுகிறார்களே..எனவே தமிழக அரசே..சென்னைக்கும் மின் தடை அறிமுகப் படுத்து..மீதமாகும் மின்சாரத்தை..ஏனைய தமிழகத்துக்கு பகிர்ந்தளி 'னு யாராவது சொல்றாங்களான்னு பாருங்க!

எங்கே மற்றபகுதிகளைப் போல் சென்னைக்கும் மின்வெட்டைக் கோரினால், தங்களுக்கும் " சுகக்கேடு" வந்துவிடும் என்று தோணும்படி நடந்து கொள்கிறார்கள்!

சென்னைவாசிகளுக்கு எதற்கு "ஏ'' வகுப்பு சிறைவாசிகளுக்குப் போல் மின்சலுகை? ஏனைய தமிழ்பகுதியினர் என்ன கொடுங்குற்றம் செய்தார்கள்?

அதிகவிலைக்கு கரண்டை வாங்கி தரகுமுதலாளிக்கு கொடுக்காதே என்று அரசுக்கு ஆலோசனை கூறும் வர்க்கப்புரட்சிகள் கூட, சென்னைவாசிகளுக்கும் மின்வெட்டை அமல்படுத்து என்று  கூவ எண்ண்வில்லை என்று நினைக்கும் போது" அவாஅவா பாடு அவாளுக்கு" என்பதே நியாபகம் வருது!


பிய்த்து பிய்த்து வழங்கப்படும் மின்சாரம்.." பிச்சையை'' நினைவூட்டுகிறது. இதனால் ஏதும் பிரயோசனமில்லை..விவசாய சனியன்களுக்கும்..தரகு தொழில் முனைவோருக்கும்!


ஆகவே..சென்னைவாசிகளே..எல்லாத்தையும் நீங்களே அனுபவிச்சுக் கோங்கோ..ஒரே கோரிக்கை சென்னைவாசிகளுக்கு..ஏனையத் தமிழகத்துக்கு தடைபட்ட மும்முனை மின்சாரம் வழங்குவதற்கு பதிலா தடையில்லா ஒருமுனை மின்சாரம் வழங்கினால் போதும்...டிவி பார்த்துட்டு..கஞ்சிகுடிச்சிக்கிட்டு உங்களை மாதியே சொகமா இருந்துக்குவோம்..வெட்டிவேலை செய்யாம!
 விவசாயியும் ..தொழிலதிபன்களும் முடிஞ்சா ஜெனெரேட்டர் போட்டுக்கட்டும்..இல்லேன்னா திவாலாகட்டும்! அது அவனுங்க தலை எழுத்து!

இதை மட்டும் எழுதுங்க..பேசுங்க..  பரிசா  கொடுக்க எங்ககிட்ட ஈமுக் கோழிங்க நெறைய இருக்கு..ஈமு பிரியாணி வேணும்னா செஞ்சு பார்சல்ல அனுப்பறோம்!

உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போவட்டும்!






Friday, September 28, 2012

தமிழர் ஆபத்தானவரா?

 ஆங்கிலேயர் தான் இந்தியாவை உருவாக்கினர் என்பது மிகையன்று.!.பல்வேறு சிறிய,பெரிய சமஸ்தானங்களை ஒன்றிணைத்து.ஒரு குடையின் கீழ்... அவர்களே கொண்டு வந்தனர்!..அது சரித்திரம்!

 வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது..சொன்னவை.." விரைவில் இந்தநாடு உள்நாட்டுப் போரில் சிதைந்து..மீண்டும் பலதுண்டுகளாக உடைந்து போகும்" என்பதேயாகும்!

வல்லபாய் படேலின் சீறிய முயற்சியால் நாடு, பிணைக்கப்பட்டு..65 வருடங்களாக உறுதியாகி வருகிறது!

நாட்டுப்பற்று நம் உடலில் ஊற்றி வளர்க்கப்பட்டது...
மொழி வாயிலாக..
ஊற்றியது தமிழ்!

 வெற்றிவேல்..வீரவேல் என்றிருந்த நம்மை" வாழிய பாரத மணித்திருநாடு" என்று பாவலர்..மாற்றிப் பேச வைத்தனர்..!
இயல்பாக அது நம்மிடம் ஏற்றுக் கொள்ளப்பட்டது!
ஏனெனில் இதுகாறும் நாட்டின், அண்டைப் பரப்புகளிடம் நமக்கு தொன்றுதொட்டு இருந்துவந்த பந்தம்!

