Tuesday, September 13, 2011

நெஞ்சே நெஞ்சே! பதைக்காதே!


 காண்பவை யாவும் தேன்!

கனவில் தான் நடக்கும்!

இயல்பில் நேற்றைய ஜொலிப்பும்,
இன்றைய கவர்ச்சியும் சாஸ்வதமல்ல!

கனவுலகம் என்பது மாய உலகம் தான்!

இங்கு அது மீண்டும் ஒரு முறை நிரூபணம்!





 நாம் மட்டுமே

நம்மைச் சார்ந்தோர் மட்டுமே

நம்மைக் கவர்ந்தது மட்டுமே

வாடா மலர்களெனும் நினைப்பு

இனிமையானது!

நம் நினைவுகள் கனவுகளானதேனோ?


காலம் முகத்தில்
வரையும் கோலம்
இயற்கையெனினும்
மனதோடு மட்டும்
தோற்றுவிடுவதேன்!

விட்டுப்பிரிந்த தோழமையின்
புதியப் பரிமாணம்
காண நேர்கையில்
நெஞ்சு பதைப்பதேன்?

1 comment:

  1. மாப்ள அந்த 16 வயதினிலே இப்போ 61 வயதினிலேவா!

    ReplyDelete