Saturday, September 3, 2011

அச்சு வெல்லமே! அச்சு வெல்லமே!


 வாழ்வில் சுவையானது இளமை!
சுவையில் சிறந்தது இனிப்பு!

இளமைப் பருவம் மாறியும், தொடரும் ஆசைகளில் இனிப்பும் ஒன்று! சுவைக்கத் தடைகள் உருவாகினும் இனிப்புச் சுவையின் மேல், உள்ள அபிமானம், ஜீவனோடு கலந்தது!

பீட்ரூட், மக்காச் சோளத்திலிருந்து எடுக்கப் பட்டாலும், கரும்புச் சர்க்கரையே, பாரம்பரியமானது!எளிது!அதிக அளவில் கிடைக்கக் கூடியது!



ஆலையில் தயாராகும் வெள்ளைச் சர்க்கரையாகினும், கிராமங்களில் வயலில் தயாராகும், வெல்லம்/சர்க்கரையாகினும், மிகக் குறைந்த அளவு வேதிப் பொருட்களே, தயாரிப்பின் போது, சேர்க்கப் படுகின்றன! 1 சத அளவிற்கும் குறைந்த அளவு, சல்பர் மட்டுமே பல்வேறு பகுப்புகளாக, கரும்புச் சாற்றில் சேர்க்கப் படுகிறது!
அதுவும் அழுக்கை நீக்கவே உபயோகிக்கப்படுகிறது!


கரும்பு பிழியப்பட்டு கிடைக்கும் சாறு!


சர்க்கரை எடுக்கப் பயன்படும் கரும்பு,ரோட்டோரங்களில் கரும்புச் சாறு கடைகளில், அரைக்கப்படும் அதே வெள்ளைக் கரும்பே! பொங்கல் சமயங்களில் உபயோகிக்கும், தடியான கறுப்பு நிற்க் கரும்பு, நேரடி உபயோகத்திற்கு மட்டுமே!

இங்கு அச்சு வெல்லம் தயாரிக்கப்படும் முறை காட்சிகளுடன்!



சாறு சுமார் 2000லிட்டர் அளவு சேர்ந்ததும், கொப்பரையில் ஊற்றப்பட்டு, காய்ந்த கரும்புச் சக்கைகளைக் கொண்டு எரியூட்டப்படுகிறது! கொதிக்கும் போது அழுக்கு நுரையாகப் பொங்கி வரும்! அதனை சல்லடைக் கரண்டி கொண்டு அள்ளி அகற்றி விடுவார்கள்! சுமார் இரண்டரை மணி நேரம் எரிக்கப்பட்ட சாறில் இருந்து, தண்ணிர் ஆவியாகி,வெல்லப்பாகு தயார்!

 


தயாரான வெல்லப் பாகு கொப்பரையிலிருந்து, மரத் தொட்டிக்கு மாற்றப்பட்டு, வாளியில் எடுக்கப்பட்டு அச்சில் வார்க்கப் படுகிறது! சுமார் 15 நிமிட நேரம் கழித்து, அச்சைக் கவிழ்த்து தட்டினால், மைசூர்பா கணக்காக, அச்சு அச்சாய் வெல்லங்கள்!

தமிழகத்தில் இவை பெரும்பாலும் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் தயாரிக்கவே பயன் படுகிறது! பயன்பாடு அதிகம் இருப்பது பக்கத்து மாநிலம் கேரளத்தில் தான்! தினசரி சமையலில் ஏதாவது ஒரு வகையில் வெல்லத்தின் உபயோகம் உண்டு, அங்கே!


ஹோம்மேட் ஆல்கஹால் தயரிக்கும்வரை, நாட்டு வெல்லத்தின் தேவை இங்கேயும் அதிகமாக இருந்தது!

விவசாயிகளுக்கு அது ஒரு பொற்காலம்!

பூங்காற்றுத் திரும்புமா?

5 comments:

  1. திரும்பனும் மாப்ள...அதான் நம்மோட எதிர்பார்ப்பும்!

    ReplyDelete
  2. மாமு!

    நாட்டுச் சரக்கின் ருசியே தனி தான்!

    நினைவுகள் நெஞ்சினில் சுமந்தோமே!

    ReplyDelete
  3. படங்களுடன் அச்சு வெல்லம் தயாரிப்பு குறித்து
    மிக அழகாகப் பதிவிட்டிருக்கிறீர்கள்
    எனக்கு அந்தக் கரும்புப் பால் பார்த்ததும்
    சிறுவயதில் அதற்காகவே வயல் வெளியில்
    வெகுதூரம் பட்டறை போட்ட இடத்துக்கு
    நடக்கும் நினைவு வந்து போனது
    நகரத்தில் வாழ்வோருக்கு ( என் குழந்தைகளுக்கும்தான்)
    இதுவித்தியாசமானதாக அதிசயமானதாகப் படும்
    படங்களுடன் பதிவும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ரமணி சார்!

    கரும்புப் பால் ஜீரணமாக அதிக நேரம் ஆகும்!குடிக்க ருசியாக இருந்தாலும், வயிறு முட்டக் குடித்தால் ,சிறுநீர் பிரிய அதிக நேரம் பிடிக்கும்! பிழியும்போது எலுமிச்சை, இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை சிறிது அளவு சேர்த்தால், வாயுத் தொல்லை இராது!

    ReplyDelete