தமிழர் ஆபத்தானவரா?

ஈழத் தமிழர் மற்றும் அவர்களின் தலைவர்கள்...மத்திய ஆளும்கட்சித் தலைமையின் எண்ணத்தின்படி, பழிவாங்கப்பட்டதாக..நம் இன ஆர்வலர்களால் கடுமையாக குற்றம் சாட்டப்பட்ட போதும்..பெரும்பாலோனார் அதைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை!

சமீபத்தில் அந்த நாட்டுப்பற்றுக்கு சோதனை ஒன்று வந்துள்ளது..! வடவர் மூலமாக!
மையாட்சியாளர் மட்டுமல்லாமல்..பொதுவாக வடவர் அனைவருக்கும்..தமிழர் மேல் ..நம்நாட்டவர் என்ற மதிப்பும்..அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை என்பதை...உணர்த்தும் விதமாக சமீப கால நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்!

கொடுங்கோலன் ராஜபக்ஷேவை அழையாதீர்..விரட்டுகள் என்று நம் மாநில ஆட்சியாளரும்..கட்சியாளரும், இனவாளரும் கதறியதை..கூக்குரலிட்டதை..தேசியக் கட்சிகள் புறக்கணித்தன!

நம் மாநில மக்களின் உணர்வை..கொடுங்கோலன் எதிர்ப்பின் மூலமாக உணர்த்தச் சென்ற..வைகோவை..வடவர்..எல்லையிலே மறித்ததோடு மட்டுமல்லாமல்..பாதுகாப்புப் படைகளுக்கு..ஒரு சுற்றறிக்கையும்,எச்சரிக்கையும்..விடுத்துள்ளனர்..பாருங்கள்! அது வெந்த புண்ணில் வேல் குத்தும் சமாச்சாரம்!

"தமிழர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்..ராஜீவ் காந்தியையே கொன்றவர்கள்!'' என்பதே அந்த எச்சரிக்கை!



இது நம் நாட்டுப்பற்றை சோதித்துப் பார்க்கும் செயல்! நம்மை வெறுப்பேற்றும் செயல்!

மகாத்மா காந்தியைக் கொன்றது யார்..தமிழனா..வடவன் தானே? நீயே கொடூரன் அன்றோ?

எங்கும் நமக்கு அவமானம்..இழப்பு..ஏன்?

வீரம் மட்டும் இருந்தால் போதாது..
விவேகமும் கூடவே வந்தாலும் பத்தாது..
ஒற்றுமை இல்லையே..
கருத்துத்தொற்றுமை காணவில்லையே!


ஏனெனில்லை நம்மிடையே ..ஓற்றுமை?
சுயவிமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இப்போது..!
கூடி செய்வோம் தப்பாது!


ஆவேசப்பட்டு பலனில்லை. சரியான நேரம் வரும்வரை.பொறுமை காக்க வேண்டும்! நம் எதிரியைப் போன்றே!

நமக்கென்று ஒரேக் கருத்து தான்..பொதுக்கருத்து தான்..என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..ஏற்றுக் கொள்ள வெண்டும்!

வாருங்கள் ஒன்று கூடி வெற்றி மாலை சூடிடுவோம்!



Saturday, September 8, 2012

மம்முட்டியின் உதவியும்..விமர்சகர்களும்!

மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி எனும் முகமதுகுட்டி, சமீபத்தில் சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் காயம் பட்டோருக்கு, ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதற்காக, பல லட்சம் பொறுமான மருந்துகளை, ஒரு மருத்துவ நிறுவனம் மூலம் அளிக்க முன்வந்துள்ளார்!

மனிதாபமிக்க மகத்தான இந்த சேவை..பாராட்டுக்குரியது, வரவேற்புக்குரியது!

பொதுவாழ்வில் இருப்போர்க்கு..அவர்களுக்கு இருக்க வேண்டிய சமூக அக்கறையை..செயலால் உணர்த்தும்... .. ..மம்முட்டியின் இச்செயல்!


