Tuesday, April 3, 2012

பொறாமை எரி எண்ணெய்!

 பொதுவா பொறாமை ஒவ்வொரு மனுஷருக்குள்ளும் ஒளிந்திருக்கும் கண்டிப்பாக!..சிலரிடம் மறைவாக..பலரிடம் வெளிப்படையாக!

கோபமாக, துரோகமாக, யேச்சுகளாக, நக்கல்களாக, வஞ்ச்சப்புகழ்ச்சிகளாக பல்வேறு ரூபங்களில் வெளிப்படும்!

தகுதிகளை ஏற்றுக்கொள்ள, உரிய மரியாதையை தர மறுக்கும்..!

நட்புகளில் நளினமாக இருக்கும் இது ..எதிரிகளிடம் முறுக்கமாகும்!

பிறந்த உறவுகளில் கசியும் ஊதுபத்தியாகவும் ..
புகுந்த உறவுகளில் மெழுகுவத்தியாக ஆரம்பித்து தீப்பந்தமாகும் ...!
தீய்ந்த பந்தமாக்கும்!

 பொறாமை எரி எண்ணெய்!

பெரும்பாலும் தனக்கு மிஞ்சியவரையும்,போட்டியாளரையும் அதிகமாகத்
தாக்கும் இந்தத் தீ ...எளிவரையும் விட்டுவைக்காது!


மிக நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்கின், மிஞ்சியவரிடம் மனதில் ஏசிக்கொண்டு, வெளியில் காலிடைவால் பைரவராக ஒளிந்து கொள்ளும்!   மோதுவதால்  தனக்கு ஏற்படும் ஆபத்தை எண்ணி குலைத்து விட்டு ஒதுங்கிக் கொள்ளும்!


எளியவரை தனக்கு மிஞ்சாமல் பார்த்துக் கொள்ளும்..!


முழுத்திறனும் கொண்டு மோதி நாசம் விளைவிப்பது ..சகவர்க்கத்தினரையும், தம்மை அடக்குவோரையும், தமக்கு அடங்காதோரையும்! போட்டியாளரையும், தனக்கு உதவியோரையும், கருத்தில்,அழகில்,ஆளுமையில் மாறுபட்டோரையும் கூட விட்டுவைப்பதில்லை!


இது பொதுவாக சோம்பேறிகளின் ஆயுதம் எனலாம்! உழைப்பவரிடமும் இது இருக்கும்..ஆனாலும் அங்கே அது அவனை மேலும் உழைக்கத் தூ ண்டுமே அன்றி யாருக்கும் துரோகம் இழைக்காது!


உழைப்பவனுக்கு லட்சியத்தோடு சற்று பொறாமையும் வேண்டும் !
லட்சியம் இலக்கெனில், பொறாமை எரி எண்ணெய்!


பொறாமையே ஆசைக்கு அடிப்படை! 
ஆசை நம்மை ஊர் சேர்க்கும்!
பேராசை ஆளை அடித்துவிடும்!


உழைப்பெனும் வாகனத்தில் ஏறி 
பொறாமை எனும் எண்ணையை எரித்தால் 
லட்சியம் எனும் இலக்கடையலாம்!





சிலசமயம் கையாலாகாத் தனமும் பொறாமையைத் தரும்!

11 comments:

  1. மாப்ள இயலாமையே பொறாமைக்கு காரணம்!

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது மிகச் சரி
    எரி எண்ணை என்கிற சொல் மனம் கவ்ர்ந்தது
    கருவும் சொல்லிச் சென்ற விதமும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அது கூட அதிக ஆபத்தில்லாதது..வயிற்றெரிச்சலில் வரும் பொறாமை அழிக்கவல்லது! நன்றி மாம்ஸ்!

    ReplyDelete
  4. Preethy!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! நண்பரே!

    ReplyDelete
  5. பெண்ணின் ஐடியில் வேலைபார்த்துக் கொண்டிருக்கும்போதே
    பதிவு செய்துவிட்டேன் என நினைக்கிறேன்
    புரிந்து பதில் பின்னூட்டமிட்டது கண்டு ஆச்சரியம் கொண்டேன்

    ReplyDelete
  6. ரமணி சார்! எழுத்துகளில் பழக்க வாசனை அடித்தது!ஓரளவு யூகித்தேன் என்றே சொல்லலாம்! இதுதான் அலைவரிசை என்பதோ!

    ReplyDelete
  7. வணக்கம் நண்பரே..
    ஒரு மாத அளவுக்குப் பின் இன்றைய பதிவில்
    தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

    பொறையுடைமையை கருவாகக் கொண்டு
    படைத்திட்ட அழகான பதிவு நண்பரே..

    ReplyDelete
  8. மகேந்திரன் Sir,

    பொறையுடைமை எனும் வார்த்தையை அறிமுகப்படுத்தியமைக்கும்,கருத்துகளுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  9. //தகுதிகளை ஏற்றுக்கொள்ள, உரிய மரியாதையை தர மறுக்கும்..!

    நட்புகளில் நளினமாக இருக்கும் இது ..எதிரிகளிடம் முறுக்கமாகும்!//

    அருமையான வார்த்தைகள்.

    பொறாமை கொடிய நஞ்சு அதை பிஞ்சிலேயே கிள்ளியெறிய வேண்டும்

    ReplyDelete