சுனாமியின் போது இந்திநடிகர் விவேக் ஓபராயின் முயற்சியை, ஒப்பிட்டு கூறத்தக்க வகையில் மம்முட்டியின் செய்கை அமைந்துள்ளது! லாபத்தை ஏதும் இவர்கள் கணக்கிடவில்லை..மனிதாபிமானம் ஒன்றே தான் இவர்களின் செயல்களுக்குப் பின்னால்!

மம்முட்டியின் இச்சேவை பெரும்பான்மை பாராட்டு பெற்றிருப்பினும், மக்களின் கோபம் தமிழ்நடிகர்கள் மீதான கடும்விமர்சனமாக உருமாறி வெடிக்கத் துவங்கியுள்ளது!

கும்பகோணம் பள்ளி தீக்கொடுமையின் போது, நிறைய வாக்குறுதிகளை அள்ளி வீட்டு, பிறகு அதை செயற்படுத்த முனையாத தமிழ்நடிகர்கள் மீதும், நதிநீர் இணைப்பிற்கு நிதி அளிப்பதாக அளந்த ஸ்டைல்நடிகர் மீதும் மக்களின் கோபக்கணைகள் திரும்பியுள்ளன!


பொதுவாகக் கலைஞர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள்..ஏதாவது வேகத்தில் சொல்லி விடுவார்கள்..பிறகு மறந்துவிடுவார்கள் என்றாலும், தங்களை வாழவைக்கும் அவர்கள் சிறிய அளவிலாவது தொண்டாற்ற வேண்டுமென, மக்கள் எதிர்பார்ப்பு!

சூர்யாவின் அகரம், கமலின் ரத்தசேவை, சசிகுமாரின் கல்விச்சேவை..இவைப்பற்றி கேவலமாக விமர்சீக்கும் மாற்றுக் கருத்தாளர்கள்...திரைக்கு முன்னாலும் அவர்கள் நடிகர்களே எனும் பிரச்சாரத்தை..கைவிட வேண்டும்!

 மம்முட்டியின் உதவியும்..விமர்சகர்களும்!
சமீபகாலமாக தலைநிமிர்ந்து வரும், இன உணர்வாளர்கள்..வெறுமென வீம்புக்காக மம்முட்டியின் செயல்களை எதிர்க்காமல்..பெருந்தன்மை நமக்குமிருக்கிறது என காட்டவேண்டிய நேரம்!

தேர்தலுக்கு பலகோடிகள் செலவளிக்கும் அரசியல் சக்திகள்..தங்களின் சேமிப்பின் சிறுபகுதியை போட்டி போட்டுக் கொண்டு கொடுத்து..வாழ்விழந்த மக்களுக்கு சிறுநம்பிக்கையை ஊட்டலாமே! அதற்கு மம்முட்டியின் இச்செவை ஒரு தூண்டுகோலாக அமையட்டுமே!





கடந்த ஒரு வருட காலமாக, இரு மாநிலத்தவர் இடையே ஏற்பட்டு இருக்கும் மனக்காயங்களுக்கும், மம்முட்டியின் இச்சேவை ஒரு காரணமானால் அது பாராட்டுக்குரியதே!

Monday, September 3, 2012

மாத்தி யோசி!

 ஒவ்வொருத்தரும் தங்கள் கருத்தை, மத்தவங்களுக்கு பிடிக்குதோ..இல்லையோ போகுற போக்குல சொல்லிட்டுப் போறாங்க!அதை கொஞ்சம் மாத்தி யோசிச்சதுன்னால, வந்த வினைங்க இது! வேணும்னா ..நீங்களும் இதிலிருந்து மாத்தி யோசிங்களேன்!

இப்படித்தான்  சகோதர யுத்தம் பத்தி கலைஞர் அய்யா..பேசப்போயி, நம்ம நெடுமாறன் அய்யா..ஆரம்பிச்சு வெச்சதே நீங்கதான்னு பத்திரிக்கையில பேட்டி கொடுத்துட்டாரு!

சகோதர யுத்தம் நடந்தது உண்மைன்னு நெடுமாறன் ஒத்துக்கிட்ட மாதிரி அல்லவா ஆயிடுச்சு.!

இலங்கை விஷயத்துல கலைஞரை கும்முறது அல்லாருக்கும் அல்வா சாப்பிடற மாதிரி ஆனதினால..சரித்திர மேற்கோள் எல்லாம் காட்டி, இவரும் தாளிச்சிருக்கார்..!
அதுல பாருங்க..கலைஞர்
சொன்னதுனால தான் சகோதர சண்டை ஆரம்பிச்சதுன்னா..கலைஞரை இனத்தலவர்ன்னு ஏத்துக்கிட்ட மாதிரி அல்ல ஆகுது.? சண்டைய ஆரம்பிச்சு வெச்சவருக்கு முடிச்சு வைக்கத் தெரியாதா...வந்து பஞ்சாயத்து பேசி தீர்த்திருக்கலாமே?

இவரு சொல்ற தேதிக்கு முன்னாலயே, மெட்ராஸ் பஜார் வீதியில ஒருத்தர் மேல ஒருத்தர் கொளுத்திப் போட்டுக்கிட்டது....கலைஞர் அய்யா சொல்லிக் கொடுத்துங்களா நெடுமாறன் அய்யா?


பேராசிரியர் அன்பழகன் அய்யாக வேற கோபமாகி..எங்க ஆட்சியில தினமும் 2 மணிநேரம் தான் வெட்டு..வெளியில கரண்டு வாங்கி எப்படி சமாளிச்சோம்?அதுக்கே (கொ)கத்துனீங்க! இப்ப 12 மணிநேர வெட்டுக்கே வாய் மூடிமவுனியா இருக்கிறீங்களேன்னு..மக்கள் மேல கோவப்பட்டு இருக்காரு!

 ஆட்சி ஆரம்பிக்கும்போது அஞ்சாயிரமா இருந்த மின்வாரியக் கடன் முடியும்போது அம்பதாயிரம் கோடியாயிடுச்சே! வருஷம் வட்டியே அஞ்சாயிரம் கோடி கட்டணுமே! வட்டிய கட்றதா..கடனக் கட்றதா..புது உற்பத்திய பெருக்கிறதா..இப்படி நட்டாத்துல உட்டுட்டுப் போய்ட்டீங்களே..நியாயமா?அதெல்லாம் இருக்கட்டும்..அந்த கொண்டைக்கார ஆட்சிக்காரர் கிட்ட பேசி..நம்ம அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி வாங்கிக் கொடுங்க..அது போதும்!

மாத்தி யோசி!

உலகத்துலேயே சுலபமான வேலை எதுன்னு சொல்ல வேண்டியதில்ல..வெண்ணைய வெட்றது! அதவிட சுலபமான வேலை இருக்கு..அதான் 100நாள் வெட்டிவேலைத் திட்டம்!
அந்தகாலத்துல வறட்சி,வெள்ளம்,பூகம்பம் வந்தா..மக்களுக்கு சும்மா அரசுப் பணத்தைக் கொடுக்கக்கூடாதுன்னு "நிவாரண வேலை"ன்னு சொல்லி சின்ன சின்ன வேலைகளைக் கொடுத்து,சம்பளம்னு கொடுப்பாங்க..கொஞ்ச நாளைக்கு!

இந்த ஓட்டுவங்கி அரசியல்..ஜனங்களை ரொம்ப பதமா..இதமா கவனிச்சுக்கிது..இந்தமாதிரி திட்டங்கள்னால! எந்த ஒரு வேலைக்கும் குறைந்தபட்ச ஊதியம், இன்னிக்கு ரூ200ன்னு ஆயிடுச்சு..இந்தத் திட்டத்தினால வந்த பொதுப்பலன்..நற்பலன்னு சொல்லலாம்!

மழைகம்மியானதால..வேலை கிடைக்காதுன்னு முடிவு பண்ணி..100 நாளை 150ன்னு ஜாஸ்தியாக்கலாமான்னு பேச்சு ஓடிட்டு இருக்கு! ஏற்கெனவே..விவசாய வேலை இருக்கும்போது ஆளுங்க அரசு வேலைக்குப் போய்டறாங்க..ஆள் தட்டுப்பாடு..!
இன்னம் விவசாயமே செய்ய வேண்டாம்னு அரசு சொல்ற மாதிரியில்ல இருக்கு? எங்க பஞ்சமோ அங்க மட்டும் உசத்திட்டு, மத்த இடத்துல அப்படியே வெச்சுக்கலாமே!

இந்த அரசு 150நாள் பிக்னிக்கை ரோட்டோரத்துல வெக்கறதுக்கு பதிலா..விவசாயக் காட்டுல வெச்சுக்கிட்டா..விவசாயமும் நல்லா நடக்குமுல்ல..என்ன நான் சொல்றது..! மலையாள சேட்டன்க ஏற்கெனவே இப்படித்தான் பண்றாங்களாம்!


அரசு ரூ132,விவசாயி ரூ132 கொடுத்தா..அடா அடா..கிராமப்புற பொருளாதாராம் பிரமாதமா..பறக்குமே..செய்வீகளா..?

அம்மாவுக்கு ஐடியா இருக்குன்னு சொல்லிக்கிறாங்க..விரைசலா ஆர்டர் வரோணுமே!


அஸ்ராகார்க் எஸ்பி மூணே மாசத்துல திருப்பூரை விட்டு மாத்திட்டீங்க..நேர்மையான அதிகாரிங்க,ஆர்வக் கோளாறுல சின்னசின்ன குளறுபடிகள் செய்யறதுதான்..ஒரு வருஷமாவது ஒரு இடத்துல போட்டிங்கன்னா..கொஞ்சம் ஊரு சுத்தமாகும்.

மறுபடியும் சந்திப்போமுங்க! வணக்கமுங்கோ!













Saturday, August 18, 2012

என் பார்வையில்....!


ஒரு ஞானி..விஞ்ஞானியாகும் ஆவலை, பெருந்தீயிட்டுக் கொளுத்திப் போட்டாயிற்று!இதுவரை கண்டதில்லை...இது போல எதிர்ப்பை..அதுவும் நேரடியாக! எதிர் அம்புகள் எத்தனை வந்தாலும் அதை லாவகமாக சந்தித்து புறம் தள்ளியவர்..! தானும் உடன்பிறப்புகளின் மூலமும் பல கணைகளை,  இதுகாறும் தொடுத்துக் கொண்டிருப்பவர்..!

 நானும் இளமையானவன் என்று காட்டி கொள்ளவும், சமூக வலைதளங்களில் இளசுகளை தொடர்பில் வைத்திருக்கவும் கலைஞர்  சமூகவலை தளங்களான..முகநூல்,கீச்சர் களில் கணக்கு ஆரம்பித்தார்!


கிளம்பி வந்த விமர்சன அலைகளை தலைவர் இதுகாறும் கண்டிருக்க மாட்டார் போல...எதிர்ப்பே இல்லாமல் எழுத இது முரசொலியுமில்லை..திரைப்பட வசனமும் இல்லை என, "கண்டு கொண்டார்..கண்டு கொண்டார்"!

விலகினார்..விடை பெற்றாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

உடம்பிறப்பே..கொடுமதியாளர் அதை புறமுதுகு காட்டுதல் என்கின்றனர்...அது புறநானூறு என்பதை நீ அறிவாய்..! பாரடா என் செல்லமே எத்தனை விழுப்புண்கள் என்று!(என்னா அடி)!


என் பார்வையில்....!


 பள்ளி மாணவர் மரணங்கள்!

இந்தக் கொடுமைகள் தொடர்வது அழகல்ல..கும்பகோணம் பள்ளி தீவிபத்துக்குப் பின்னும், பள்ளிக் குழந்தைகள் படிக்கச் செல்லும் இடத்தில் பலியாவது மிகுந்த ஆற்றாமையைத் தருகிறது!

பள்ளிகள் பெருகி வந்தாலும், சில குறிப்பிட்ட பள்ளிகளில் பெற்றோர் போட்டி போட்டுக் கொண்டு மாணவர்களை சேர்ப்பதால், கும்பல் அதிகமாகி விடுகிறது. மாணவர்கள் மீதான கண்காணிப்பு மிகவும் குறைந்து விடுகிறது. 

கல்ல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கைக்  கட்டுப்பாடு வைப்பது போல் இனி பள்ளிகளிலும் அதன் வசதிகளுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கைக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட வேணும்!


ஈரோட்டு ராஜாவின் மேடைப் பேச்சு!

டெசோ மாநாட்டாலும், சந்தர்ப்ப வாதத்தாலும் தன் தலைவனின் மேல் தரக்குறைவான விமர்சனம் வருவதைக் கண்டு, ஆவேசப்பட்டு மறைந்த ஈழத் தலைவர்களின் மேல், சமீபத்தில் ஈரோடில் திமுகவின் முன்னாள் மந்திரி என்.கே.கே.பி.ராஜா கக்கிய வார்த்தைகள் கன்டனத்துக்குரியது!

அவர் பேசியதில் சில உண்மைகள் இருக்கலாம்..ஆனால் நொந்து நைந்து போன ஒரு சமூகத்தை, வதைப்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல!


 வடகிழக்கு மாநிலத்தவர் வெளியேற்றம்!

பர்மாவில் வங்க முஸ்லீம்கள் மீதான தாக்குதல்..அஸ்ஸாமில் நாலு மாவட்டங்களில் பரவி..பழிதீர்ப்பதற்காக பம்பாய் முஸ்லீம்களின் வன்முறைகளுக்கு தீனி போட்டு...தென் மாநிலங்களின் தலைநகரங்களை நம்பி வந்த வடகிழக்கு மாநிலத்தவரை, பதட்டமாக்கி கூண்டோடு வெளியேற்ற வைத்துள்ளது..!

இதன் பின்னால் ஒளிந்திருப்பது..அறிவியல் வளர்ச்சி...இணையமும்,கைப்பேசியும்! வதந்தி வைரஸ் கிருமிகளைத் தாங்கி விரைவில் பரப்புகின்றன!

இதில் இனி மத்திய அரசின் இலவசக் கைப்பேசித் திட்டம் வேறு! இதன் பின்னால் 2ஜி யின் அடுத்த கட்ட ஏலம் வேறு உள்ளது!


மழையின்மை!

பஞ்சம் என்பதே என்ன என்று தெரியாத நிலையில் நாடு சுபிட்சமாக் உள்ளது! விவசாயமும், தொழில்களும் அழிக்கப்பட்டுக் கொண்டுள்ளன! அதிகம் உழைக்காமல் அதிக வருவாய் வேண்டுவோர் அதிகரித்து விட்டனர்! கட்டிடத் தொழில் மட்டுமே செழித்து உள்ளது! 

நுகர்வுக் கலாச்சர்ரத்தின் பிடியில் மதிமயங்கித் திளைத்துக் கொண்டிருக்கும் மானுட இனத்திற்கு இயற்கையின் நியதிகளை நியாபகமூட்டம் வண்ணம்,,மழை பெய்யாமல் போகிறதோ!

கனிமவளக் கொள்ளை!

மாநிலத்தில் மணலும்.கிரெனைட் கல்லும்.!.மத்தியில் நிலக்கரி! நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆட்சியாளர் மேல் ஏற்கெனவே ஊழல் கறை!

முதலில் சொத்துக்களைப் பறிமுதல் செய்து விட்டு, பிறகு வழக்குகளை நடத்த வேண்டும்! இனிவரும் ஊழல்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாக வேண்டும்!
"Pending inquiry seizures are must!

மம்தாவின் பேச்சு!

போராளி இமேஜைத் தனக்குக் கொடுத்துக் கொள்ள போராடும், மமதா தீதி முரட்டு அராமியாகத் தெரிகிறார்! தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்ட விவசாயிக்கு, ஜாமீன் மறுப்புக் கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றத்தையே," தீர்ப்புகள் விலைபோகிறது" என்று வர்ணித்தமை..தான் தலைவி அல்ல ..தவளை தான் என நிரூபிக்கிறது!

நீதிமன்ற அவமதிப்பு  செய்த தீதி மேல் நடவடிக்கை இல்லையெனில்..அது மேற்கோட்டுத் தனமாகிவிடும்..இனிமேல் வரும் இது போன்ற வழக்குகளுக்கு..இதுவே உதாரணமாகிவிடும்! யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்றாகிவிடும் . சொல்லமுடியாது..நீதிமன்ற விமர்சனம் தவறில்லை என்று தீதி சட்டம் போட்டாலும் ஆச்சரிமில்லை!

 மீண்டும் வருகிறேன் !